என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய பெண்"

    • பெங்களூரு தற்போது தனது இல்லமாக மாறி விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
    • இந்தியா தனக்கு 3 அற்புதமான பாடங்களை கற்று தந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள முக்கியமான இடங்களை சுற்றி பார்த்து விட்டு செல்வார்கள். இங்கிருந்து செல்லும்போது மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்து செல்வார்கள்.

    இந்நிலையில் ஒரு வருடம் இந்தியாவில் தங்கலாம் என நினைத்து வந்த ரஷியாவை சேர்ந்த லூலியா அஸ்லமோவா என்ற பெண் கடந்த 11 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், இந்தியாவின் மீதான தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய பாரம்பரிய உடையில், நெற்றியில் பொட்டு வைத்து வீடியோவில் காட்சி அளிக்கும் அவர், பெங்களூரு தற்போது தனது இல்லமாக மாறி விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

    மேலும் இந்தியா தனக்கு 3 அற்புதமான பாடங்களை கற்று தந்ததாகவும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் பண்பை புகழ்ந்துள்ள அவர், இந்தியா காந்த சக்தி கொண்ட நாடு என புகழாரம் சூட்டியுள்ளார்.

    இந்தியா மிகவும் பாதுகாப்பானது எனவும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் தெரிவித்தார்.
    • ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கர்நாடகாவின் கோகர்ணாவில் பிரசித்தி பெற்ற ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலையின் அபாயகரமான குகை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ரஷிய பெண்ணும் அவரது 6 மற்றும் 4 வயது மகள்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    புதன்கிழமை மாலை, கோகர்ணா காவல்துறையினர் ராமதீர்த்தத்தில் ரோந்து சென்றபோது, தற்செயலாக அந்தப் பெண்ணையும் அவரது குழந்தைகளையும் கண்டனர்.  

    புனித யாத்திரைத் தலமான அங்கு தானும் தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த பகுதியில் கடந்த 2024 ஜூலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் விஷப்பாம்புகள் அபாயம் உள்ள இங்கு அவர்கள் இருப்பது ஆபத்தானது என்று போலீசார் அப்பெண்ணிடம் விளக்கினர்.

    விசாரணையில், அப்பெண் 2017 இல் வணிக விசாவில் இந்தியா வந்து, 2018 இல் நேபாளம் சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். எனவே விசா காலம் முடிந்தும் தற்போது வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்தது.

    தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் கர்வாரில் உள்ள பெண்கள் மையத்தில் வைக்கப்பட்டுன்னர். அவர்களை ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • இறுதியில் செருப்பு தைப்பதற்காக ரூ.10 மட்டுமே வாங்கிய விகாசை அவர் பாராட்டியதோடு அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இணைய பக்கத்தில் மரியா பகிர்ந்தார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் விகாசின் ஆங்கில புலமையையும், அவரது திறமையையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.

    ரஷியாவை சேர்ந்தவர் மரியா சுகுரோவா. இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். மும்பையில் பல்வேறு இடங்களுக்கும் சென்ற அவர், அங்குள்ள ஒரு தெருவில் நடந்து சென்ற போது அவரது செருப்பு அறுந்துவிட்டது. இதனால் வெறும் காலுடன் நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் சிறிது தூரத்தில் சாலையோரம் இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்கு சென்றார். அங்கு விகாஸ் என்ற தொழிலாளி செருப்பு தைத்து கொண்டிருந்தார்.

    அவரிடம் மரியா சுகுரோவா தனது செருப்பை கொடுத்து தைத்து தரும்படி கூறுகிறார். உடனே விகாஸ், மரியாவின் செருப்பை தைக்க தொடங்குகிறார். அப்போது விகாசுடன் மரியா கலந்துரையாடும் போது விகாஸ், தான் 26 வருடங்களாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறியதோடு தனது தொழில் தொடர்பாக அவருடன் கலந்துரையாடினார். அப்போது விகாசின் ஆங்கில பேச்சு திறமையை பாராட்டிய மரியா, விகாசின் தொழில் நேர்மையையும் பார்த்து வியந்தார்.

    இறுதியில் செருப்பு தைப்பதற்காக ரூ.10 மட்டுமே வாங்கிய விகாசை அவர் பாராட்டியதோடு அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இணைய பக்கத்தில் மரியா பகிர்ந்தார். அவரது இந்த வீடியோ 6.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் விகாசின் ஆங்கில புலமையையும், அவரது திறமையையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.


    ×