என் மலர்tooltip icon

    பீகார்

    • ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெட்டிக்குள் மளமளவென ஏறிய பயணிகள்.
    • மூச்சுவிடக் கூட இடமில்லாத அளவிற்கு பயணிகள் ஏறியதால் மூச்சுத் திணறல்.

    பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. முன்பதிவு செய்யப்படாத 2ஆவது வகுப்பு பெட்டியில் இளம்பெண் ஒருவர் எப்படியோ ஏறிவிட்டார். அவரைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக மளமளவென கூட்டம் ரெயில் பெட்டிக்குள் ஏறியது. 10 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 20 முதல் 30க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து ஏறினர். இதனால் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த இளம்பெண், காற்றுக்காக ஏங்கினாள். இதனால் ஜன்னல் கண்ணாடியை திறக்க முயன்றார். ஆனால் மறுமுனையில் இருந்து கூட்டம் கண்ணாடியை மூடிக்கொண்டு மறுவழியாக ஏறத்தொடங்கியது. இறுதியாக எப்படியோ கண்ணாடியை திறக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாடா, உயிர் பிழைத்தோம் என காற்றை சற்று சுவாசித்தார். பின்னர் பாட்டிலில் உள்ள தண்ணீர் மூலம் முகம் கழுவினார்.

    இதனைத் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பயணிகள் அந்த பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை. அதற்குப் பதிலாக கேலி கிண்டல் செய்து, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு பெண் மூச்சு விட முடியாமல் திணறி, சற்று இளைப்பாறியதை கிண்டல் செய்து, போட்டோ எடுத்தது முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    • கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
    • பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன.

    பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடைவிடாத கனமழை காரணமாக போஜ்பூர், பாட்னா, பாகல்பூர், வைஷாலி, லகிசாரை, சரன், முங்கர், ககாரியா, பெகுசாரை மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதன்காரணமாக 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 32 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    • மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

    பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர் கான். கான் சார் என தனது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.

    வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. கான் சார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர்.

    மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

    • தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது.
    • வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    பாட்னா:

    ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஒரு பெரிய மோசடி என்று நாங்கள் பலமுறை கூறி உள்ளோம். பீகாரின் துணை முதல்-மந்திரி விஜய் குமார் சின்காவுக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. இவை 2 வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கிறது. ஒன்றில் 57 வயது என்றும் மற்றொன்றில் 60 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ளது. எனவே யார் மோசடி செய்கிறார்கள் என்பதை மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். இதில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது அல்லது பீகார் துணை முதல்-மந்திரி ஒரு மோசடி செய்துள்ளார் என்பதாகும்.

    இவ்விவகாரத்தில் விஜய் சின்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு பிறகும், பீகாரின் துணை முதல்-மந்திரியின் பெயர் 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பது இந்த மோசடிக்கு இதைவிட பெரிய உதாரணம் என்ன இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட பெண்ணை பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் சந்தித்தார்.
    • பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருப்பதைக் கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்கள் கவனித்தனர்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பேருந்தில் நேபாள பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    நேபாளி மொழி பேசி, அவரது நம்பிக்கையைப் பெற்ற பேருந்து ஓட்டுநரான முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய் , அவரது உதவியற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தக் கொடுமையைச் செய்தார்.

    இந்நிலையில் முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய் மற்றும் அவரது கூட்டாளி சுனில் குமார் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் ராய் மேற்கு வங்கத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் பரானி அருகே ஒரு ரெயிலில் கைது செய்யப்பட்டார். கார்த்திக் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது கூட்டாளி சுனில் குமார் அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்டார்.

    முசாபர்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான கார்த்திக் ராய் ஆகஸ்ட் 4 ஆம் தேதி, நேபாளத்திலிருந்து குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் பேரில் பணம் சம்பாதிக்க வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் சந்தித்தார்.

    வேலை தருவதாக உறுதியளித்து சுனில் குமாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு, அப்பெண்ணை பேருந்தில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்தார்.

    பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருப்பதைக்  உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்கள் கவனித்தனர். அவர்கள் கூர்க்கா சமாஜ் சமிதி தலைவர் சூரஜ் தாபாவிடம் தகவல் தெரிவித்தனர. அவர் பாதிக்கப்பட்டவரை காவல்துறையை அணுகி புகார் அளிக்க உதவினார்.

    சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.
    • காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள்.

    பீகாரின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பாஜகவுகான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில் பீகாரின் சீதாமர்ஹியில் இன்று நடந்த தேர்தல் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் ஷா உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "பீகார் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா இல்லையா? நமது அரசியலமைப்புச் சட்டம் இங்கு பிறக்காதவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்கவில்லை.

