ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: அவரது மகனை வேட்பாளராக அறிவித்த பாஜக

2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: அவரது மகனை வேட்பாளராக அறிவித்த பாஜக
Published on

உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசெர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரண் பூஷன் சிங் தற்போது உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக உள்ளார். முன்னதாக, கரண் உபி மல்யுத்த சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.

பாராளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்டமாக கைசர்கஞ்சில் மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கரண் பூஷன் சிங் மே 3ம் தேதி கைசர்கஞ்ச் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com