என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூர் பட்டீசுவரர் கோவில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
    • தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை- பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாடவேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பின்னரும் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    நல்லத் தீர்ப்பு வருமென நம்பிக்கையோடிருப்போம்.

    சமஸ்கிருதத்தை தேவமொழி என நம்பும் சங்கப் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றால், தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    அரசமைப்புச் சட்டம் வழங்கும் அந்த உரிமையை நீதிமன்றம் பாதுகாக்குமென நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.



    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவையை அடுத்த பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவமும், வெள்ளை யானை சேவை நடந்தது.

    இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பட்டீசுவரர்- பச்சைநாயகி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடு நடந்தது. மாலை 4 மணியளவில் பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் பச்சை நாயகி, அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தேரோட்டத்தையொட்டி பேரூர் சின்ன கோவில் வீதியில் முத்துசிற்பி நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சிற்பி ஜெகன், பேரூர் முத்துதாமரை சக்திவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பேரூர் தேவேந்திர குல வேளாளர் சமூக மட அறக்கட்டளை சார்பில் பேரூர் பட்டீசுவரர் பெரிய தேருக்கு அணிவிக்கும் புதிய அலங்கார துணி மற்றும் குடைகள் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
    பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர், பேரூர் பட்டீசுவர் கோவிலுக்கு எதிரே உள்ள நாற்று நடவு வயலில் சிவனும், பார்வதியும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினராக வேடம் தரித்து, உலக மக்கள் நன்மை பெற வேண்டி நாற்று நடவு செய்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்அடிப்படையில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந்தேதி பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள அம்மன் மண்டபத்தில் தொடங்கியது.

    அப்போது பட்டீசுவரர்-பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கலச பூஜை, அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றன.

    இதனைதொடர்ந்து பேரூர் கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்தில் நெல் விதைகள் பதியம் செய்யப்பட்டது. இங்கு 8 நாட்களாக தினசரி மாலை நேரத்தில் நெல் விதைகளுக்கு நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


    விழாவில் காளைகளை கலப்பையில் பூட்டி நிலத்தை உழுவதை படத்தில் காணலாம்.

    இதனையடுத்து நேற்று மதியம் 2 மாடுகள் கலப்பையில் பூட்டப்பட்டு பொன்னேறு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அந்த மாடுகள் நேராக நாற்று நடவு வயலுக்கு கொண்டு வரப்பட்டு ஏர் உழுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஈஸ்வரர்-அம்மாள் பல்லக்கில் எழுந்தருளினர். பின்னர் மண்டபத்தில் இருந்த விதை நெல் நாற்றுகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பேரூர்கோவில் குருக்கள் வயலில் இறங்கி நாற்றை நட்டார். இதனையடுத்து தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த ஊர் பட்டக்காரர்கள், பெண்கள், ஆண்கள் பலர் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்றுகளை நட்டனர். நாற்று நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சுவாமி எழுந்தருளி இருந்த மண்டபத்தில் பள்ளுபடலம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. அதன் பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

    இந்த நாற்றுநடும் விழாவை முன்னிட்டு, மதியம் 3 மணிக்கு மேல் இரவு 7 மணிவரை பேரூர் கோவில் வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. 
    ×