என் மலர்
டெல்லி
- ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
- ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் பற்றி வழக்கமாக வெளிநாடுகள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் இந்த தடவை அதில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய தேர்தலை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அந்த வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. அவர்களால் இந்த விசயத்தில் வெற்றிபெற இயலாது.
இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஒருபோதும் எடுபடாது. நெருக்கடி நிலைக்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக ஏழைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கி றார்கள். அவர்கள் வெளி நாட்டு சக்திகளின் சதிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.
இந்த தடவை தேர்தலில் ஜெயித்தால் நான் சர்வாதிகாரி ஆகி விடுவேன் என்று சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியை யும், அவர்களது மூதாதை யர்கள் செய்ததையும் எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்கட்டும். அவருடைய (ராகுல்காந்தி) பாட்டி என்ன செய்தார்? அவருடைய பெரிய தாத்தா என்ன செய்தார்?
மோடி கட்சியின் ஆட்சியில் என்ன செய்யப்பட்டது? இதை ஒப்பிட்டு பார்த்தால் யார் சர்வாதிகாரி என்பது தெரிந்து விடும். இதுபற்றி யாராவது விவாதிப்பது உண்டா?
அரசியல் சட்டத்தில் நேரு முதல் முதலில் பெரிய மாற்றங்கள் செய்தார். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது என்னவெல்லாம் நடந்தது? இப்போது எனது ஆட்சியில் 10 ஆண்டுகளில் என்ன நடந்தது?
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தை யும் பட்டியலிட முடியும். எனது ஆட்சியில் அத்தகைய தவறுகள் ஒன்றைகூட சுட்டிகாட்ட முடியாது. ஜன நாயகம் என்பது எங்களது ரத்த நாளங்களில் ஓடியது. எனவே சர்வாதிகாரி என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதுபோல நான் முஸ் லிம்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கி றார்கள். வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்ட பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்று தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி உள்ளோம்.
பா.ஜ.க. அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். ஒரு கிராமத்தில் 50 பேருக்கு வீடு தேவை என்றால் 50 பேருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். ஜாதி, மதம் பார்த்து எதுவும் நடக்காது.
அனைத்து ஜாதி, மத மக்களும் அனைத்துவிதமான திட்ட பயன்களும் பெறுவார்கள். இதுதான் சமூகநீதியின் உத்தரவாதம். 2002-ம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டபோது நாங்கள் திட்டமிட்டு அதை ஒடுக்கினோம். அதன் பிறகு இன்று வரை மத கலவரம் ஏற்படவில்லை.
முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமது நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு எந்தவிதத்தில் இடையூறு ஏற்பட்டு இருப்பதாக கருத முடியும். முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இஸ்லாமியன ரும் இந்தியாவின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்தஒரு மதத்தை சார்ந்தவரும் கொத்தடிமை போல் வாழ்வதை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். என்றா லும் சிலர் பயம் காரணமாக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.
வாரணாசி தொகுதிக்கு 2014-ம் ஆண்டு சென்ற போது நான் அங்கு போட்டியிடுவது என்று கடைசி நிமிடத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அங்கு மனுதாக்கல் செய்து முடித்த பிறகு மக்கள் மத்தியில் பேசினேன். அப்போது நான் எனது பேச்சுக்கான குறிப்புகளை தயார் செய்திருக்கவில்லை.
வாரணாசி மக்கள் மத்தியில் பேசுகையில், `என்னை யாரும் இங்கு அனுப்பவில்லை. கங்கை தாய் என்னை வரவழைத்து தத்து எடுத்து இருக்கிறாள்' என்று கூறினேன். அதை வாரணாசி மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நான் வாரணாசியில் தொடர்ந்து இருக்கிறேன். நான் பேசும்போதெல்லாம் எனது வாரணாசி என்று தான் குறிப்பிடுவேன். எனக்கும், வாரணாசி தொகுதிக்கும் இருக்கும் தொடர்பானது ஒரு தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது.
