என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி செய்ய தமிழக அரசு முற்பட வேண்டும்.
    • இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாழும் நாடார் சமுதாய மக்களுக்கு போதிய கல்வித் தகுதி இருந்தும் அரசு பதவியில் முன்னுரிமை கிடைப்பதில்லை.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆனால் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுதான் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

    மத்திய அரசு மீது பழிபோட்டு சமூக நீதியை புறக்கணிக்க நினைக்கும் எண்ணத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சமூக நீதியை காப்பாற்றிட, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி செய்ய தமிழக அரசு முற்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    • பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது.

    மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பள்ளியின் தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, பள்ளித் தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் செழியன் மற்றும் முதல்வர் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் என்பவர் மேற்படி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி என்பவரிடம் அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மேற்படி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் மேற்படி 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்), 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாணளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கு தொடர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1-வது எதிரி வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

    மேலும், காவல்துறையினர் இல்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடணடியாக ஐந்து எதிரிகளையும் கைது செய்தும், மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப் அவர்களின் உத்தரவுடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது. அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது.

    பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
    • தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை- பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாடவேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பின்னரும் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    நல்லத் தீர்ப்பு வருமென நம்பிக்கையோடிருப்போம்.

    சமஸ்கிருதத்தை தேவமொழி என நம்பும் சங்கப் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றால், தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    அரசமைப்புச் சட்டம் வழங்கும் அந்த உரிமையை நீதிமன்றம் பாதுகாக்குமென நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.



    • பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன.
    • இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.

    கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி தந்த அதிர்ச்சி நீங்கும் முன்னரே, இன்று ஒரு நாள் காலையில் மட்டும், மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள், வேலூரில் ரெயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அவலம், சேலத்தில், அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், திருப்பத்தூரில் வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை என பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன.

    எங்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம்? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப, கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது.

    பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று கூறியுள்ளார். 



    • ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி என்ற திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.
    • சம்பந்தப்பட்டவர்கள் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை குரோம்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கிருஷ்ணகிரி, மணப்பாறை பள்ளி மாணவிகள் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி என்ற திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம். இருந்தாலும் சில நேரத்தில் பிள்ளைகள் மனதில் உள்ள பய உணர்வு காரணமாக வெளியே சொல்லாமல் இருக்கக்கூடிய நிலை இருப்பதால் தான் ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, 800-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் மீறி இப்படி நடக்கும்போது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். டிஸ்மிஸ் செய்வது, கடுமையான தண்டனைகள் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி அவர்களின் கல்வித்தகுதியை ரத்து செய்ய வேண்டும். இனிமேல் எதற்கும் செல்ல முடியாத அளவிற்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

    இனிமேல் தண்டனையோடு மட்டும் நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • தங்கவேல் என்னை அணுகி, நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 63 லட்சம் தேவைப்படுகிறது என்றார்.
    • இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை எனக்கு திரும்ப தந்துவிட்டார்.

    மதுரை:

    தஞ்சாவூரை சேர்ந்த முகமது அப்துல் காதர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றேன். நானும், தஞ்சாவூர் அருகே உள்ள கரம்பயம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் தங்கவேல் என்பவரும், நானும் நட்பாக இருந்து வந்தோம்.

    இந்நிலையில் தங்கவேல் என்னை அணுகி, நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 63 லட்சம் தேவைப்படுகிறது. இந்தத் தொகையை கொடுத்தால் அசலையும் லாபத் தொகையும் சேர்த்தும் தருகிறேன் என்றார்.

    இதனை நம்பி, நண்பரின் உதவியுடன் அந்த தொகையை அவரிடம் கொடுத்தேன். இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்தை எனக்கு திரும்ப தந்துவிட்டார். மீதமுள்ள தொகையை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தேன், நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தங்கவேல் கொடுத்த பொய் புகாரின் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி வருகின்றனர்.

