search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலையில் புலிக்கு நேர்ந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
    X

    சாலையில் புலிக்கு நேர்ந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

    • மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதியது
    • கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.

    வன விலங்குகள் ஊருக்குள் வரும் வீடியோக்களும், காட்டு சாலைகளில் உலா வரும் வீடியோக்களும் இணையத்தளத்தில் அவ்வப்போது வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். சில சமயங்களில் வாகனங்களில் அந்த விலங்குகள் அடிபடும் துரஷிஷ்டவசமான சம்பவங்களும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதி, புலி படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    X தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், வயது முதிர்ந்த ஆண் புலியின் மீது கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது. காயமடைந்த புலியை மீட்டுபகுழுவினர் மீட்டு அவசர சிகிச்சைக்காக நாக்பூருக்கு கொண்டுசென்றனர். ஆனால் படுகாயமடைந்த புலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த சரணாலயப் பகுதியில் 40 கிமீ மேல் செல்லக்கூடாது என்ற வேக வரம்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வன சாலைகளில் விலங்குகளை பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Next Story
    ×