என் மலர்
பீகார்
- பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன்.
- முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர் கூட சிறையில் இருந்தும் அரசாங்கத்தை இயக்க முடியும்.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
கயா-டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வைஷாலி-கோடெர்மா இடையேயான ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது. இந்த புனித பூமியில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நாட்டின் பலமாகும். அது வீண் போகாது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த உறுதி நிறைவேற்றுப்பட்டுள்ளது.
பீகார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே கருதுகிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எதுவும் அவர்கள் செய்யவில்லை.
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு தரப்படவில்லை. பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாரில் எந்த பெரிய திட்டமும் முடிக்கப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. தங்கள் பைகளை நிரப்புவதில் மட்டுமே மும்முரமாக இருந்தனர்.
பீகார் மக்களை தனது மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டேன் என்று காங்கிரஸ் முதல்வர் ஒருவர் கூறியிருந்தார். பீகார் மக்கள் மீது காங்கிரஸ் கொண்ட வெறுப்பை யாராலும் மறக்க முடியாது. இதை ராஷ்டிரிய ஜனதா தளம் கண்டு கொள்ளவில்லை.
பீகார் இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் வேலை பெறவும், அவர்களுக்கு மரியாதை கிடைக்கவும், அவர்கள் பெற்றோருடன் தங்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது.
பீகாரில் இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்கள் ஆகும். சுகாதார உள்கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்படும்.
ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே தனது வேலையை இழப்பார். ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர் கூட சிறையில் இருந்தும் அரசாங்கத்தை இயக்க முடியும்.
சில நாட்களுக்கு முன்பு, சிறையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட்டது, அரசாங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடந்தன.
தலைவர்களுக்கு அத்தகைய அணுகுமுறை இருந்தால் ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும். எனவே ஊழலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வரம்பிற்குள் பிரதமரும் வருகிறார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பதவியில் இருந்து நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்.
இதன்மூலம் யாராலும் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்ய முடியாது. யாரும் சிறையில் இருந்த படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை இழக்க வேண்டும்.
எனவே இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகள்தான் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிடுகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றனர்.
- பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது.
- எனவே ஊழலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதன்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ஆரிப் கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலையில் 1.86 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலையாக, ரூ.1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 8.15 கிலோ மீட்டர் நீளமுள்ள அவுண்டா-சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

கயா-டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வைஷாலி-கோடெர்மா இடையேயான ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
பீகாரில் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அமித்ஷா.
அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் மக்களவை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்களும், நாட்டின் நிறுவனர்களும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த மசோதா நல்லதென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
- அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை எதிர்த்து பீகாரில் கடந்த 17 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கினார். 16 நாட்கள் நடக்கும் இந்த பயணம் வரும் செப்டம்பர் 1 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் முடிவடையும்.
இந்நிலையில் நேற்று ராகுல் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தவறி ஜீப் முன் விழுந்தார். அவர் மீது ஜீப் ஏறி இறங்கியது.
உடனடியாக, போலீஸ் அதிகாரிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் வாகனத்தை பின்னுக்குத் தள்ளி காயமடைந்த கான்ஸ்டபிளைக் காப்பாற்றினர்.
ராகுல் காந்தி தண்ணீர் வழங்கி காயமடைந்த கான்ஸ்டபிளை ஆசுவாசப் படுத்தினார். தனது ஜீப்பில் வந்து அமருமாறு அவரை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கான்ஸ்டபிள் அதை மறுத்துவிட்டு வலியுடன் நடத்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்து பாஜக ராகுலை விமர்சித்துள்ளது.
- பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் உரிமை என்ற பெயரில் ராகுல் காந்தி பேரணி.
- ராகுல் காந்தி பேரணியில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகாளர்கள் பெயரை நீக்கிவிட்டது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி "வாக்காளர்கள் உரிமை" என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் கலந்து கொண்டார்.
அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "அடுத்த முறை, நாம் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். எதிர்க்கட்சிகள் இதற்காக பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார். இது, 2029 தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் (இந்தியா கூட்டணி) பிரதமர் வேட்பாளராக பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறிய நிலையில், மற்ற தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை.
நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மோடியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லியார்ஜூன கார்கே செயல்பட்டார். இந்த கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தேர்தல் சந்தித்தது.
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விரும்பவில்லை. கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என பரிந்துரை செய்தன. இதற்கு முக்கிய காரணம் 2019 தேர்தலில் காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பிடித்தது.
மம்தா, கெஜ்ரிவால் பரிந்துரையை கார்கே ஏற்கவில்லை. இதனால் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தது.
இந்த நிலையில்தான் தேஜஸ்வி யாதவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை 2029 தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்
- தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
நேற்று பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் கயாவில் மூன்றாவது நாள் 'வாக்காளர் உரிமை' யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். ஜீப்பில் சென்ற ராகுல் காந்திக்கு இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.
- தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் என்னிடம் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்கிறார்கள். வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.
தேர்தல் ஆணையத்திடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், முழு நாடும் உங்களிடம் ஒரு பிரமாணப் பத்திரம் கேட்கும். நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் வாக்கு திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம்.
தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்
- 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- வாக்கு திருட்டுக்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது
நிதிஷ் குமார் தலைமை யில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.
வாக்கு திருட்டுக்கு எதிராகவும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதி யில் தொடங்கிய யாத்திரை 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவை கடந்து 20 மாவட்டங்கள் வழியாக செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் முடிவடையும்.
இதற்கிடையே பாஜகவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
- பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
- பா.ஜ.க. கூறி வரும் இரட்டை என்ஜினின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் மாறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வரும் பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இத்தகைய வாக்காளர் பட்டியல் மோசடிகளுக்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார்.
'வாக்காளர் உரிமை யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இன்று தொடங்குகிறது.
