என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • இந்தியா கூட்டணி வாரிசு அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது.
    • இந்தியா கூட்டணி தலைவர்கள் எதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

    மும்பை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள ஜல்கான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்தியா கூட்டணி வாரிசு அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும் பாருங்கள். உங்களுக்கே நன்றாக தெரியும்.


    அதே சமயத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியை பாருங்கள். எதிர்கால சிந்தனையுடன் மோடி எப்படி செயல்படுகிறார் என்று உங்களுக்கு தெரியும். உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய சிறப்பு அவருக்கு உண்டு.

    சந்திரயானை நிலவுக்கு அனுப்பி உலகையே அவர் வியக்க வைத்தார். அதே சமயத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

    சோனியா தனது மகன் ராகுலை பிரதமராக்க முயற்சி செய்கிறார். உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவை முதல்-மந்திரி யாக்க முயற்சி செய்கிறார். லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்-மந்திரியாக்க போராடுகிறார்.


    சோனியாகாந்தி இதுவரை 19 தடவை ராகுலை பிரதமராக்க முயற்சி செய்து விட்டார். அவரது ராகுல்யான் விண்கலம் 19 தடவையும் தோல்வியை தழுவி விட்டது. இப்போதும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். இதிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தெளிவான சிந்தனையுடன் இருப்பது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்
    • பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார்.

    நாக்பூர்:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை குடும்பம் இல்லாதவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சமூக வலை தள பக்கத்தில் தங்களது சுயவிவர குறிப்பில் மோடி குடும்பம் என சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


    பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்த தீவன திருடர் (லாலு பிரசாத் யாதவ்) பிரதமர் மோடிக்கு குடும்பம் எதுவும் இல்லை என கூறி உள்ளார். நான் அவரிடம் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எல்லாம் மோடியின் குடும்பம். 140 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடி குடும்பம்.

    யாராலும் அவரது தலைமுடியை கூட தொட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை, 322 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 176 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

    • மனோஜ் விடுமுறையில் சென்றதால், அமித் குமார் லாக்கர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார்
    • மஸ்கே திருடிய பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என தெரிந்தது

    மும்பை நகரின் முலுண்ட் (Mulund) பகுதியில் உள்ளது, பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India). தங்க நகைக்கடன் சேவைக்கான பிரத்யேக கிளையாக முலுண்ட் எஸ்பிஐ (SBI) செயல்பட்டு வந்தது.

    இந்த வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தவர் அமித் குமார் (Amit Kumar).

    கடந்த மாதம் பிப்ரவரி 27 அன்று, அவருடன் பணிபுரிந்து வந்த 33-வயதான மனோஜ் மாருதி மஸ்கே (Manoj Maruti Mhaske) என்பவர் விடுமுறையில் சென்றிருந்ததால், அமித் குமாரிடம் லாக்கர்களை பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

    தனது அன்றாட பணிகளில் ஒன்றான, தினசரி லாக்கர் பொருட்கள் கணக்கெடுப்பு பணியின் போது அமித் குமார் லாக்கர்களில் இருந்த தங்க நகை பாக்கெட்டுகள் குறைவதை கண்டார்.


    பிப்ரவரி 26 வரை 63 தங்க நகை கடன்கள் வழங்கப்பட்டதால், 63 பாக்கெட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு பதில், 4 மட்டுமே இருந்தன.

    மீதம் 59 பாக்கெட்டுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அமித், மஸ்கேவை தொடர்பு கண்டு இது குறித்து கேட்டார்.

    தங்க நகை பொட்டலங்களை தான் எடுத்து வேறொரு இடத்தில் வைத்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் திரும்ப ஒப்படைப்பதாகவும் மஸ்கே தெரிவித்தார்.

    இதையடுத்து, அமித் குமார் தனது மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார்.

    மஸ்கே திருடிய தங்க நகை பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு, சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

    இதையடுத்து, மஸ்கே வங்கி கிளைக்கு வரவழைக்கப்பட்டார்.

    தான் திருடியதை ஒப்புக் கொண்ட மஸ்கே, சில நாட்களில் அனைத்து நகைகளையும் தந்து விடுவதாக மேலதிகாரிகளிடம் தெரிவித்தார்.


