என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
    • ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்

    ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இது மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

     

    சுசீலா மீனாவின் பந்துவீச்சு திறனை பார்த்து வியந்த சச்சின் அவரின் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணியை ஒப்பிட்டு எழுதினார்.

    ஹைலைட் என்னவென்றால் இந்த பதவிக்கு ஜாகீர் கானும் பதில் அளித்துள்ளார். தனது பதிவில் ஜாகீர் கான் கூறியதாவது, நீங்கள் அதை [சிறுமியின் பந்துவீச்சு பாணியை] கவனித்தரிந்துள்ளீர்கள், அதை நான் முற்றிலும் ஏற்கிறன், அவளது விளையாட்டு மென்மையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது, ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

     

    • 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது.
    • லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூர் அருகே பங்ரோதா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அங்கு இன்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

    அப்போது ரசாயனம் ஏற்றி இருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அப்போது அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கியாஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    2 லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்த தீ கியாஸ் லாரி மீது பரவியது. இதனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    அந்த தீப்பொறிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற டேங்கர் லாரிகள் மீது விழுந்தன. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுக்க தீப்பிடித்து எரிந்தது போன்று மாறியது.


    லாரிகளில் பிடித்த தீ பெட்ரோல் பங்குக்கும் பரவியது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது. இது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்தது.

    லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருந்தவர்களும், டேங்கர் லாரி டிரைவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அலறியடித்து உயிர் பிழைக்க ஓடினார்கள்.

    இந்த கோர தீ விபத்து இன்று காலை 5.30 மணி யளவில் நிகழ்ந்தது. ஏற்க னவே பனிப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் அடர்புகை இருந்தது. தீப்பு கையும் சேர்ந்து கொண்ட தால் டேங்கர் லாரி டிரை வர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

    40-க்கும் மேற்பட்டவர் கள் புகை மூட்டத்துக் குள்ளும், தீப்பிடித்த லாரி களுக்கும் சிக்கிக்கொண்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதி களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு மீட்பு பணிகள் நடந்தன. அப்போது 8 பேர் கருகி பலியாகி இருப்பது தெரிய வந்தது.

    தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர் களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு ஜெய்ப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரி களில் பிடித்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் கடுமையான கரும்புகை கிளம்பியது.

    அந்த கரும்புகை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் மக்கள் மத்தியில் பதட்டம் உருவானது. இதையடுத்து கூடுதல் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த கோர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. அதுபோல பெட்ரோல் பங்க்கிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் நிரப்ப வந்திருந்த தனியார் வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன.

    எத்தனை வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது என்று போலீசார் கணக்கு எடுத்து வருகிறார்கள். லாரிகள் தீப்பி டித்து எரியும் காட்சிகளை உயிர் தப்பியவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

    இந்நிலையில் பிரதமர் மோடி தீவிபத்து சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

    மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கி பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தைத் தொடர்ந்து பத்து வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெட்ரோல் பங்கில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது.

    ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து அரங்கேறிய சம்பவ இடத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக தீ விபத்தில் காயமுற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார்.

    தீ விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நான் எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக தேவையான மருத்துவத்தை வழங்குமாறு அங்குள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டேன். வசதிகள் மற்றும் காயமுற்றவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சிறுவனை கண்காணிக்க கேமராக்களை இறக்கினர்.

    ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த கலிகாட் என்ற கிராமத்தில் கடந்த 9-ந்தேதி (திங்கள் கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஆர்யனை மீட்பது தொடர்பாk அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணிகளை தொடங்கினர். சிறுவனை மீட்க அதிக நேரம் ஆகலாம் என்பதால், முதலில் 150 அடி ஆழத்தில் இருந்த சிறுவன் சுவாசிக்க ஏதுவாக ஆக்ஜிஜன் குழாயை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்க கேமராக்களை இறக்கினர்.

    சிறுவனை கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டே கிணற்றில் துளையிடும் எந்திரங்களை பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்க கிட்டத்தட்ட 55 மணி நேரங்கள் ஆகிவிட்டது. மீட்கப்பட்ட போது சிறுவன் சுயநினைவில் இல்லாமல் காணப்பட்டான்.