மாநிலம் முழுவதும் 16 நாட்களாக 1,300 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தலைநகர் பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.
ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரையில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி மற்றும் பீகாரின் மெகா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.
இதைப்போல யாத்திரை நிறைவில் பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ராகுல் காந்தி எப்போதெல்லாம் ஒரு யாத்திரைக்கு புறப்படும்போது, இந்த நாட்டின் ஜனநாயகம் ஒரு பக்கத்தை புரட்டுகிறது. வாக்காளர் உரிமை யாத்திரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணமாக இருக்கும். நமது ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
பா.ஜ.க. கூறி வரும் இரட்டை என்ஜினின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் மாறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். இதற்கு எதிராக போராடி வருகிறோம், எதிர்காலத்திலும் போராடுவோம்.
வாக்கு திருட்டு சதிகாரர்கள் பின்வாங்க மாட்டார்கள், அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள் என்பதால் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான ஒரு பயணம் இது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற உரிமைக்காக போராட திட்டமிட்ட யாத்திரை இது.
சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுவாசிக்க முடியும், ஏனென்றால் நமக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாக சுவாசிக்க ராகுல் காந்தி ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இவ்வாறு பவன் கெரா கூறினார்.
இதற்கிடையே வாக்கு திருட்டு தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை மீண்டும் கூர்மையாக்கி உள்ளார்.
'காணாமல் போன வாக்கு' என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், ஒருவர் தனது வாக்கு திருடப்பட்டதாகவும், லட்சக்கணக்கான வாக்குகள் திருடு போயிருப்பதாகவும் போலீசில் புகார் செய்கிறார்.
இதைக்கேட்டு தங்கள் வாக்குகளும் திருடப்பட்டு இருக்குமோ என போலீசாரே திகைப்பதாக அந்த வீடியோ பதிவு உள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, 'இனியும் வாக்குகளை திருட முடியாது, மக்கள் விழித்து விட்டார்கள்' என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, வாக்கு திருட்டுக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம், நமது உரிமைகளை பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளது.
- தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
- இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை, பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 250 எம்பிக்கள் பாதி வழியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் இதை உறுதிப்படுத்தி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வரைவு பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இந்த நடைபயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
- பீகாரில் உள்ள ஒரு பெண்மணியின் வயது 124 என வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதை ராகுல் காந்தி வெளிப்படுத்திய நிலையில், பிரியங்கா காந்தி அந்த பெண் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார்.
காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்ததாக கூறினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடிகளையும் சுட்டிக் காட்டினார். எடுத்துக்காட்டாக பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிந்தாதேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதை குறிப்பிட்டார்.
பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில தினங்களாக பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் நடந்தபோது பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் டீ-சர்ட் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் அணிந்து இருந்த டி.சர்ட் முன் பகுதியில் மிந்தாதேவியின் புகைப்படமும் பின் பகுதியில் 124 நாட்அவுட் என்றும் பொறிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மிந்தாதேவி பற்றிய தகவல்கள் நேற்று நாடு முழுவதும் பரவியது.
ஒரே நாளில் புகழ்பெற்ற மிந்தாதேவிக்கு 35 வயது ஆகிறது. இவர் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள பிரபுநாத் நகரில் வசித்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் 124 என்று தவறாக இருப்பதை 2 தினங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி பிரியங்கா போராட்டம் நடத்தியதால் அவர் கடும் கோபம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது புகைப்படத்தை டி.சர்ட்டில் பொறித்து அணிந்து கொள்வதற்கு பிரியங்கா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் யார்? அவர் என் சொந்தக்காரரா? எதற்காக அவர் என் அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்?
அவரது இந்த செயலால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நிறைய பிரச்சி–னைகளை சந்திப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனது படத்தை பிரியங்கா அணிந்து இருப்பது போன்று பார்த்து விட்டு எனது நண்பர்கள், உறவினர்கள் தொடர்ந்து அழைத்து பேசியபடி உள்ளனர்.
என்னால் வெளியில் செல்ல இயலவில்லை. என் வீட்டை சுற்றி சுற்றி நிருபர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பிரியங்காவின் செயலால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். பிரியங்கா பிரசாரத்துக்கு என்னை ஏன் பயன்படுத்துகிறார்?
நான் சாதாரண குடும்ப பெண். திடீரென அரசியல் ரீதியாக எனது படம் பயன்படுத்தி இருப்பது என்னை மிகவும் வேதனைக் குள்ளாக்கி இருக்கிறது. என்னை பலிகடா ஆக்கக் கூடாது? வாக்காளர் பட்டியலில் உள்ள எனது வயது தவறை சரி செய்து கொடுத்தாலே போதுமானது.
நான் எனது கணவர், குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். என் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பிரியங்கா நடந்துள்ளார். அவர் ஏன் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்.
எனக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு எனக்கு தொல்லை ஏற்படுத்தி உள்ளார். இதை எப்படி எனக்கு பிரியங்கா கொடுத்த ஆதரவாக கருத முடியும். என்னை தவறான முறையில் அவர் பிரசாரம் செய்து உள்ளார்.
இந்த தவறுக்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தவறை திருத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எனது முகவரியை பிரியங்கா நாடு முழுவதும் வெளிப்படுத்தி எனக்கு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறார். இதை செய்வதற்கு அவர் யார்?
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகாரில் டிரம்புக்கு வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது
- நாய் பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 'Catty Boss', 'Cat Kumar' 'Cattiya Devi' Q எனக்குறிப்பிட்டு, பூனையொன்றுக்கு வசிப்பிடச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பம் வந்துள்ளது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உதிதா சிங், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஏற்கெனவே சோனாலிகா டிராக்டர்', 'டொனால்ட் டிரம்ப்' பெயர்களுக்கு பீகாரில் வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.






