என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
- விவேகானந்தன் சோப்பை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19) மற்றும் விவேகானந்தன் (57) ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா போதையில் நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க., சமூக நல அமைப்புகள் சார்பில் பந்த் போராட்டமும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே காலாப்பட்டு ஜெயிலில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைப்பது வழக்கம்.
ஆனால் அவர்களோடு சேர்த்து அடைத்து வைத்தால் சிறுமி கொலை குற்றவாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியதால், புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விவேகானந்தனும், கருணாசும் தனி அறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைதி விவேகானந்தன் தனது சட்டையை கழற்றி அதில் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அதே அறையில் இருந்த கைதி கருணாஸ் கூச்சலிட்டார்.
இதையடுத்து சிறை வார்டன்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர். சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஏற்கனவே விவேகானந்தன் சோப்பை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனால் வார்டன்கள் அவரை எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர் அடைக்கப்பட்டுள்ள அறையை கண்காணித்தும் வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க இன்று புதுவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
- முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.
- வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நேற்று மாலை முதல் நடை சாத்தப்படாமல் 4 கால பூஜைகள் நடந்தது. நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் விடிய விடிய தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இன்று விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டனர்.

முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.
- சிறுமி கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.
புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 12 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது மேலும் 12 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது.

- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார்.
இதில் மிலியோஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர் ரபேல் நடால் போட்டியில் இருந்து விலகியதால் ஸ்மித் நாகலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
- சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் போதைப் பொருள் ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்நீதிகேட்டும், போதைப்பொருள் விற்பனை கேந்திரமாக மாறி இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கப்படுவதை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
பந்த் போராட்டத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலச்செயலர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், அண்ணா சிலையை வந்தடைந்தனர்.
அங்கு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணைச்செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச்செயலர் காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், தொகுதி செயலாளர்கள் சம்பத், துரை, பாஸ்கர், ஆறுமுகம், மகளிர் அணி விமலா, எழிலரசி, மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம்.
- போதைப்பொருகள் புழக்கத்தை தடுக்க தவறியதை கண்டித்தும் போராட்டம்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை மயக்கத்தில் வாலிபர் செய்த இந்த வெறிச்செயல், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.
சிறுமி கொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.
சிறுமி கொலையை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டத்தை புதுவையில் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பந்த் போராட்டத்தால் புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை.
புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்கள்தான் அதிகளவில் இயக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனத்தினர் பஸ்களை இயக்கவில்லை. அதோடு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை.

தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளில் பயணிகளை இறக்கி சென்றது. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ஆட்டோக்கள், டெம்போக்களும் இயக்கப்படவில்லை.
நகர பகுதியில் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தது. நேருவீதி, அண்ணா சாலை, மறைமலைஅடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
பெரிய மார்க்கெட், சின்னமணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகளும் இயங்கவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தனர். இதன்படி பிளஸ்-2 தேர்வு எழுத மாணவர்களை அழைத்து செல்ல ஒரு சில தனியார் பள்ளி பஸ்கள் மட்டும் ஒடியது. பெரும்பாலான தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.
தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கவில்லை என்றாலும் அவைகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஒரு சில தொழிற்சாலைகளை தவிர பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது.
பந்த் போராட்டத்தையொட்டி நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்நிலையம், பஸ்நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வியாபாரிகள், ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையா ளர்கள், தொழிற்சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- பந்த் குறித்து மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
- போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து பந்த் அறிவிப்பு.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து, சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் நாளை பந்த் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (8ம் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
- விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடமாற்றம்.
- பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது மேலும் 11 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
பணி இடமாற்றம் செய்யப்பட்ட 11 காவலர்கள் முத்தயால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள்.
மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், சோலைநகர் காவல் நிலைய காவலர்களும் 11 பேரில் அடங்குவர்.
- சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
- இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
- சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
- வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.
இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.
- புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது.
- கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்.
புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆங்காங்கே போராட்டங்களும் வலுத்து வருகின்றன. புதுச்சேரி மாநில அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆகியோர் பந்த் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது
- இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் - பாஜகவின் மாநில முன்னாள் தலைவரும் மகளிருமான டாக்டர் தமிழிசை அவர்கள் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண்குழந்தைகள் நலம் என மேடை தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து கொக்கரித்து வரும் பாஜக கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில், அதுவும் மூச்சு முந்நூறு முறை பா.ஜ.க.வில் பெண்ணுரிமை" கூவும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை ஆளுநராக உள்ள மாநிலத்தில், உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு அவலம்- அதுவும் பெண் சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது.
2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா..? என கேட்கிறேன். அத்துடன், 'உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மைதான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, பாஜக ஆளும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கம் திரும்பி காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் மோடி அவர்கள், இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் பிரதமர் மோடி அவர்கள் துவக்கிய 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித்தனமான கொலையையும் பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜக ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங் கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்






