என் மலர்
புதுச்சேரி

ஃபெஞ்சல் புயல்- புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவு
- புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில் கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது
- விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில் கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அதிக மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை 10.8, திருத்தணி 11, மீனம்பாக்கம் 11, நுங்கம்பாக்கம் 11, செங்கல்பட்டு 11.1, திருநின்றவூர் 13, கொளப்பாக்கம் 12, புழல் 9.55, செம்பரம்பாக்கம் 9.25, எண்ணூர் 6.6, பள்ளிக்கரணை 8.02, திருவண்ணாமலை 17, செய்யாறு 16, ஆர்.கே.பேட்டை 12, காஞ்சிபுரம் 12.05, கள்ளக்குறிச்சி 10.6, திருப்பத்தூர் 7.8, வேலூர் 7.6, விழுப்புரம் 49.8, கடலூர் 18, புதுச்சேரி 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Next Story