    எனவே என்னை ஏமாற்றி தொடர்ந்து மிரட்டி வரும் தங்கவேலு மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முறையான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி தனபால் முன்பாக இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கலந்தர் ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதம் என வாதாடினார்.

    விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள 7 மாடிகளை கொண்ட ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் ரூ.84 கோடியே 17 லட்சத்தை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இந்த நிதியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்துக்கு வழங்கினார்கள்.

    பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் உதவி மையம், வழிகாட்டி தகவல் மையம், சிற்றுண்டி அறை, காத்திருப்போர் அறை என புதிய கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தரத்துக்கு உயர்த்தி உள்ளார். வடசென்னை வளர்ச்சி என்ற வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு வழிகளில் நிதி உதவி அளித்து வருகிறது.

    அந்த வகையில் இந்த மருத்துவமனையின் கட்டமைப்புக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.84 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிதி ஆதாரம் ஒரே பணிக்காக அளிக்கப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மார்ச் 1-ந் தேதி முதலமைச்சரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி வருகிற 28-ந் தேதி இந்த ஆஸ்பத்திரி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா பருவ காலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயற்கையானதுதான்.

    தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ச்சியாகவே கட்டுக்குள் உள்ளன.

    டெங்கு பாதிப்பு 2 முறை அதிக அளவில் இருந்தது. 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இது தான் அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.

    வடசென்னைக்கான வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகளின் சார்பிலும் தொடர்ச்சியாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரி 860 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்து வமனையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இது வடசென்னை பகுதி மக்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். இந்த ஆஸ்பத்திரிக்கு 102 டாக்டர்கள், 236 நர்சுகள், 79 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 240 தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    மேயர் பிரியா, சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவ லர் சிவஞானம், தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் அருண், தம்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மாதா ஜெயக்குமார் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
    • மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதா ஜெயக்குமார் (வயது 34). இவர் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.

    பின்னர் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு உள்ள வங்கி கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், வடகரை எடோடி கிளைக்கு புதிய மேலாளர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அங்கு தணிக்கை நடைபெற்றது.

    அதில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26.8 கிலோ நகைகள் போலியாக வைத்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் வங்கி மேலாளராக இருந்த மாதா ஜெயக்குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பேற்காமல் தலைமறைவானார்.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அந்த நகைகளில் சிலவற்றை தன் நண்பரான திருப்பூர் சந்திராபுரம் கேஎன்பி., காலனி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரிடம் கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து மாதா ஜெயக்குமாருடன் திருப்பூர் வந்த கேரள போலீசார் தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் ஆய்வு செய்தனர். அங்கு 4.6 கிலோ நகையை மீட்டனர்.

    இந்தநிலையில் இன்று கேரளாவில் இருந்து வந்த சிறப்பு தனிப்படை போலீசார் வங்கியில் மீண்டும் சோதனை நடத்தினர். மாதா ஜெயக்குமார் லாக்கரில் வைத்துள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் கள ஆய்வு பயணத்தை நேற்று தொடங்கினார்.

    இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.

    அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.

    தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.

    இதனிடையே, நெல்லை வரும் முதலமைச்சர் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின.

    அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். அப்போது முதலமைச்சரும் நேரம் ஒதுக்கி உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் முதலமைச்சர் அரசு விழாவுக்குப்புறப்படும் போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், இருட்டுக்கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை.! என்று கூறியுள்ளார். 



    • தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
    • பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் சென்னையில் பேரணியாக செல்ல சீமான் முடிவு செய்து உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் சென்னையில் பேரணியாக செல்ல சீமான் முடிவு செய்து உள்ளார்.

    மார்ச் 1-ந்தேதி இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் வெளி மாவட்டங்களில் பேரணியை நடத்தலாமா என்பது பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் ஆலோசித்து வருகிறார்கள்.

    • விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி?

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.

    பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.

    மு.க.ஸ்டாலின் அவர்களே- பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.

    ஒரு 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்.

    உங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி?

    மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.

    எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    ×