என் மலர்
டெல்லி
- அமேதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.
- கேஎல் சர்மா சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.
அமேதி தொகுதி காங்கி ரஸ் வேட்பாளராக கேஎல் சர்மா அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியினரே ஆச்சரியம் அடைந்தனர். நாடு முழுவதும் யார் இந்த கேஎல் சர்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முதலாக இந்த தொகுதியில் ராகுல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார்.
இதன் மூலம் இந்த தொகுதி காங்கிரசிமிருந்து பா.ஜ.க. கைக்கு மாறியது. அங்கு மீண்டும் ஸ்மிருதி இரானி இந்த தடவை களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தடவையும் ராகுல் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வயநாடு தொகுதியில் களம் இறங்கிய ராகுல் அமேதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, இந்திராகாந்தியின் உறவினர் ஷீலா கவுலின் பேரன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அனை வரது எதிர்ப்பார்ப்பையும் தகர்க்கும் வகையில் கேஎல் சர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரசில் சேர்ந்து அந்த கட்சிக்காக சேவையாற்றி வந்த அவர் 1983-ம் ஆண்டு ரேபரேலி தொகுதிக்கு வந்து தொகுதி பொறுப்பாளராக பதவி ஏற்றார்.
அன்று முதல் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியின் தனிப்பட்ட அன்பை சம்பாதித்தார். ராஜீவ்காந்திக்காக அவரது பிரதிநிதி போல அவர் ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.
ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியா குடும்பத்தினருடன் சர்மாவுக்கு மேலும் நட்புறவு அதிகரித்தது. சோனியா ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த 4 தடவையும் அவரது பிரதிநிதியாக ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.
இன்னும் சொல்லப் போனால் அறிவிக்கப்படாத எம்.பி. போலவே அவர் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த தொகுதியில் அவருக்கு அதிக பேருடன் தொடர்பு ஏற்பட்டது.
2004-ம் ஆண்டு ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்ட போது அங்கும் சென்று ராகுலுக்காக கட்சி பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். 2009, 2014, 2019 தேர்தல்களிலும் அமேதி, ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றினார்.
அவரது சேவையை கவுரவிக்கும் வகையிலேயே சோனியா அவரை அமேதி தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். ராகுலுக்கு பதில் அவர் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அமேதி தொகுதியை தன்வசமாக்கி வைத்திருக்கும் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானிக்கு கேஎல் சர்மாவால் நெருக்கடி கொடுக்க இயலுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
- வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
- கடந்த 30-ந்தேதி மாலை நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 961 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
புதுடெல்லி:
புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு கூறியது.
வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், கடந்த 30-ந்தேதி மாலை நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 961 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
மீதி 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
- உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
- ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை களம் இறக்க வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரசாரும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.
உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்ததால் பாரதிய ஜனதாவும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதப்படுத்தியது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
வயநாடு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் ராகுல் அமேதியில் போட்டியிட தயக்கம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அங்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த தொகுதிக்கு அவர் செய்துள்ள நலத்திட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இதனால் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்பதில் ராகுலுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் அங்கு போட்டியிட தொடர்ந்து தயக்கம் தெரிவித்ததால் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது.
இதற்கிடையே ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை களம் இறக்க வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரசாரும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அங்கு பிரியங்காவை போட்டியிட வைக்க ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை. ஒரே குடும்பத்தில் 3 பேர் (சோனியா, ராகுல், பிரியங்கா) எம்.பி.யாக இருந்தால் பாரதிய ஜனதா மிக மிக கடுமையாக விமர்சனம் செய்யும் என்று ராகுல் கருத்து தெரிவித்தார்.
இதன் காரணமாக ரேபரேலி தொகுதியில் போட்டியிடாமல் பிரியங்கா ஒதுங்கினார். இந்த நிலையில் அவரது கணவர் ராபர்ட் வதேரா தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் சோனியா, ராகுல் இருவரும் சேர்ந்து நிராகரித்தனர்.
இதனால் ரேபரேலி தொகுதியில் களம் இறங்கப் போவது யார்? என்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இது தொடர்பாக சோனியாவுடன் பேசினார். ராகுல் வயநாட்டில் மட்டும் போட்டியிட்டால் வடமாநிலங்களை கைவிட்டது போல் ஆகி விடும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இருந்து ராகுல் பயந்து செல்வதாக பாரதிய ஜனதா பிரசாரம் செய்யும் என்று கார்கே விளக்கம் அளித்தார்.
அதன் அடிப்படையில் சோனியா தொலைபேசி மூலம் ராகுலிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகுதான் ராகுல் மனதில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு பதில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் நேற்று நள்ளிரவு வரை இழுபறி நிலவியது. சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்ததும் ரேபரேலி தொகுதி காங்கிரசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
- 15-க்கும் மேற்பட்ட சம்பவங்களை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
- இது தேர்தல் நியாயம் மற்றும் சுதந்திரமான நடைபெற தடையாக இருக்கும்.
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, கட்சி தலைவர் ஓம் பதக் ஆகியோர் இன்று தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தனர். அந்த புகாரில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியலமைப்பு மாற்றப்படும் போன்ற பொய்களை பரப்பி சமூகத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திரிவேதி கூறுகையில் "தனிப்பட்டவர்கள், கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு சிஸ்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. சமூகத்தில் பதற்றமான சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட சம்பவங்களை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இது தேர்தல் நியாயம் மற்றும் சுதந்திரமான நடைபெற தடையாக இருக்கும். அமைப்பு அடிப்படையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன. தொடர்ந்து செய்து வரும் நிலையில், அதன் சமூக வலைத்தள பிரிவுகள் தொடர்ந்து அதே பொய்களை தெரிவித்து வருகின்றன" என்றார்.
இந்த விவகாரம் தேர்தலை நியாயமாக மற்றும் சுதந்திரமாக நடத்த சவாலாக இருக்கும் என தேர்தல் ஆணையத்திடம் எச்சரித்துள்ளோம் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
- 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்
- ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசெர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.
ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரண் பூஷன் சிங் தற்போது உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக உள்ளார். முன்னதாக, கரண் உபி மல்யுத்த சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்டமாக கைசர்கஞ்சில் மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கரண் பூஷன் சிங் மே 3ம் தேதி கைசர்கஞ்ச் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
- பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு.
- வீடியோக்கள் வெளியான நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.
தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்போது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.
அவரை விசாரணைக்கு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி ஓட பா.ஜனதா உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விசா கிடைத்தது எப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்படுவாரா? அல்லது விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை போன்று வெளிநாட்டிலேயே தங்கிவிடுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும்.
- டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி மனு.
- டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீப் பேஃக் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் கடிதம் தோற்றமளிக்கிறது.
- இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி-யின் இடஒதுக்கீடுகளை பறித்து அவர்களுக்கு வாங்கி வங்கிக்கு கொடுக்க இருப்பதாகவும், மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஏழை, விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர்கள், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனும் எங்களுடைய வாக்கு வங்கி. வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அரசு செய்த செயல்பாட்டை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேளுங்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், வேட்பாளர்களிடம் வாக்கு கேட்கும்போது என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து பார்த்தேன்.
கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் மிகுந்த விரக்தியும் கவலையும் இருப்பதாகத் தெரிகிறது. இது பிரதமரின் அலுவலகத்திற்குப் பொருந்தாத மொழியைப் பயன்படுத்த உங்களை வழி நடத்துகிறது.
உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் அந்தக் கடிதம் தோற்றமளிக்கிறது. இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது.
எங்கள் தேர்தல் அறிக்கை உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் அதை விளக்க வேண்டியதில்லை. உங்கள் நலனுக்காக, அவற்றை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன் (தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான விசயங்களை குறிப்பிட்டுள்ளார்).
காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது என்று நீங்களும் உள்துறை அமைச்சரும் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே திருப்திப்படுத்தும் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான். இன்னும் நீங்கள் சீனாவை ஊடுருவிகள் என அழைக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் கூட ஊடுருவவில்லை எனக்கூறி கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் அடைந்து 20 வீரர்களை இழிவு படுத்துகிறீர்கள்.
சீனாவுக்கு க்ளின் சீட் வழங்கி, இந்தியாவின் வழக்கை பழவீனப்படுத்தி, மேலும் போர்க்குணமாக்கியுள்ளனர். ராணுவ கட்டமைப்புகளை அருணாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட் எல்லையில் உருவாக்கி தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில்தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மதிப்பு 54.76 சதவீதம் அதிகரித்து, 2023-24-ல் 101 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் அரசியலமைப்பு 16-வது பிரிவின்படி எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து விளக்க வேண்டும்.
உங்கள் கடிதத்தில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். குஜராத்தில் ஏழை தலித் விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்ட ரூ.10 கோடியை உங்கள் கட்சி திருப்பி கொடுக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்ததால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் பிரச்சார உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. இது கோடை வெயிலால் அல்ல, உங்களின் கொள்கைகளால் ஏழைகள் வாடுகிறார்கள்.
உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை.
வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பதிலாக, கடந்த பத்து வருடங்களில் உங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு வாக்குஅளிக்கும்படி கேட்பது சிறந்ததாக இருக்கும். தேர்தல் முடிந்ததும், தவிர்க்க முடியாத தோல்வியைத் தவிர்க்கும் வகையில் மக்களைப் பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதப் பேச்சுக்களில் ஈடுபட்ட பொய்கள் நிறைந்த பிரதமராக மட்டுமே மக்கள் உங்களை நினைவு கூர்வார்கள்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- மார்ச் மாதத்தில் யு.பி.ஐ பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது.