வாரணாசி போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு நான் குஜராத்தில் உள்ள வீட்டுக்கு சென்றபோது எனது தாய் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் 2 விசயங்களை என்னிடம் குறிப்பிட்டார். ஒன்று-எப்போதும் ஏழைகளுக்காக உழைத்துக் கொண்டே இரு. 2-வது எந்த காரணத்தை கொண்டும் ஊழலுக்கு இடம் கொடுக்காதே என்று கூறினார்.
இந்த இரண்டையும் நான் இப்போதும் கடை பிடித்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்று வருவதை வழக்கத்தில் வைத்திருந்தேன்.
எனது தாயாரிடம் ஆசி பெறாமல் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது இப்போதுதான் முதல் தடவை. அதே சமயத்தில் 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்கள் இருந்து என்னை ஆசிர்வதிக்கிறார்கள்.
அந்த ஆசியுடன் நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.
2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதீய ஜனதா பெற்றது. இந்த தடவை ஆந்திரா, ஒடிசா, வடக்கு கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. எனவே 400 இடங்களை நிச்சயம் எட்டி பிடிப்போம்.
கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான குற்றச் சாட்டுகள் தொடர்பாக நான் மவுனமாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
பிரஜ்வால் போன்றவர்க ளின் செயல்களை ஒருபோ தும் பொறுத்துக் கொள்ள இயலாது. என்றாலும் அவர் தொடர்பான ஆயிரக்க ணக்கான வீடியோக்கள் ஒரே நாளில் திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வீடியோக்களை தொகுத்து உள்ளனர். தேர்தல் சமயத்தில் சதிதிட்டத்துடன் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
3-வது முறை பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அதற்கான திட்டமிடலில் நான் ஈடுபட்டுள்ளேன். தேர்தலுக்கு பிறகு நான் மிக முக்கியமான பெரிய முடிவுகளை எடுக்க உள்ளேன். அந்த முடிவு களில் இருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை.
ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுவிட்டது. ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
எனது நாடு எந்த ஒரு சிறிய விசயத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கொள்கை முடிவுகளை செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால்தான் இந்தியாவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இனி அத்தகைய நிலை இருக்காது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
- தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 12, 20 25, மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணை யம் அறிவித்தது.
அதன்படி கடந்த மாதம் 19 மற்றும் 26-ந்தேதிகளில் முதல் 2 கட்ட தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இன்று (மே 7-ந்தேதி) 3-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடந்து வருகிறது.
அடுத்து 4-வது கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. 96 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வருகிற சனிக்கிழமை 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இந்த நிலையில் 5-வது, 6-வது கட்டங்களுக்கான தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இறுதி 7-வது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக 57 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
7-வது கட்ட தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் பீகாரில் 8 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட் டில் 3 தொகுதிகள், ஒடிசா வில் 6 தொகுதிகள், பஞ்சாப் பில் 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி இடம் பெற்று உள்ளன.
இந்த 8 மாநிலங்களில் பஞ்சாப்பில் 13 தொகுதி களுக்கும், இமாச்சல பிரதே சத்தில் 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 8 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்கான 57 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 14-ந்தேதி கடைசி நாளாகும். 15-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 17-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி 7-வது கட்ட ஓட்டுப்பதிவில் இடம் பெற்றுள்ளது. அங்கு இன்று சில சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பிரதமர் மோடி மனுதாக்கலுக்கு கடைசி நாளான 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு 18 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும்.
- 4 இடங்களை வகிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
- ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மல்லுகட்டுகின்றன.
புதுடெல்லி, மே 7-
ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது.இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடு வார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும்.
- விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும்.
96,317 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூன் மாதம் 6-ந்தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் விண்ணப்பத்துள்ளன.
கடந்த 2022-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதானி குரூப் நிறுவனம் விண்ணப்பத்திருந்தது. தற்போது புதிதாக எந்த நிறுவனமும் ஏலத்திற்காக விண்ணப்பிக்கவில்லை.
