என் மலர்tooltip icon

    ஒடிசா

    • ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
    • ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன்.

    கட்டாக்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்தார். விருது பெற்றவர்கள் பட்டியலில் இலக்கியம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீஅந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயர் பத்மஸ்ரீ விருதுக்காக 56-வது இடத்தில் இடம் பெற்றது. ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

    இதற்கிடையே ஒடியா மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் தனது பெயரில் உள்ள ஒருவர் தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றதாக கூறி ஒடிசா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதில் அவர், ''ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன். இதற்காக 2023-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இந்த விருது தவறுதலாக பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இலக்கிய பங்களிப்புகள் எதுவும் இல்லை. விருது பெற்றவர் எந்த புத்தகமும் எழுதவில்லை. எனது பெயரில் உள்ளவர் ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றார்'' என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு ஒடிசா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, "அரசாங்கத்தின் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது. விருது யாருக்கு என்பதை உறுதிப்படுத்த தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும் பொருட்களுடன் இருவரும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.

    இதற்காக இந்திய அணி வீரர்கள் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலி பெண் ஒருவரை கட்டிப்பிடித்து பேசினார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்களில் ஒருசாரார் அப்பெண் கோலியின் நெருங்கிய உறவினர் என்றும் மற்றொரு சாரார் அப்பெண் "அதிர்ஷ்டசாலி" ரசிகை என்றும் கூறி வருகின்றனர். 

    • இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
    • அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கட்டாக்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.

    இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

    இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

    அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:

    ஜோ ரூட் - 56, இயன் மோர்கன் - 55, ஐயன் பெல் - 39, பட்லர் - 38, கெவின் பீட்டர்சன் - 34

    • கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை
    • உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    ஒடிசாவில் பள்ளி சீருடையில் இருந்த இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் காட்டில் உள்ள மரம் ஒன்றில் சிறுமிகளின் உடல்கள் தொங்கிய நிலையில் நேற்று கண்டெடுப்பட்டன.

    உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த எம்.வி 74 கிராமத்தைச் சேர்ந்த ஜோதி ஹல்தார் (13) மற்றும் எம்.வி 126 கிராமத்தைச் சேர்ந் மந்திரா சோடி (13) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் ஒரே உள்ளூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.

    கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

    இதற்கிடையே அருகில் காட்டில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு உடல்களையும் உள்ளூர்வாசிகள் கண்டு போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.   

    • காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களையும் தன்வசப்படுத்துகிறது. இதனால் நாங்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளார் என பா.ஜ.க. விமர்சனம் செய்தது.

    இதற்கிடையே, ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்ட கலெக்டரிடம் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

    அந்த மனுவில், ராகுல் காந்தி தேச விரோத கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. அவர்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கவுகாத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
    • போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் (பிப்ரவரி 6) நடைபெறுகிறது.

    இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க கூடியதால் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குடிப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாக்கில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • டொனால்டு டிரம்ப் இன்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, டிரம்ப் இன்று அதிபராக பதவியேற்கிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துகள், வெள்ளை மாளிகைக்கு நல்வரவு என எழுதியுள்ளார்.

    • காடுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இந்த வீடியோ பதிவாகி உள்ளது.
    • வனப்பகுதிக்குள் தொடர்ந்து ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நயாகர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அரிய வகையான மெலனிஸ்டிக் இனத்தை சேர்ந்த கருஞ்சிறுத்தைகள் காணப்படுவதாக வன அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    முதன்மை தலைமை வன பாதுகாவலரான பிரேம்குமார்ஜா என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் அடர்ந்த காடுகளில் செல்லும் காட்சிகள் உள்ளது.

    காடுகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இந்த வீடியோ பதிவாகி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், எங்கள் வனப்பிரிவில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் உள்ளன.


    பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக மெலனிஸ்டிக் மற்றும் பிற சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வனப்பகுதிக்குள் தொடர்ந்து ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த வகை சிறுத்தைகள் பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கிறது. இவை சுற்றுச்சுழலுக்கு இனியமையாதவை என பதிவிட்டுள்ளார்.



    • பல முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போல இவர்கள் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.
    • அரசு டெண்டர்களை வாங்கி தருவதாக கூறி பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளரான பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் போல் நடித்து, பல தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தம்பதியை ஒடிசா போலீசார் கைது செய்தனர்

    சுரங்க உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தம்பதியை காவலர் கைது செய்துள்ளனர்.

    38 வயதான ஹன்சிதா அபிலிப்சா மற்றும் அவரது கணவர் என கூறப்படும் அனில் மொஹந்தி ஆகியோர் ஒடிசாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.

    "புவனேஸ்வர் நகரில் இந்த 'தம்பதி' அலுவலகம் நடத்தி வந்துள்ளனர். டிஜிட்டல் முறையில் பல முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போல இவர்கள் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர். இந்த புகைப்படங்களை காட்டி பல அரசியல்வாதிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் இதன்மூலம் அரசு டெண்டர்களை வாங்கி தருவதாக கூறி பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்றார்
    • புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சந்தேகமடைந்தனர்.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பாஸ்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹத்மாத் கிராமதத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவரது இரண்டாவது மனைவி சாந்தி பெஹரா.

    பிரசவத்திற்காக டிசம்பர் 19 அன்று பரிபாடாவில் உள்ள பிஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சாந்தியை சேர்த்தார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் டிசம்பர் 22 முதல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    பின்னர் பிறந்த 10 நாளே ஆன தனது மகனை தர்மு, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உடாலா சப்-டிவிஷனுக்கு உட்பட்ட சைன்குலாவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு இரண்டு இடைத்தரகர்கள் மூலம் விற்று, அந்த பணத்தை வைத்து இஎம்ஐயில் பைக் வாங்கியுள்ளார்.

    புது பைக்குடன் தர்மு சுற்றித்திரிவதைப் பார்த்த கிராம மக்கள் சந்தேகமடைந்து குழந்தைகள் நலக் குழுவுக்கு (CWC) தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மு மற்றும் சாந்தி மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதியினரை CWC விசாரணைக்கு அழைத்தது.

    உரிய நீதிமன்ற ஆவணத்தின் மூலம் சட்டப்படிதான் குழந்தையை தானம் செய்ததாக தம்பதியினர் கூறினர். இருப்பினும் பைக் வாங்க குழந்தையை விற்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • எண்ணிக்கையில் பெரிய அளவு மாறுபாடு இருப்பது ஏன் என்ற கேள்வியை பிஜூ ஜனதா தளம் எழுப்பி உள்ளது.
    • தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம் எழுதியுள்ளது.

    ஒடிசாவில் நடைபெற்ற சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்திற்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீதத்திற்கும் இடையே 30 சதவீதத்திற்கும் அதிகமாக வித்தியாசம் இருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் பிஜூ ஜனதா தளம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

    மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் உள்ள எண்ணிக்கையில் பெரிய அளவு மாறுபாடு இருப்பது ஏன் என்ற கேள்வியை பிஜூ ஜனதா தளம் எழுப்பி உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • அவருக்கு ஒடிசா மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சிற்பம் வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசைன் (73), உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜாகிர் உசைன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகளவில் உள்ள திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மணல் சிற்பல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஜாகிர் உசைனுக்கு மணல் சிற்பம் வரைந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதில் தபேலாவின் சக்கரவர்த்தி என்ற வாரத்தைகளையும், தபேலாக்களையும் சிற்பமாக வரைந்துள்ளார்.

    ×