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது, இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதன அதிக அளவில் மக்கள் பயன் படுத்துகிறார்கள்.
UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமெண்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

இந்தியாவில் சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு UPI பேமெண்ட் முறை தற்போது மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
இந்நிலையில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.14,000 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் யு.பி.ஐ மூலமான பண பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
மேலும் யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புவது தற்போது குறைந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் திடீரென நீக்கப்பட்டது.
- பிரதமர் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:
உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.
இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான கோவின் சான்றிதழை மக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோவின் எனப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சிலர் பதிவிறக்கம் செய்ய முயன்றனர். அப்போது அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. கோவிஷீல்டு சர்ச்சையை ஒட்டி அவரது புகைப்படம் நீக்கப்பட்டதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி, இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்துவருகிறது. எனவே, பிரதமர் மோடியின் புகைப்படம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், இப்படி நடப்பது முதல் முறை அல்ல. கடந்த 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் போதும் இதேபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டது எனவும் தெரிவித்துது.
- சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
- சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும்.
புதுடெல்லி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்கிறார். ஐ.ஐ.டி. பட்டதாரியான சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆன்ட்ராய்டு இயங்கு தளம், கூகுள் குரோம் போன்ற பல திட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.
2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 2 முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1,800 கோடியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்கு சம்பளம் ரூ.1,869 கோடியாக இருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம்.

சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஏற்றத்தால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை தொட்டு வரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும். உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலரே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் அரிதானதாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10 ஆயிரத்து 215 கோடி என ஹூருன் பட்டியல் மதிப்பிடப்பட்டு உள்ளது.
- டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
- டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.
புதுடெல்லி:
ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






