search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ebrahim Raisi"

    • ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19-ந் தேதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

    இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்கிற கேள்வி எழுந்தது.

    இந்த சூழலில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஈரான் ஆயுத படைகளின் தலைமை, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

    இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஹெலிகாப்டரில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று எழுந்த யூகங்களுக்கு ஈரான் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

    இதுதொடர்பாக ஈரான் ஆயுத படைகளின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "ஹெலிகாப்டரின் சிதைவுகள் மற்றும் மீதமுள்ள பாகங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் சிதைவுகள் சிதறிக் கிடந்த விதம் ஆகியவற்றின் சோதனை முடிவுகளை பார்க்கும்போது ஹெலிகாப்டரில் நாசவேலை குண்டு வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
    • அவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் நேற்று துக்கம் அனுசரிப்பு.

    டெஹ்ரான்:

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ம் தேதி மாயமானது. அதன்பின், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்திய தேசியக் கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    இதற்கிடையே, இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஈரான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

    இந்நிலையில், டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அஞ்சலி செலுத்தினார்.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
    • அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மாயமானது. பின்னர் விபத்தில் ஹெலிகாப்டர் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்திய தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.

    இந்த நிலையில் இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாளை அவர் ஈரான் புறப்பட வாய்ப்புள்ளது. அஜர்பைஜான்- ஈரான் எல்லையில் இருந்து தப்ரிஸ் திரும்பும்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    • இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    • ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.

    ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

    அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணம் அறிவிக்கப்பட்டது. 

    முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக அதிபராக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
    • இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    புதுடெல்லி:

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. 

     இப்ராஹிம் ரைசி

     இப்ராஹிம் ரைசி

    இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
    • ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

    இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

    ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

    அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

    ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதனை ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது.

    மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஹெலிகாப்டரில் ஈரான் அதிபருடன் இரண்டு அமைச்சர்கள் அதிகாரிகளும் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

    விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    ×