என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது.
    • வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள்.

    நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து டிராக்டரை காப்பாற்ற போலியாக சாமியாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர், கடனாக டிராக்டர் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொகையை சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டிராக்டரை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். இதை அறிந்த விவசாயி குடும்பத்து இளம்பெண் திடீரென சாமி வந்ததுபோல ஆடத் தொடங்கினார். அவர் கைகளில் குங்குமத்தை பூசிக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களை நோக்கி, வண்டியை எடுக்காதே, எடுத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று சாபமிட்டாள்.

    வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது. வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள். இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ரசித்துள்ளனர்.

    • சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

    கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தண்டவாளத்தில் மிகப்பெரிய 2 சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
    • ரெயில்கள் கவிழ்ப்பு முயற்சி சம்பவம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிவானி-பிரயாக்ராஜ் இடையே காளிந்தி விரைவு ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததை கவனித்த அந்த ரெயிலின் ஓட்டுநர் அவசரமாக பிரேக்கை இயக்கி ரெயிலை நிறுத்த முயன்றார்.

    எனினும் ரெயில் நிற்பதற்கு முன்பு அந்த சிலிண்டரின் மீது மோதியது. இதில் தண்டவாளத்தைவிட்டு அந்த சிலிண்டர் தூக்கியெறியப்பட்டது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 8.20 மணிக்கு தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்றனர். ரெயில்வே பாதுகாப்புப் படை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில், 4 முதல் 5 கிராம் அளவிலான வெடி மருந்து, திரி, தீப்பெட்டிகள் ஆகியவை இருந்தன. அந்த விரைவு ரெயிலைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் உள்பட 6 பேரை கான்பூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரெயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக விசாரிக்க காவல் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), உத்தரபிரதேச பயங்கரவாதத் தடுப்பு பிரிவும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. அதுபோல, மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணை மேற்கொள்ள கான்பூர் காவல்துறையும் தீர்மானித்துஉள்ளது.

    இந்த நிலையில் ராஜஸ்தானிலும் ரெயில் ஒன்றை கவிழ்க்க முயற்சி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு என தனி பாதை உள்ளது. அந்த வழித்தடத்தில் சர்தானா-பங்கர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது தண்டவாளத்தில் மிகப்பெரிய 2 சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை கண்டதும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். என்றாலும் ரெயில் அந்த சிமெண்டு பலகை மீது மோதி நின்றது. அந்த 2 சிமெண்டு பலகைகளும் தலா 70 கிலோ எடை கொண்டதாக இருந்தது. ரெயிலை கவிழ்க்கும் சதி திட்டத்துடன் அந்த சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வட மாநிலங்களில் உள்ள ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ரெயில்கள் கவிழ்ப்பு முயற்சி சம்பவம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹதுல்லா கோரி அண்மையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவில் ரெயில் விபத்துகளை ஏற்படுத்தும் சதித் திட்டம் குறித்து அவர் பேசியிருந்தார். எனவே, சமீபத்திய ரெயில் விபத்துகள் பற்றி இந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 14 ஐ.எஸ். பயங்கரவாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே மோதல் ஏற்பட்டது
    • இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரெயில் இந்த வார ஆரம்பத்தில் செப்டம்பர் 2[திங்கள் கிழமை] தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ரெயிலை மேற்கு மத்திய ரெயில்வே, வட மேற்கு ரெயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன் லோகோ பைலட்களும் ரெயிலை இயக்க உத்தரவு வந்த நிலையில் தினமும் யார் ரெயிலை இயக்குவது என்பதில் இந்த மூன்று டிவிஷன் ரெயில் லோகோ பைலட்கள் இடையே தினமும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆக்ரா மற்றும் கோட்டா ரெயில்வே டிவிஷன் லோகோ லோகோ பைலட்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடுமையான சண்டை மூண்டுள்ளது.

    இதில் ஒரு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தாக்கப்பட்டு அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டது. மேலும் கார்டு ரூமின் போட்டு உடைக்கப்பட்டு கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் பிரச்சனைக்கு இன்னும் ரெயில்வே தீர்வு காணவில்லை என்று தெரிகிறது. 

    • கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார்.
    • கோபமடைந்த அந்த மாணவிகள் கடை உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடிக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம் திட்வானா பகுதியில் உள்ள குச்சுமான் நகரில் மொபைல் கடை உள்ளது. சில பள்ளி மாணவிகள் ரீசார்ஜ் செய்ய அங்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார். போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம் "ஐ லவ் யூ" என்று கூறி அவர்களை தொந்தரவு செய்தார். அதுமட்டுமின்றி சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்டார்.

    இதனால் கோபமடைந்த அந்த மாணவிகள் கடை உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 'அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்'
    • '1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் மஹாராணா பிரதாப்.'

    முகலாய மன்னர் அக்பரைக் குறித்து பெருமையாக விவரிக்கும் பாடபுத்தகங்கள் தீயிலிட்டு எரிக்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தடாலடியாக தெரிவித்துள்ளார். உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அக்பரை அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்.