800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெரட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளின் அனைத்தும் ஸ்பெக்டரம் ஏலத்தின் ஒரு பகுதியாகும். மொத்த அலைவரிசைகள் அடிப்படை விலை 96317 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஸ்பெக்ட்ரம் 20 வருடத்திற்கு ஒதுக்கப்படும். ஏலம் எடுத்த நிறுவனம் 20 சம வருடாந்திர தவணையில் பணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் முடிவடைந்த நிலையில், வரவிருக்கும் ஏலத்திற்காக சரண்டர் செய்யும் வாய்ப்பை தகவல்தொடர்பு துறை வழங்கியுள்ளது.
மே 10-ந்தேதி விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் விவரம் வெளியிடப்படும். விண்ணப்பங்களை திரும்பப் பெற மே 17-ந்தேதி கடைசி நாளாகும். மே 20-ந்தேதி ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
- தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக கவர்னருக்கு புகார் வந்துள்ளது.
- பா.ஜனதாவின் கட்டளையின்படி மேலும் ஒரு சதி- ஆம் ஆத்மி
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) இடம் இருந்து அரசியல் நிதி பெற்றதாக வந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
இது பா.ஜனதாவின் உத்தரவு அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு எதிரான சதி என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கவர்னர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர பால் புல்லர் விடுதலையை எளிதாக்குவதற்கான காலிஸ்தான் குரூப்பிடம் இருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதாக, கவர்னருக்கு புகார் வந்துள்ளது. புகார்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்களுக்கு தடயவியல் பரிசோதனை உட்பட விசாரணை தேவைப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தேவேந்திர பால் புல்லர். இவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தடா நீதிமன்றம் இவருக்கு 2001-ம் ஆண்டு மரண தண்டனை வழங்கியது. அதை உச்சநீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைத்தது.
- குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டியின்றி தேர்வானார்.
- கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.
3-வது கட்டமாக, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நகர்ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டி யின்றி தேர்வானார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா (காந்திநகர்), மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர். இத்தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி:
ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் பாண்டே கூறியதாவது:-
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. இந்த வழக்கில் எந்த இறுதி தீர்ப்பும் வழங்கவில்லை.
2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். அவதூறு வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதற்கும், தேர்தலில் போட்டியிடும் அனுமதிக்கும் தொடர்பு இல்லை.
இரண்டாவதாக கடந்த 2006-ம் ஆண்டு தனது குடியுரிமை பற்றி ராகுல்காந்தி கூறும் போது, `தான் இங்கிலாந்து நாட்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் அசோக் பாண்டே கூறினார்.
இதற்கிடையே வேட்பு மனுக்கள் பரிசீலனை கடந்த 4-ந்தேதி முடிந்து விட்டது. அப்போது ராகுல் மனு ஏற்கப்பட்டது.
இன்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தாமதமாக புகார் கொடுத்ததால் ராகுல் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று தெரியவந்துள்ளது.
- அரவிந்த் சிங் லவ்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
- எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்.
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த 28ம் தேதி அன்று தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.
தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினர்.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தொடர் அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவராக தேவேந்தர் யாதவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் தேவந்தர் சிங் பேசியதாவது:-
இது எனக்கு ஒரு முக்கியமான நாள். ஏனென்றால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், எனது எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இது கடினமான காலங்கள், ஆனால் நாங்கள் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்
- காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்
புதுடெல்லி:
டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்
இவர் பாஜகவில் இணைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மீண்டும் 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது.
- 3-ம் கட்ட தேர்தலுக்கான 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
இதையடுத்து 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. 19-ந்தேதி மனுதாக்கல் நிறைவு பெற்றது.
இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.
3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.
3-ம் கட்ட தேர்தலுக்கான 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 94 தொகுதிகளிலும் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய தொடங்கி உள்ளனர். நாளை மறுநாள் 94 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளுக்கு அனைத்து பொருட்களும் கொண்டு சென்று தயார் நிலையில் வைக்கப்படும்.
