என் மலர்
புதுச்சேரி
- வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
- இன்று புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது.
இதனையொட்டி வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டதாரி ஆசிரியர்கள் 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர்.
- ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்த படியும், மழை கோட்டு அணிந்த படியும் அவர்கள் முதலமைச்சர் வீட்டு முன்பு காத்திருந்தனர்.
அப்போது அப்பா பைத்தியசாமி கோவிலில் முதலமைச்சர் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதலமைச்சரை சந்தித்து நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்று அவர்களிடம் முதலமைச்சர் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.
மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
- கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
- மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு சீனிவாச ராவ் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
- மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ராவ்.
தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு சீனிவாச ராவ் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ. ஊழல் தடுப்புபிரிவு போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தேவையான அனுமதி வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அறிவியல் அதிகாரி சீனிவாச ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர் ஒருவர் மீதும் கோவையைச் சேர்ந்த ஒருவர் மீதும் புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.
- தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.
புதுச்சேரி:
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.
தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.
அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜெயந்தகுமார் ரே, டி.ஜி.பி. அஜித்குமார் சிங்ளா, இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் எஸ். எஸ். தசிலா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது அந்த வழியே வந்த அரசு பஸ்களை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பஸ்களை மறித்து சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு நிலவியது.
இதேபோல வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
- புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
- புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பஸ் போக்குவரத்து முடங்கியது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்துறையின் வரவு, செலவு திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டிலும் புதுச்சேரி அரசின் மின்துறை ஒழங்குமுறை ஆணையத்திடம் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்து, சுமார் ரூ.120 கோடி பற்றாக்குறையை சரிகட்ட மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரியது.
இதன்பேரில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதாலும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாலும் அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் அமல்படுத்தப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு ஜூன் 16-ந் தேதி முன் தேதியிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஊர்வலம் நடந்தது.
இதைத்தொடர்ந்து முதல் 200 யூனிட்களுக்கு ரூ.85 பைசா அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனாலும் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. சட்டப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதை மாற்றும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகளான 'இந்தியா கூட்டணி' மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இன்று மாநிலம் தழுவிய 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. 'பந்த்' போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பஸ், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
இதன்படி இன்று காலை 6 மணிக்கு 'பந்த்' போராட்டம் தொடங்கியது. 'பந்த்' போராட்டத்தையொட்டி அதிகாலை முதல் புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலுமாக ஓடவில்லை.

பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் இன்றி புதுச்சேரி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது
புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. இருப்பினும் ஒரு சில ஆட்டோ, டெம்போக்கள் ஓடியது. கல்லூரி பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. மாணவர்கள் வழக்கம்போல கல்லூரிகளுக்கு சென்றனர்.
புதுச்சேரியிலிருந்து இயங்கும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளான கன்னிய கோவில், கோரிமேடு, கனக செட்டிகுளம் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கினர்.
ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் புதுச்சேரி வந்து சென்றது. பஸ்கள் இயக்கப்படாததால் புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. புதுச்சேரி அரசு பஸ்கள் ஒரு சில இயக்கப்பட்டது. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ்களில் பயணிகள் ஏறி மாநில எல்லைக்கு சென்று வெளியூர் சென்றனர்.
'பந்த்' போராட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், அரசே 1 முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது.
அதே நேரத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நகரத்தின் பிரதான பஜார் வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சிவீதி, மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. வில்லியனூர், பாகூர், தவளக்குப்பம், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, திருக்கனூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்பட புறநகர், கிராமப் புறங்களிலும் இதே நிலை நீடித்தது.
தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. கடலூர் சாலையில் வணிக வளாகம் திறக்கப்படவில்லை. தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பெரிய மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள் இயங்கவில்லை.
ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 'பந்த்' போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடைகள் திறக்கப்படாததாலும், பஸ்கள் ஓடாததாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், மறைமலை அடிகள் சாலை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
- புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
- மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி 'பந்த்' போராட்டம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ் டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) 'பந்த்' போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது.
முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும்.
- தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ் டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) 'பந்த்' போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது.
இதற்காக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியார் பஸ் உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ மற்றும் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது.
தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு அன்று நடைபெறும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
- விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
சிறுமி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.
- புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநில மாணவர்களுக்காக 64 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்த இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
இது புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக அமைப்பினர் புதுச்சேரி அரசிடம் அந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்
இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களின் பெயரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
அதன்படி விரைவில் அரசு ஊழியர்கள் தவிர, அனைவருக்குமான மருத்துவ நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி உள்ளன. இதில் பயன்பெறுபவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியின் தடையில்லா சான்றிதழை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






