என் மலர்
ராஜஸ்தான்
- ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன.
- நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.
காங்கிரஸ் திருவனநாதபுர எம்.பி. சசி தரூர் இந்து மதத்துக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழாவில், எழுத்தாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் பேசுகையில், "ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன. ஞான யோகம் இருக்கிறது, அது வாசிப்பு மற்றும் அறிவு மூலம் கிடைப்பது, ஆன்மீகக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் படித்துணர்வது. அதை தான் நான் முயற்சிக்கிறேன்.
பக்தி யோகம் இருக்கிறது, அதுதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். பின்னர் ராஜ யோகம் இருக்கிறது, உள்நிலை, தியானம், உங்களுக்குள் உண்மையைத் தேடுவது அது.
இறுதியாக மகாத்மா காந்தி கடைபிடித்த கர்ம யோகம், அதாவது உங்கள் சக மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்து அதன்மூலம் மூலம் கடவுளை வணங்குவது.
இந்து ஒருபோதும் வெறுப்பு என்னும் தீயை பற்றவைக்க மாட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம்முடையது [ இந்து மதம் ] மட்டுமே ஒரே வழி என்று சொல்வதற்கு இடமில்லை.
துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தை சிலர், ஒரு அடாவடியான பிரிட்டிஷ் கால்பந்து குழு போன்ற சிறு அடையாளமாக குறைக்கிறார்கள். மேலும் அவர்கள், நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லையானால் உங்களை சவுக்கால் அடிக்க போகிறேன் என்று மிரட்டுகிறார்கள். அது இந்து மதம் இல்லை. அதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளை தைக்கக்கொடுத்த சிறுவன் வாங்க வந்தான்.
- இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் ஆடைகளை தைத்து தர தாமதமானதால் தையல் கடைக்காரரைச் சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெய்ப்பூரில் சோமு நகரில் உள்ள பக்கா பந்தா சௌராஹாவில் உள்ள தேவ் மருத்துவமனைக்கு அருகில் சூரஜ்மல் பிரஜாபத் [60 வயது] ஒரு சிறிய தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளை தைக்கக்கொடுத்த 14 வயது சிறுவன் அதை வாங்க நேற்று காலை 10 மணியளவில் கடைக்கு சென்றுள்ளான்.
ஆனால் ஆடைகளை இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளான். அவ்வழியாக பைக்கில் சென்ற ஒருவர் இதை பார்த்து முதியவரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
தையல் கடைக்கு விரைந்த முதியவரின் மகன் மற்றும் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தாக்குதல் நடத்திய சிறுவனை தப்பிக்கவிடாமல் பிடித்து முதியவரின் குடும்பம் போலீசிடம் ஒப்படைத்துள்ளது,
- கடந்தாண்டு மெக்லாரென் நிறுவனம் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது.
- இதன் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகும்.
பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் 50 கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மெக்லாரென் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது மெக்லாரென் 750S காரில் வந்தார்.
கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட மாதுரி தீட்சித் பல கோடி மதிப்பில்லா பல கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் மெக்லாரென் சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம் ஆகவும் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
- நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தார்.
கோச்சிங் சென்டர்கள் மண்டியிருக்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் படித்து வந்த 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் ஒரே மாதத்தில் 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டுமே 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கோட்டாவின் ராஜீவ் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஃப்ஷா ஷேக்[23 வயது], இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர். அஃப்ஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்து ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ பரீட்சைக்கு கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்து வந்த அசாமின் நாகோன் பகுதியைச் சேர்ந்த பராக் என்ற மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மஹாவீர் நகர் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இன்று மதியம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கோட்டாவிற்கு வருகிறார்கள். இங்கு காளான்கள் போல் பெருகி வரும் பயிற்சி மையங்கள் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளது - கடந்த ஆண்டு மட்டும் ரூ.3,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.
- வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் வாலிபர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வீடியோவில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அந்த காருக்கு முன்பாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டு காருடன் மின்சார அடுப்பை இணைக்கிறார். பின்னர் வீட்டில் சமையலறையில் நின்று சமைப்பதை போல மாவை உருட்டி அடுப்பில் பாத்திரம் வைத்து பூரி சுடும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மின்சார வாகனங்கள் மாசு கட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதோடு மட்டுமின்றி சமையல் தேவைக்கும் பயன்படும் என்பதை கண்டுபிடித்துள்ளார் என பதிவிட்டிருந்தார்.
- பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
- மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம்
ராஜஸ்தான் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒரு பெண் ஆசிரியையுடன் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறைக்குள் தகாத செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்த பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்
- ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
- பிச்சை எடுத்த பணத்தில் ஐபோன் வாங்கியதாக பிச்சைக்காரர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிச்சைக்காரர் ஒருவர் ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 ஐ வாங்கியதாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்பிள் நுண்ணறிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வைத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய பிச்சைக்காரர், "இந்த ஐபோன் 16 ஐ நான் மொத்தமாக ரொக்கப்பணம் கொடுத்து வாங்கினேன்" என்று தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில், 'ஒருவர் பிச்சைக்காரரிடம் எப்படி இந்த ஐபோனை வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு அவர் பிச்சை எடுத்ததில் கிடைத்தது' என்று தெரிவித்தார்.
அதே சமயம் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருதரப்பினர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- கடந்த ஆண்டில் கோட்டா பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் காதல் விவகாரங்களால் தற்கொலை செய்துகொள்வதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு பற்றி அழுத்தம் கொடுக்கக்கூடாது. எனது வார்த்தைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் தற்கொலைக்கு பயிற்சி மையங்களின் பங்கு கொஞ்சம் இருக்கலாம். சில சமயங்களில் காதல் விவகாரங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த தவறினால் மாணவர்கள் தவறான திசையில் செல்வார்கள் என்று தெரிவித்தார்.
- கும்பமேளா நல்ல விசயம்தான். கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவரும், பாராளுமன்ற எம்.பி.யுமான பரூக் அப்துல்லா ராஜஸ்தான் மாநிலம அஜ்மீர் சென்றுள்ளார்.
அவரிடம் கும்பமேளா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கும்பமேளா நல்ல விசயம்தான். இது கடந்த 100 ஆண்டுகளாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
- புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ரித்தி என்ற புலி மற்றும் அதன் குட்டிகள் ஏரியை கடந்து சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு மற்றும் பல்வேறு உயிரினங்கள் கொண்ட இந்த பூங்கா வன விலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த பூங்காவின் முக்கிய அடையாளமாக பெங்கால் புலிகள் திகழ்கிறது. அங்கு சுற்றுலா சென்ற அகமதாபாத்தை சேர்ந்த சந்தீப் என்ற என்ஜினீயர் புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், ரித்தி என்ற புலியும், அதன் குட்டிகளும் பூங்காவின் 3-வது மண்டல பகுதியில் உள்ள ராஜ்பாக் ஏரியை நீந்தி கடந்து மறுகரைக்கு செல்லும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.
- தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கோட்டாவில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்த 2 மாணவர்கள் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக கோட்டா பயிற்சி மையத்தில் பயின்று வந்த 20 வயது மாணவன் கடந்த புதன்கிழமை தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா என அடையாளம் காணப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் "என்னால் படிக்க முடியவில்லை.நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துள்ளார்
24 மணி நேரத்திற்குள் கோச்சிங் சென்டர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த அரியானவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.
கோச்சிங் சென்டர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் மாணவ மாணவிகளை மன ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது
- கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு அதிகாரியின் மைனர் மகன் ஓட்டிவந்த கார் சீக்கிய வழிபாட்டு ஊர்வலத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜா பார்க் பகுதியில் நேற்று இரவு 8:30 மணியளவில் பஞ்சவடி வட்டம் அருகே கோவிந்த் மார்க் பகுதியை ஊர்வலம் கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறிய போதிலும், ஒரு முதியவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த சீக்கியர் கூட்டம் ஒன்று விபத்து ஏற்படுத்திய கார் மீது தாக்குதல் நடத்தியது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு நபர் கார் பானட்டின் மீது ஏறி அதை தடியால் தாக்குவதும், கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
அரசு அதிகாரி ஒருவரின் மைனர் மகன் கார் ஒட்டி வர அவனுடன் மேலும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். விபத்தின் பின் அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதர்ஷ் நகர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.=

அதிகாரியின் மைனர் மகன் போலீசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. காரின் கண்ணாடியில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர், அது சரிபார்க்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.