    இதை தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் பாண்டுப் (Bhandup) காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர்.

    மஸ்கே மீது இ.பி.கோ. (Indian Penal Code) சட்டத்தின் 409-வது பிரிவின் கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மஸ்கேவிடம் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அக்கப்பலை பரிசோதித்த போது "சிஎன்சி" மெஷின்கள் எனப்படும் இயந்திரம் இருந்தது
    • அணு ஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்த கூடியவை என DRDO அதிகாரிகள் தெரிவித்தனர்

    சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு பயணித்த "சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா" (CMA CGM Attila) எனும் சரக்கு கப்பல், மும்பையின் நவ சேவா (Nhava Sheva) துறைமுகம் வழியாக செல்லும் போது இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் நிறுத்தப்பட்டது.

    பாகிஸ்தானின் அணு ஆயுத மற்றும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருட்களை இந்த கப்பல் கொண்டு செல்வதாக இந்திய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சுங்கத்துறை அதிகாரிகள் இக்கப்பலை பரிசோதித்த போது அதில் "சிஎன்சி" (Computer Numerical Control) மெஷின்கள் எனப்படும் இயந்திரம் இருந்தது.

    தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கழகத்தை (DRDO) சேர்ந்த அதிகாரிகள் அந்த சிஎன்சி இயந்திரத்தை பரிசோதித்த பின்னர் அது பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்த கூடியது என தெரிவித்தனர்.

    இதையடுத்து, இந்த மெஷின்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இந்த இயந்திரத்திற்கான ஆவணங்களில், சீனாவின் "ஷாங்காய் ஜேஎக்ஸ்ஈ குளோபல் லாஜிஸ்டிக்ஸ்" எனும் நிறுவனத்திலிருந்து "பாகிஸ்தான் விங்க்ஸ்" எனும் சியால்கோட் (Sialkot) பகுதியை சேர்ந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்திய அதிகாரிகளின் தீவிர விசாரணையில் 22,180 கிலோகிராம் எடையுள்ள இந்த இயந்திரம், சீனாவின் "டையுவான் மைனிங்" எனும் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானின் "காஸ்மாஸ் என்ஜினியரிங்" நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.

    அணு ஆயுத திட்டங்களுக்காக சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கருவிகளுடன் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    மும்பை:

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். என்.ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரதோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 48 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதானமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை.

    மும்பை:

    2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. பிறகு இந்த கால அவகாசம் அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை. அதாவது, 97.62 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன. .

    அந்த நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். அல்லது, எந்த தபால் நிலையத்திலும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி, தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலை, ஏழை மக்கள், குடிநீர் குறித்து நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார்.
    • பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டதாக கட்கரி குற்றச்சாட்டு.

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு பேட்டியில் "கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. கிராமங்களில் சிறந்த சாலைகள் இல்லை. குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை. நல்ல பள்ளிக்கூடம் இல்லை" எனக் குறிப்பிடுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இது நிதின் கட்கரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வீடியோ தனது பேட்டியின் ஒரு பகுதி. அப்படி இருந்த நிலை மாற்றப்பட்டு தங்களது ஆட்சி காலத்தில் சிறந்த சேவையை செய்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தேன்.

    அந்த பேட்டியை திரித்து, சிதைத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் இந்த வீடியோவை நீக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரம், மூன்று நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • ஷீனா அமெரிக்காவில் தங்கி படித்து வருவதாக இந்திராணி முகர்ஜி கூறி வந்தார்
    • ஷியாம்வர் வேறொரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட போது உண்மை வெளிவந்தது

    ஐஎன்எக்ஸ் மீடியா (INX Media) எனும் தொழில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் இந்திராணி முகர்ஜி (Indrani Mukerjea).

    இந்திராணி முகர்ஜியின் முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு பிறந்தவர் ஷீனா போரா (Sheena Bora).

    2012 ஆண்டிலிருந்து இந்திராணி முகர்ஜியின் மகள், ஷீனா போரா (24) பொதுவெளியில் காணப்படவில்லை. ஷீனா அமெரிக்காவில் தங்கி படித்து வருவதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்து வந்தார்.

