என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் 11-ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் 11-ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    அதிமுக தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் 11.1.2025–சனிக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலயதுகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதிமுக தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியிடுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×