7-ந்தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த நிலையில் 94 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் அதிகளவில் முற்றுகையிட்டுள்ளனர்.

மத்திய மந்திரி அமித்ஷா இன்றும் நாளையும் குஜராத்தில் தங்கியிருந்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குஜராத்தில் இன்றும் நாளையும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.
பிரதமர் மோடி ஏற்கனவே 94 தொகுதிகளில் ஆதரவு திரட்டி விட்டார். தற்போது 2-வது கட்டமாக சில நகரங்களில் இன்றும் நாளையும் பிரசாரம் செய்கிறார். இன்று (சனிக்கிழமை) அவர் ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்றும் நாளையும் 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு சென்று இறுதி கட்ட ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் தங்கியிருந்து தீவிர ஆதரவு திரட்டி வருகிறார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வருகிற 7-ந்தேதி 2-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 14 தொகுதிகளிலும் கார்கே தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடகா அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி.க்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான செக்ஸ் புகார்கள் காரணமாக 14 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
- காஸ்பரோவ் கிண்டலாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
- சவால் விடுவதற்கு முன்பு ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 2 தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் களத்தில் நிற்கும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிர தேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராகுல்காந்திக்கு பிடித்த செஸ் வீரர் ரஷியாவை சேர்ந்த கேரி காஸ்பரோவ் ஆவார். முன்னாள் உலக சாம்பியனான அவர் 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது ராகுல்காந்தி தனது செல்போனில் செஸ் விளையாடும் வீடியோவை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. வீடியோவில் காஸ்பரோவ் தனக்கு விருப்பமான செஸ் வீரர் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விளையாட்டுக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை குறிப்பிட்டார். அந்த வீடியோவில் அரசியல் வாதிகளில் தன்னை சிறந்த செஸ் வீரர் என்று ராகுல்காந்தி தெரிவித்து இருந்தார்.
ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தியின் செஸ் ஆர்வம் குறித்து காஸ்பரோவ் கிண்டலாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாரம்பரியமான நீங்கள் (ராகுல்காந்தி) முதல் இடத்துக்கு சவால் விடுவதற்கு முன்பு ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு காஸ்பரோவ் கிண்டலாக தெரிவித்தார். அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்தார். தனது நாட்டை விட்டு வெளியேறி அவர் குரோஷியாவில் வசிக்கிறார்.

ராகுல்காந்தி பற்றி கிண்டலாக காஸ்பரோவ் தெரிவித்த கருத்து வைரலானது. இதை தொடர்ந்து காஸ்பரோவ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எனது சிறிய நகைச்சுவை இந்திய அரசியலில் நிபுணத்துவம் பெறாது என்று நான் நம்புகிறேன்.
ஆனால் 1000 கண்கள் கொண்ட அனைத்தையும் பார்க்கும் அசுரன் என்று நான் ஒருமுறை விவரித்தது போல ஒரு அரசியல்வாதி என், அன்பான விளையாட்டில் ஈடுபடுவதை என்னால் பார்க்க தவற முடியாது.
இவ்வாறு காஸ்பரோவ் கூறியுள்ளார்.
சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான குகேஷ் சமீபத்தில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக போட்டிக்கு தேர்வு பெற்ற போது குகேசை இந்திய பூகம்பம் என்று காஸ்பரோவ் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
- வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால் இடைக்கால ஜாமின் குறித்து பரிலீசனை.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த தடயங்களும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் 2023-க்கு முந்தையவை. அனைத்தும் ஜூலை 2023-ல் உடையது. மணிஷ் சிசோடியா வழக்கில் உள்ள ஆதாரங்கள் அப்படியே உள்ளது" என கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் "இந்த வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால், நாங்கள் தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கலாம். 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதுவரை முடிவு செய்யவில்லை.
இரு தரப்பினரும் ஆச்சரியப்படாமல் இருக்க நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு இரு தரப்பிலும் தயாராகி வரவேண்டும்" கேட்டுக்கொண்டனர்.






