என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cave"

    • தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் தெரிவித்தார்.
    • ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கர்நாடகாவின் கோகர்ணாவில் பிரசித்தி பெற்ற ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலையின் அபாயகரமான குகை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ரஷிய பெண்ணும் அவரது 6 மற்றும் 4 வயது மகள்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    புதன்கிழமை மாலை, கோகர்ணா காவல்துறையினர் ராமதீர்த்தத்தில் ரோந்து சென்றபோது, தற்செயலாக அந்தப் பெண்ணையும் அவரது குழந்தைகளையும் கண்டனர்.  

    புனித யாத்திரைத் தலமான அங்கு தானும் தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த பகுதியில் கடந்த 2024 ஜூலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் விஷப்பாம்புகள் அபாயம் உள்ள இங்கு அவர்கள் இருப்பது ஆபத்தானது என்று போலீசார் அப்பெண்ணிடம் விளக்கினர்.

    விசாரணையில், அப்பெண் 2017 இல் வணிக விசாவில் இந்தியா வந்து, 2018 இல் நேபாளம் சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். எனவே விசா காலம் முடிந்தும் தற்போது வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்தது.

    தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் கர்வாரில் உள்ள பெண்கள் மையத்தில் வைக்கப்பட்டுன்னர். அவர்களை ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.
    • வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட "188 வயது முதியவர்" எனக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் வீடியோ கிட்டத்தட்ட 30 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.

    இது தொடர்பான பதிவில், "இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது. பைத்தியம் பிடித்தது," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

     


    24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு ஆண்கள் முதியவருக்கு நடக்க உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதியவர், கூன்விழுந்த நிலையில் வெள்ளை தாடியுடன், தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.

    இந்த வீடியோ பற்றிய இணைய தேடல்களில், உண்மையில் இந்த வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு 110 வயது ஆகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு இந்து மத துறவி என்று கூறப்படுகிறது. இதே தகவல் இந்த ஆண்டு ஜூலை மாதம் சில தனியார் செய்தி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.

    அந்த செய்தியின் படி, வீடியோவில் உள்ள நபர் சியாராம் பாபா என்றும் அவருக்கு வயது 109 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கர்கோன் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். #ThaiCaveBoys
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #ThaiCaveBoys
    ×