    சிறுவனை மீட்டதும் அதிநவீன வசதிகள் நிறைந்த ஆம்புலன்ஸ் மூலம் அதிவேகமாக மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி சிறுவன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்
    • இன்று உலகின் ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவை பற்றி மிகவும் ஆர்வத்தடன் உள்ளனர்.

    ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார்.

    இன்று முதல் 11-ந்தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மோடி,  

    தொழில்நுட்பம் மற்றும் தரவு [Information] சார்ந்த நூற்றாண்டு இது. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா உலகுக்கு காட்டுகிறது. இன்று உலகின் ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவை பற்றி மிகவும் ஆர்வத்தடன் உள்ளனர்.

    எங்கள் அரசு வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது. இந்தியாவின் யு.பி.ஐ. டி.பி.டி, திட்டம் மற்றும் இது போன்ற பல பல தரவுகள் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வலிமையை காட்டுகின்றன.

     

    இந்தியா 11-வது பெரிய பொருளாதாரமாக மாற 7 தசாப்தங்களானது. அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது என்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு செல்கிறார் மோடி.  அங்கு அவர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) மூலம் பீமா சகி யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்த கட்டமாக 50,000 பெண் களும் எல்.ஐ.சி. முகவா்களாக தோ்வு செய்யப்பட உள்ளனா்.

    பீமா சகி யோஜனா 

    18 முதல் 50 வயதுள்ள பெண்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முகவா் கமிஷன் தொகை மட்டுமல்லாது கூடுதலாக ஊக்கத்தொகை பெற முடியும். முகவா்கள் அதி கபட்சமாக ரூ.21,000-வரை மாத வருவாய் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

    • தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, ​​ தான் கடத்தப்பட்டதாக போலீசில் கூறினார்
    • உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தினர்

    நான் தான் சிறு வயதில் காணாமல் போன உங்களது மகன் என்று கூறி நபர் ஒருவர் பல குடும்பங்களில் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பீம் என்றும் இந்திரராஜ் பல பெயர்களால் அறியப்படும் ராஜு என்பவர் ராஜஸ்தானைச் சேர்த்தவர். 1993 இல், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை குடும்பத்துடன் சேர்த்துவைக்குமாறும் போலீசை அணுகியுள்ளார்.

    போலீசார் அவருக்கு ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் உடைகளை ஏற்பாடு செய்து சமூக ஊடகங்களில் அவரை பற்றய செய்தியை வெளியிட்டனர். அவர் தங்கள் காணாமல் போன பிள்ளைதான் என்று கூறி ஒரு குடும்பம் போலீசை அணுகி ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. இந்த செய்தியை ஊடகங்களும் நெகிழ்ச்சியான தருணமாக வெளியிட்டன.

     

    ஒரு மகிழ்ச்சியான கிளைமாக்ஸ் போல தோன்றிய இது உண்மையில் மோசடி என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்ற குடும்பதிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ராஜுவுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ராஜுவின் குட்டு வெளிப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜுவிடம் நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

     தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை கடந்த 2005 ஆம் ஆண்டே வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

    பின்னர் அவர் தனது அடையாளத்தை மறைத்து இதுவரை ஒன்பது வெவ்வேறு குடும்பங்களை மோசடி செய்துள்ளார். காணாமல் போன மகன் என கூறி ஒரு குடும்பத்துக்குள் செல்லும் ராஜு சிலகாலம் அங்கேயே தங்கி பின் அவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து, யாரிடமும் கூறாமல் அங்கிருந்து நழுவி அடுத்த குடும்பத்துக்குச் சென்றுள்ளார் . மேலும் அந்த குடும்பங்களிடம் என்ன சொத்து உள்ளது என்பதையும் அலசி ஆராய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

     

    தனது தாயார் இறந்த பிறகு, உணவுக்காகவே மற்றவர்களின் வீடுகளில் இவ்வாறு வசித்து வந்ததாக போலீசாரிடம் ராஜு கூறியுள்ளார் . இதுவரை அவர் தனது போலி அடையாளத்துடன் இருந்த வீடுகளை தவிர்த்து மேலும் பல குடும்பங்களையும் ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவில் ஹிசார் மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் இவர் இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். 

    • ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட் ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார்.
    • அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

    சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாகவும் புயலைக் கிளப்பி வருகிறது.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட்ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேடையில் பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதானி க்ரீன் எனர்ஜியின் நடைமுறைகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

     

    இதுபோன்ற சவால்களை நாம் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு தாக்குதலும் நம்மை வலிமையாக்குகிறது, மேலும் ஒவ்வொரு தடையும் மிகவும் உறுதியான அதானி குழுமத்திற்கு ஒரு படியாக மாறும். அதானி குழுமத்தின் வெற்றிகள் இருந்தபோதிலும், அது எதிர்கொண்ட சவால்கள் இன்னும் பெரியவை, இந்தச் சவால்கள் நம்மை உடைக்கவில்லை.

    மாறாக, அவை நம்மைக் கடினமாக்கியுள்ளன, மேலும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், நாம் மீண்டும் எழுவோம், முன்பை விட வலிமையாக, மேலும் வலிமையுடன் எழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நமக்கு இவை அளித்துள்ளன என்று தெரிவித்தார். மேலும் 2023 இல் வெளிவந்த ஹிண்டன்பெர்க் அறிக்கையையும் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏ விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார்.
    • குல தெய்வ கோவிலான ஏக்லிங்நாத் கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மேவார் அரசு குடும்பத்தைச் சேர்த்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை உதய்பூர் அரண்மனையில் மோதலாக வெடித்துள்ளது. மேவார் அரச குடும்பத்தின் 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏவும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார். மன்னர் குடும்பத்தைச் சேர்த்த விஸ்வராஜ் சிங்கின் தந்தை மகேந்திர சிங் மேவார் கடந்த 10 ஆம் தேதி காலமானதை அடுத்து யார் முடிசூட்டுவது என்று உறவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் விஷ்வராஜ் முடிசூட்டிக்கொண்டது அரண்மனை அறக்கட்டளையை நிர்வகித்து வரும் விஷ்வராஜ் சிங்கின் சித்பவாவுக்கும், ஒன்றுவிட்ட சகோதரர் லக்ஷ்ய ராஜ்ஜுக்கும் பிடிக்கவில்லை. ஏற்கவனே இவர்களுக்குள் பகை இருந்த நிலையில் நேற்று முடிசூட்டிக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு சடங்கு சம்பிரதாயப்படி , விஸ்வராஜ் சிங் உதய்பூர் அரண்மனைக்கு வந்துள்ளார்.

     

    ஆனால் அவருக்கு உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குல தெய்வ கோவிலான ஏக்லிங்நாத் கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விஷ்வராஜ் சிங், பாஜக எம்எல்ஏ 3என்ற தனது செல்வாக்கை பய்னபடுத்தி தனது ஆதரவாளர்களுடன் அரண்மை வசாலில் நின்றபடி உள்ளே கற்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளார்.

    பதிலுக்கு அரண்மனை உள்ளே இருந்தவர்களும் கற்களை வீசியதால் மோதல் பெரிதாகி அரண்மனை பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. பதற்றம் அதிகரித்தால் அரண்மனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் விஷ்வராஜ் தரப்பில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். விஸ்வராக் ஆதரவாளர்களான பாஜக தொண்டர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது.

    இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அரண்மனை கதவு முன்பாக விஷ்வராஜ் சிங் தனது ஆதரவாளர்களுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தால் உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் தலையிட்டுள்ளார். இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்க்க உள்ளதாக விஸ்வராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

    • வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது.
    • பெரிய அளவிலான துண்டு அந்த பெண்ணின் குடலில் சிக்கி இருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அந்த பெண்ணின் வயிற்றில் டவலை வைத்து தைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    மருத்துவர்களின் அலட்சியப் போக்கை அறியாமல் பல மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் சென்று சுமார் 3 மாதங்களாக அந்த பெண் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வலி குறையவில்லை. இறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்த பெண்ணின் வயிற்றில் 15x10 செமீ துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த டவலை அகற்றினர்.

    வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது. இது அவளது தாய்ப்பாலின் உற்பத்தியை கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் விளைவாக பிறந்த குழந்தைக்கு வெளியில் இருந்து பால் கொடுக்க வேண்டியிருந்தது.