    2015ல் இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுனர் ஷியாம்வர் ரய் (Shyamvar Rai) ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடைபெற்ற விசாரணையில், இந்திராணி முகர்ஜியும், அவரது முன்னாள் கணவரும் சேர்ந்து அவரது மகள் ஷீனா போராவை காரில் கொலை செய்ததாக தெரிவித்து அப்ரூவர் ஆனார்.

    இதை தொடர்ந்து இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிமன்ற தீர்ப்பின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.


    இந்திராணியின் அப்போதைய கணவரான பீட்டர் முகர்ஜிக்கு அவரது முந்தைய திருமணத்தில் பிறந்த அவரது மகன் ராகுலுடன் ஷீனாவிற்கு இருந்த தொடர்பு இந்திராணிக்கு பிடிக்காததால் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இந்திராணி இந்த கொலையை செய்தார்.

    சுமார் 4 வருட சிறைவாசத்திற்கு பிறகு 2020ல் மும்பை உயர் நீதிமன்றம் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில், "இந்திராணி முகர்ஜியின் கதை: புதைக்கப்பட்ட உண்மை" எனும் தலைப்பில் டாகுமென்டரி தொடர் (docu-series) நெட்ப்ளிக்ஸ் (Netflix) தளத்தில் 2024 பிப்ரவரி 23 அன்று ஒளிபரப்பாக இருந்தது.

    நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் இவ்வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை (CBI) இந்த தொடர் ஒளிபரப்பானால் வழக்கு விசாரணையின் போது ஒருதலைபட்சமாக கருத்து உருவாக சாத்தியக்கூறு உள்ளதாக கூறி வழக்கு விசாரணை முடியும் வரை, தொடரை ஒளிபரப்ப தடை கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.


    நேற்று, மும்பை உயர் நீதிமன்றம், சிபிஐ-யின் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பப்படும் என தெரிய வந்துள்ளது.

    • சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது.
    • உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களில் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

    இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இந்தியாவில் அதிக மக்களவை இடங்களை கொண்ட 2-வது மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மும்பையில் உள்ள தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி இடையே இழுபறி நீடித்து வந்தது. இதனால் ராகுல் காந்தி உத்தவ் தாக்கரேயிடம் டெலிபோன் மூலம் பேசினார்.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. விரைவில் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்.

    48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், வெற்றி பெற்றிருந்தன.

    சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டிருந்தது. தற்போது சிவசோன 2-வது உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 3 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஒரு இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. சரத்பவார் கட்சி 15 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது.

    வன்சித் பகுஜன் அகாதி என்ற மாநில கட்சி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து 2 இடங்களை பெறும். சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டி சரத் பவாரிடம் இருந்து ஒரு இடம் பெற்றுக் கொள்வார்.

    • 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அப்துல் கரீம் துண்டாவை போலீசார் கைதுசெய்தனர்.
    • இந்த வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டார்.

    மும்பை:

    1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 2013 ஆகஸ்டில் நேபாள எல்லையான பன்பாஸாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, இன்று காலை 11.15 மணியளவில் துண்டா, இர்ஃபான், ஹமீதுதின் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் தடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், 1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார். துண்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தடா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனாலும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான், ஹமீதுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    • சரத் பவார் கட்சி சார்பில் பதவி நீக்கம் செய்ய மனு.
    • பதவி இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் பட்டேல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியில் தனக்கென்று ஒரு அணியை பிரித்துக் கொண்டு செயல்பட்டார்.

    கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் இருப்பதாக கூறிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சில மாநில மந்திரியாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவாருடன் பிரபுல் பட்டேல் இணைந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கே சொந்தம் என அறிவித்தது. மகாராஷ்டிரா மாநில சபாநாயகரும் அதை உறுதிப்படுத்தினார்.

    இந்த நிலையில்தான் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரா பவார் கட்சியை தொடங்கினார். சரத் பவார் பிரபுல் பட்டேலை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளித்திருந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அதேவேளையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட இருக்கிறார். அம்மாநிலத்தின் வந்தனா சவான் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு பிரபுல் பட்டேல் போட்டியிட இருக்கிறார்.

    அரவது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.

    ×