என் மலர்
டெல்லி
- 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.
இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 47.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் - 45.33 சதவீதம்
மகாராஷ்டிரா- 38.77 சதவீதம்
மேற்கு வங்காளம்- 62.72 சதவீதம்
ஒடிசா - 48.95 சதவீதம்
ஜார்கண்ட்- 53.90 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 53.90 சதவீதம்
லடாக்- 61.26 சதவீதம்
உத்தரபிரதேசம்- 47.55 சதவீதம்
- கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது.
- பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.
உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடலில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக என தகவல் வெளியானது.
கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், கோவாக்ஸ் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும், ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும், திரும்பப் பெறப்படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததில் இருந்து பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது.
- இந்த சதித்திட்டம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இடைக்கால ஜாமினில் வெளியில் வந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அரவிந்த கெஜ்ரிவாலை பார்த்து பா.ஜனதா பயப்படுகிறது. டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளை பா.ஜனதா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா சதித்திட்டம் தீட்டுகிறது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா சதி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சங் சிங் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததில் இருந்து பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது கொடூர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த சதித்திட்டம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது. டெல்லி மாநில ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களின் உள்பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவை வெறுப்பு மற்றும் பழிக்குப்பழி என்பதில் மூழ்கியுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி செய்து கொண்டிருக்கிறார்கள். அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பிரதமர் அலுவலகம், பா.ஜனதா, மோடி பொறுப்பு என்பதை அரசு, நிர்வாகம், தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
இவ்வாறு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சங் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மாநில மந்திரி அதிஷி கூறுகையில் "சுவற்றில் வரையப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு உள்ளனர். சிசிடிவி கேமரா உள்ளது. அப்படி இருந்தும் போலீசார் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. சைபல் செல் எங்கே?. இந்த விசயங்களை பார்க்கும்போடு பா.ஜனதாவில் கட்டமைக்கப்பட்டுள்ள எனத்தெரிகிறது" என்றார்.
- வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.
- உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் எழுந்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் 4 கட்டங்களில் தெளிவாகி விட்டது.
வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனில் இருந்து விடுதலை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்காக வாக்களிக்கிறார்கள்.
இந்த தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள், மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.
அமேதி மற்றும் ரேபரேலி உள்பட நாடு முழுவதும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
आज पांचवें चरण का मतदान है!
— Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2024
पहले चार चरणों में ही यह साफ हो गया है कि जनता संविधान और लोकतंत्र की रक्षा के लिए खड़ी हो गई है और भाजपा को हरा रही है।
नफ़रत की राजनीति से ऊब चुका यह देश अब अपने मुद्दों पर वोट कर रहा है।
युवा नौकरी के लिए, किसान MSP और कर्ज़ से मुक्ति के लिए,…
- நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும்.
- தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக பேசுவதாகவும், செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. உண்மையில் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை.
அதுபோல சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் நடந்து கொண்டது இல்லை. நாட்டு மக்களில் யாரையும் நான் சிறப்பு மக்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். அதை இப்படி திரித்து சொல்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி இந்த தடவை நான் சொல்லாததை எல்லாம் பிரசாரத்தில் சொல்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.
காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மை இன மக்களை தூண்டும் வகையில் பிரசாரங்களில் பேசுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை இன மக்களை காங்கிரஸ் கட்சியினர் இப்படி பயன்படுத்துகிறார்கள்.
இதை நான் குறிப்பிட்டு சொன்னவுடன் அவர்கள் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக வதந்தி பரப்புகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கரும், நேருவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்று அதில் இருந்து விலகி செல்கிறார்கள். அதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.
தேர்தல் பிரசார கூட்டங்களில் நான் எப்போதுமே சிறுபான்மை இன மக்கள் பற்றி பேசுவது கிடையாது. ஆனால் காங்கிரசார் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சிறுபான்மை இன மக்களை குறிப்பிட்டு பேசுவது தேர்தல் சமயத்தில் அவர்களை திசை திருப்புவது போல் உள்ளது.
நாங்கள் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு மக்களும் எங்களுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் சமம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.
இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிக்கு சிறுபான்மை இன மக்கள் பலியாகி விடக்கூடாது.
நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவை பாருங்கள். தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியது பா.ஜ.க. மட்டுமே. மீண்டும் சொல்கிறேன். இந்த தடவையும் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் கணிசமான அளவுக்கு உயரப்போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
காங்கிரஸ் கட்சி மத ரீதியாக இட ஒதுக்கீடு செய்ய நினைக்கிறது. அதை நடக்க விடமாட்டேன். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன். நாடு முழுவதும் இதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை அனைத்துப் பகுதிகளிலும் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றிகளை பெறுவோம். குறிப்பாக தெற்கிலும், கிழக்கிலும் பாரதிய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
நாங்கள் நிர்ணயித்துள்ள 400 இடங்கள் லட்சியத்தை மிக எளிதாக கடப்போம். உண்மையில் பாரதிய ஜனதா கட்சிதான் தேசிய அளவில் உணர்வுப்பூர்வமான கட்சி. நாங்கள் எந்த மாநிலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்தாலும் அது தேசிய நலனை அடிப்படையாக கொண்டு தான் அமையும்.