    ராகுல் காந்தி அரசியலமைப்புச் சட்டத்துடன் சுற்றித் திரிகிறார். அவர் அதைத் திறந்து படிக்க வேண்டும். ஊடுருவல்காரர்கள் அவரது வாக்கு வங்கி என்பதால் அவர் SIR-ஐ எதிர்க்கிறார்.

    ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலை நிறுத்த வேண்டும். இது ஒரு புதிய செயல்முறை அல்ல, உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.

    கடைசியாக அது 2003 இல் நடந்தது. இப்போது நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால், பீகாரில் உங்கள் தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.

    காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. மோடி ஜியின் அரசாங்கம் வந்தது, உரியில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தோம்.

    புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தினோம். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலளித்தோம்" என்று தெரிவித்தார்.  

    • மகள் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தந்தை கோபம்.
    • விடுதிக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தர்பங்கா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் பிஎஸ்சி (நர்ஸ்சிங்) 2ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார். இங்கு முதலாம் ஆண்டு படித்து வருபவர் தானு பிரியா. இவரும் நர்ஸிங் படித்து வருகிறார். இருவரும் காதலித்து சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர்.

    மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், தந்தைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. மகளின் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    தானுவின் தந்தை பிரேம்ஷங்கர் மருத்துவமனை விடுதிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் தானுவும், அவரது கணவரும் இருந்துள்ளனர். மேலும், ராகுல் குமாருடன் படிக்கும் மாணவர்களும் இருந்துள்ளனர்.

    பிரேம்ஷங்கர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுல் குமாரை சுட்டுள்ளார். இதில் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராகுல் குமார் உடன் படிக்கும் சக மாணவர்கள் பிரேம்ஷங்கரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ராகுலும், தானுவும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். ஒரே விடுதியில் தனித்தனி மாடியில் தங்கி படித்து வந்துள்ளனர். தானுவின் தந்தை மாறுவேடத்தில் வந்து ராகுலை நேற்று மாலை அணுகியுள்ளார். பின்னர்தான் தானுவின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.

    "எனது தந்தை துப்பாக்கி வைத்திருந்தார். எனது கணவர் மார்பில் என் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டார். ராகுல் என் மடியில் சாய்ந்தார்" என கண்ணீர் மல்க தானு தெரிவித்தார்.

    மேலும், எனக்கு அல்லது எனது கணவருக்கு என்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தை நாடியிருந்தோம் எனத் தெரிவித்தார்.

    • முன்பு பாராளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என்று மிரட்டினார்.
    • அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது.

    தேர்தல் ஆணையம் பாஜவுக்காக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், இதுதொடர்பாக தன்னிடம் அணுகுண்டு போன்ற ஆதாரம் உள்ளதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், "என்டிஏ கூட்டணி தலைமையிலான பாதை பீகாரின் முன்னேற்றத்துக்கானது. மற்றொரு பாதையான இந்தியா கூட்டணி, பீகாரை பழைய ஜாதி மோதல்களின் சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும்.

    ராகுல் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக கூறுகிறார். அவ்வாறான அணுகுண்டு இருந்தால் அதை அவர் உடனடியாக வெடிக்கச்செய்ய வேண்டும். ஆபத்திலிருந்து தன்னைத்தானே அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ராகுலின் பேச்சு வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு குறுக்கு வழி ஆகும்.

    இப்படித்தான் முன்பு பாராளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என்று மிரட்டினார். ஆனால் அங்கு பேசியபோது அது ஒரு ஈரமான பொய்யாக மாறியது.

    மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

    ஒரு அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உகந்தது அல்ல.

    அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது. 1975ல் அவசரநிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தைக் கொல்ல முயன்றது என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.  

    • 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
    • தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.

    பணிகள் முடிந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய தேர்தல் ஆணையத்தின் சதி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றச்ச்சாட்டை முன்வைத்தார்.

    வலைத்தளத்தில் EPIC நம்பர் உள்ளீடு செய்து பார்த்தபோது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் காட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியான பதிலளித்த தேர்தல் ஆணையம், "வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது" என்று தெரிவித்துள்ளது. 

    • படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    பீகார் மாநிலம் நாக்ரி ஹால்ட் என்ற பகுதியருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

    ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரெயில் பயணிகளை தாக்கியதாக போலீசாரின் விசாரணையில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

    • பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
    • பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    • அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
    • தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்டனாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ஷோபா தேவி.

    ஜானிபூரில் தனது கணவன் லாலன் குமார் குப்தா, அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மாலை ஷோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அந்நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அஞ்சலி, அன்ஷ் ஆகிய இருவரையும் தீவைத்து எரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×