    இருப்பினும், சிஎம்எச்ஓ (Chief Medical Health Officer) அனில் ஜூடியா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார் மற்றும் அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, குடும்ப உறுப்பினர் மன்மோகன் கூறுகையில், அவர் மூன்று மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். ஆனால் வயிற்று வலிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கூச்சமான் அரசு மருத்துவமனையிலும், மக்ரானாவில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் அவர் சிகிச்சை பெற்றார்.

    அஜ்மீரில் கூட மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து, அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் மருத்துவர்களின் அலட்சியம் தெரியவந்துள்ளது.

    அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷ் சோனி கூறுகையில், சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றுக்குள் ஏதோ இருப்பது தெரியவந்தது, அறுவை சிகிச்சையை முடிவு செய்ய மருத்துவர்களைத் தூண்டியது. அறுவை சிகிச்சையின்போது, ஒரு துண்டு கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரிய அளவிலான துண்டு அந்த பெண்ணின் குடலில் சிக்கி இருந்தது. வலியைத் தாங்கிய 3 மாதங்களில், அந்தப் பெண் நிவாரணத்திற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டுள்ளார். இது அவரது உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதித்துள்ளது" என்றார்.

    அந்த பெண் நவம்பர் 15-ந்தேதி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 17-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. சுமார் எட்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அந்த பெண் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    • Freezer-இல் அவரது உடல் 4 மணி நேரமாக வைக்கப்பட்டுள்ளது
    • ரோகித்தேஷ் உடலில் திடீரென அசைவுகள் தெரிந்ததால் உடன் இருந்தவர்கள் திடுக்கிட்டனர்

    ராஜஸ்தானில் இறந்துவிட்டதாகக் கருதி எரியூட்டும் மேடையில் கிடத்தப்பட்ட நபர் உயிருடன் எழுந்து வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் என்ஜிஓ நடத்தும் மா சேவா சன்ஸ்தான் என்ற பராமரிப்பு இல்லத்திலிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரான ரோகித்தேஷ் என்பர் கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக பகவான் தாஸ் கேதன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுயநினைவை இழந்து காணப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் உயிரிழந்து விட்டதாக அன்றைய தினமே மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலுக்கு யாரும் பொறுப்பேற்க வராததால் மருத்துவர்கள் அவருக்கு பிரேத பரிசோதனை செய்யாமலேயே போஸ்ட் மார்ட்டம் சான்றிதழைத் தயாரித்து உடலை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

    பிணவறை குளிர்சாத Freezer-இல் அவரது உடல் 4 மணி நேரமாக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் உடலை எரியூட்டுவதற்காக போலீசார் ஆம்புலன்சில் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மேடை மீது கிடத்தப்பட்ட ரோகித்தேஷ் உடலில் திடீரென அசைவுகள் தெரிந்ததால் உடன் இருந்தவர்கள் திடுக்கிட்டனர்.

    உடனே அவர் ஆம்புலன்சில் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் வரை சென்ற நிலையில் இதுதொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ரோகித்தேஷ் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள் மூவரை மாவட்ட ஆட்சியர் ராமாவதார் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார். ரோகித்தேஷ் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

    • மகா விகாஸ் அகாடி ஒன்றுபட்டுள்ளது.
    • மகாராஷ்டிராவில் மெஜாரிட்டி பெற்ற ஓரில் நாள் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன. சில கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டசபை அமையும் எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்டில் இந்தியா கூட்டணி பெற்றி பெறும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சச்சின் பைலட் கூறுகையில் "மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை பொய்யாக்குவோம். மகா விகாஸ் அகாடி ஒன்றுபட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மெஜாரிட்டி பெற்ற ஓரில் நாள் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்.

    பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி கூட்டு சேர்ந்த பா.ஜ.க.வுக்கு தூக்கமின்மையை கொடுப்பார்கள்.

    மகாராஷடிரா, ஜார்க்கண்ட் முடிவுகள் பா.ஜ.க.-வுக்கு கள உண்மையை வழங்கும்" என்றார்.

    • ஷில்பா ஷெட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
    • 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.

    தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

    ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

    2013 ஆண்டு சல்மான் கானுடன் இணைந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஷில்பா ஷெட்டி பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் ஷில்பா ஷெட்டி பேசியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.

    இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மீது பதிவான SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    ஒரு சமூகத்தை இழிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டு, அந்த வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை என நீதிபதி அருண் மோங்கா கருத்து தெரிவித்தார்.

    ×