     

    மஹாராணா பிரதாப் மக்களின் பாதுகாவலராக இருந்தவர். ஆனால் அக்பர் தனது சொந்த நலனுக்காக மக்களை கொலை செய்தவர். அப்படிப்பட்ட அக்பரை சிறந்தவர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் பெருமையாக குறிப்பிடுபவர்களை விட பெரிய எதிரி மேவார் ராஜ்யத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இருக்க முடியாது. [மாநிலத்தின்] எல்லா வகுப்புகளின் பாடப் புத்தகங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம், இதுவரை எந்த புத்தகத்திலும் அப்படி [அக்பரை சிறந்தவர்] குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த புத்தகங்கள் தீயிலிட்டு எரியூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மஹாராணா பிரதாப் சிங் மேவார் ராஜ்யத்தின் போற்றப்படும் அரசர்களுள் ஒருவர் ஆவார். 1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் அவர். இதற்கிடையே, இந்து முஸ்லீம் ஒற்றுமையை அதிகம் வலியுறுத்தி புனித பயண வரி நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்பரை குறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கூறியுள்ள கருத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

    • ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தெலங்கானா தலைநகர் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த 6E-7308 இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    விமானத்திலும், பயணிகளிடத்திலும் முழுமையான சோதனை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானம் தனது பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.
    • கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோலாயத்தில் உள்ள ஒரு வீட்டில் திருட சென்ற கொள்ளையர்கள் உதவிக்கு போலீசாரை அழைத்து கைதான சம்பவம் நடைபெற்றது.

    கோலாயத்தில் வார்டு எண் 10-ல் அமைந்துள்ள மதன் பரீக் என்பவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 2 மணியளவில் திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் பரீக் அருகில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைடுயத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனைக் கண்ட திருடர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து தப்ப முயன்றனர். ஆனால் ஜன்னலை உடைக்க முடியாததால் செய்வதறியாது தவித்தனர். வெளியே சென்றால் பொதுமக்கள் கையில் சிக்கினால் அவ்வளவுதான் என உணர்ந்த அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடர்கள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார்.
    • உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. சுமார் 14 மாதங்களாக குழந்தை கடத்தியவருடன் வளர்ந்த நிலையில், தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்தது. பின் குற்றவாளியும் அழுதார்.

    ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த புதன்கிழமை அன்று குழந்தையையும், கடத்தியவரையும் கண்டுபிடித்தனர்.

    கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்தியதாக கூறப்படுகிறது. கைதான தனுஜ் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். அவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். ஆனால் தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தனுஜ் முன்பு உ.பி காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் இருந்தவர் என்பதால் போலீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த அவர், தலைமறைவாக இருந்த காலத்தில் மொபைல் போனை பயன்படுத்தவில்லை.

    பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இருப்பினும் காவல்துறையினரின் தீவிர தேடலுக்குப் பிறகு தனுஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நிபோல் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 202 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இதனால் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    பாலத்திற்கு மேல் ஆற்று நீர் சென்ற நிலையிலும் ஆபத்தை உணராமல் பல லாரிகள் பாலத்தை கடந்து வந்தன. அப்போது பாலத்திற்கு மேல் வந்த லாரி ஒன்று நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

    அப்போது லாரி ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
    • கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் அனுஜ். அவர் ஆகஸ்ட் 18-ந்தேதி அன்று தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் மலைக்கு சென்று இருந்தார். அந்த இடத்தில் அனுஜ்ஜை கண்காணித்த சிலர் அவரது உடையை பார்த்து, அவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று கருதி, அவரை கடத்த முடிவு செய்தனர்.

    அவரை அணுகி வாயில் டேப் ஒட்டி, கை, கால்களை கட்டி, கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்கள் அவரை காரில் அழைத்துச் சென்றனர். அவரது நண்பரை தாக்கி வழியிலேயே இறக்கி விட்டனர்.

    வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு, போலீசார் அவரது நண்பர் சோனியை விசாரித்து, ட்ரோன்களை பயன்படுத்தி நஹர்கர் மலைகளில் சோதனை செய்தனர்.

    இதற்கிடையில், அனுஜின் பெற்றோருக்கு கடத்தல்காரர்களிடமிருந்து போன் வந்தது. அவர்களது மகனை விடுவிப்பதற்காக அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கேட்டனர்.

    அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், பணம் திரட்ட அனுஜ் பெற்றோர் அவகாசம் கேட்டனர்.

    கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து அனுஜ் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடத்தல்காரர்களின் போன் கண்காணிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது.

    ஒரு நாள் கடத்தல்காரர்கள் மீண்டும் அனுஜ் குடும்பத்தை அழைத்து பணத்தை கொண்டு வந்து கல்கா-சிம்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பெட்டியில் உட்காருமாறு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன. தரம்பூர் ரெயில் நிலையம் அருகே பணப்பையை வீசி எறியுமாறு கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, அங்கு காத்திருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டவர் வீரேந்திர சிங் என்ற மென்பொருள் பொறியாளர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடிவருகின்றனர்.

    இறுதியாக ஜெய்ப்பூர் காவல்துறையினரால் ஆகஸ்ட் 27-ந்தேதி அனுஜ் மீட்கப்பட்டார். அவர் ஒரு ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீசார் அவரை மீட்டனர்.

    அனுஜ் எழுந்திரு... எழுந்திரு... ஜெய்ப்பூர் போலீஸ் என்று கூறுகின்றனர்.

    அனுஜ் ஹாய்... ஹலோ... என்று கை அசைக்கிறார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் அனுஜ் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை மீட்க தாங்கள் இருப்பதாகவும் போலீசார் அவரை எழுப்புவதையும் காணலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார்.
    • தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.

    காதலியின் குடும்பத்தாரிடம் இருந்து தப்பிக்க ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் எல்லை தாண்டிய பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது வாலிபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று உள்ளூர் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

    அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், ஜாக்சி கோலி தனது காதலியை ரகசியமாக சந்திக்க சென்றுள்ளார். அப்போது, காதலியின் குடும்பத்தாரிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவர் கூறியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணை தொடரும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

    ×