ஆனால் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வேறு விதமாக பேசி திசை திருப்புகின்றன. நாட்டின் நலனை சீரழிக்கும் வகையில் உள்ளன.
பாரதிய ஜனதாவை பிராமணர்கள் கட்சி என்று சொன்னார்கள். ஆனால் பாரதிய ஜனதாவில் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
- இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
புதுடெல்லி:
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

இப்ராஹிம் ரைசி
இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
டெல்லியில் மக்களின் பிரதான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது, இளம்ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரித்து இருந்தது. ஆனாலும் பயணிகளின் அத்துமீறல் நின்றபாடில்லை. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சி உடை அணிந்து ஆபாசமாக நடனம் ஆடுவது போன்று காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நின்றுவிடக்கூடாது. அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் சிலர் பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.
- பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்
- டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும் 3-ல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன். அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார்.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இரு கட்சி தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஒருவேளை பிரதமர் தன் முன் வந்தால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயப் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பேன்" என்று தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
- கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழப்பு.
- கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்பு.
டெல்லியில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்புகள் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை-24, என்எச்-8, ரிங் ரோடு, ரோஹ்தக் சாலை, ஜிடி சாலை மற்றும் மதுரா சாலை போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் நிகழ்ந்த டெல்லியின் முதல் பத்து சாலைகளில் ஒன்றாகும்.
இந்த ஆய்வு தகவலின் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இலக்கு அமலாக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும், இறுதியில் இந்த சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து பல கல்வித் திட்டங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு கற்பிக்க ராஹ்கிரி போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன," என்று அதிகாரி கூறினார்.
- டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார்.
- அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
புதுடெல்லி:
ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டருடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் செல்ல தொடங்கினர்.
சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பா.ஜ.க. அலுவலகம் உள்ள பகுதியில் டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
- எங்களை அழிக்க பா.ஜ.க. மூன்று திட்டங்களை வகுத்துள்ளது என்றார் டெல்லி முதல் மந்திரி.
புதுடெல்லி:
ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல் மந்திரியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியை நசுக்க விரும்புகிறது.
ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவதாகவும், அவர்களது பணி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவருக்கு தெரிந்த நபர்கள் எனக்கு தெரியும். அவர்கள் என்னிடம் இதை தெரிவித்தனர்.
ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் ஒழிக்க 'ஆபரேஷன் ஜாது' என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்கு தேர்தலுக்கு பிறகு முடக்கப்படும். வங்கி கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத்துறை வக்கீல் ஏற்கனவே கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கூறினார்.
வங்கி கணக்கு முடக்கம், அலுவலகத்துக்கு சீல், நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம். இவைதான் பாரதிய ஜனதாவின் திட்டமாகும்.
2015-ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பா.ஜ.க.) எழுப்பினார்கள். இப்போது மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள். ஊழல் நடந்ததா என்று மக்கள் கேட்கிறார்கள். பணம் எங்கே? மற்ற இடங்களில் சோதனை நடக்கும்போது நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது. ஆனால் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய் வழக்குகளைப் போட்டு கைதுசெய்தனர் என தெரிவித்தார்.
#WATCH | Delhi CM and AAP National Convener Arvind Kejriwal says, " Since I came to power in 2015, how many allegations did they (BJP) raise?...now they say that liquor policy scam has happened, people are asking them if the scam happened, where is the money?...in other places… pic.twitter.com/tK172Zmmq7
— ANI (@ANI) May 19, 2024
- பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தராசு சாய்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.
- 4 விஷயங்களையும் ஒன்றாக சேர்ந்ததால் நாங்கள் நிறைய சாதிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து 370 இடத்தையும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 400 இடங்களையும் வெற்றி இலக்காக கொண்டுள்ளது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா சாதனை வெற்றியை பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் 4 கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பா.ஜனதா சாதனை வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தராசு சாய்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்.
இந்தியா மிகப்பெரிய நாடு. அவர்கள் வேட்பாளர்கள் பெயர், அனுபவம் ஆகியவற்றை பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததால் வாக்காளர்கள் அவர்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இழக்கிறது.
நோக்கம் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். அது பகுதிகளாக இருக்க கூடாது. 2-வது அளவு கோல். அதுவும் பெரிதாக அமைய வேண்டும். வேகம் இந்த இரண்டும் ஒத்திசைவாக இருக்க வேண்டும.
எனவே நோக்கம், அளவு மற்றும் வேகம் பின்னர் திறமை இருக்க வேண்டும். இந்த 4 விஷயங்களும் ஒன்றாக சேர்ந்ததால் நாங்கள் நிறைய சாதிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.






