என் மலர்tooltip icon

    பீகார்

    • வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.
    • தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்.

    நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் என்னிடம் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்கிறார்கள். வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.

    தேர்தல் ஆணையத்திடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், முழு நாடும் உங்களிடம் ஒரு பிரமாணப் பத்திரம் கேட்கும். நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் வாக்கு திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம்.

    தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்

    • 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • வாக்கு திருட்டுக்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது

    நிதிஷ் குமார் தலைமை யில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

    இந்தநிலையில் பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    வாக்கு திருட்டுக்கு எதிராகவும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதி யில் தொடங்கிய யாத்திரை 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவை கடந்து 20 மாவட்டங்கள் வழியாக செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் முடிவடையும்.

    இதற்கிடையே பாஜகவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. 

    • பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
    • பா.ஜ.க. கூறி வரும் இரட்டை என்ஜினின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் மாறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார்.

    இதற்கிடையே சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வரும் பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இத்தகைய வாக்காளர் பட்டியல் மோசடிகளுக்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    'வாக்காளர் உரிமை யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இன்று தொடங்குகிறது.

    மாநிலம் முழுவதும் 16 நாட்களாக 1,300 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தலைநகர் பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

    ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரையில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி மற்றும் பீகாரின் மெகா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

    இதைப்போல யாத்திரை நிறைவில் பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ராகுல் காந்தி எப்போதெல்லாம் ஒரு யாத்திரைக்கு புறப்படும்போது, இந்த நாட்டின் ஜனநாயகம் ஒரு பக்கத்தை புரட்டுகிறது. வாக்காளர் உரிமை யாத்திரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணமாக இருக்கும். நமது ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

    பா.ஜ.க. கூறி வரும் இரட்டை என்ஜினின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் மாறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். இதற்கு எதிராக போராடி வருகிறோம், எதிர்காலத்திலும் போராடுவோம்.

    வாக்கு திருட்டு சதிகாரர்கள் பின்வாங்க மாட்டார்கள், அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள் என்பதால் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான ஒரு பயணம் இது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற உரிமைக்காக போராட திட்டமிட்ட யாத்திரை இது.

    சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுவாசிக்க முடியும், ஏனென்றால் நமக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாக சுவாசிக்க ராகுல் காந்தி ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

    இவ்வாறு பவன் கெரா கூறினார்.

    இதற்கிடையே வாக்கு திருட்டு தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை மீண்டும் கூர்மையாக்கி உள்ளார்.

    'காணாமல் போன வாக்கு' என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், ஒருவர் தனது வாக்கு திருடப்பட்டதாகவும், லட்சக்கணக்கான வாக்குகள் திருடு போயிருப்பதாகவும் போலீசில் புகார் செய்கிறார்.

    இதைக்கேட்டு தங்கள் வாக்குகளும் திருடப்பட்டு இருக்குமோ என போலீசாரே திகைப்பதாக அந்த வீடியோ பதிவு உள்ளது.

    இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, 'இனியும் வாக்குகளை திருட முடியாது, மக்கள் விழித்து விட்டார்கள்' என்றும் கூறியுள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, வாக்கு திருட்டுக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம், நமது உரிமைகளை பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளது.



    • தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
    • இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    கடந்த திங்கள்கிழமை, பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 250 எம்பிக்கள் பாதி வழியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் 'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் இதை உறுதிப்படுத்தி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வரைவு பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இந்த நடைபயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    • பீகாரில் உள்ள ஒரு பெண்மணியின் வயது 124 என வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • இதை ராகுல் காந்தி வெளிப்படுத்திய நிலையில், பிரியங்கா காந்தி அந்த பெண் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார்.

    காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்ததாக கூறினார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடிகளையும் சுட்டிக் காட்டினார். எடுத்துக்காட்டாக பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிந்தாதேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதை குறிப்பிட்டார்.

    பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை கண்டித்து கடந்த சில தினங்களாக பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போராட்டம் நடந்தபோது பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் டீ-சர்ட் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அவர்கள் அணிந்து இருந்த டி.சர்ட் முன் பகுதியில் மிந்தாதேவியின் புகைப்படமும் பின் பகுதியில் 124 நாட்அவுட் என்றும் பொறிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மிந்தாதேவி பற்றிய தகவல்கள் நேற்று நாடு முழுவதும் பரவியது.

    ஒரே நாளில் புகழ்பெற்ற மிந்தாதேவிக்கு 35 வயது ஆகிறது. இவர் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள பிரபுநாத் நகரில் வசித்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் 124 என்று தவறாக இருப்பதை 2 தினங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி பிரியங்கா போராட்டம் நடத்தியதால் அவர் கடும் கோபம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது புகைப்படத்தை டி.சர்ட்டில் பொறித்து அணிந்து கொள்வதற்கு பிரியங்கா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் யார்? அவர் என் சொந்தக்காரரா? எதற்காக அவர் என் அனுமதி இல்லாமல் என் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்?

    அவரது இந்த செயலால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நிறைய பிரச்சி–னைகளை சந்திப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனது படத்தை பிரியங்கா அணிந்து இருப்பது போன்று பார்த்து விட்டு எனது நண்பர்கள், உறவினர்கள் தொடர்ந்து அழைத்து பேசியபடி உள்ளனர்.

    என்னால் வெளியில் செல்ல இயலவில்லை. என் வீட்டை சுற்றி சுற்றி நிருபர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பிரியங்காவின் செயலால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். பிரியங்கா பிரசாரத்துக்கு என்னை ஏன் பயன்படுத்துகிறார்?

    நான் சாதாரண குடும்ப பெண். திடீரென அரசியல் ரீதியாக எனது படம் பயன்படுத்தி இருப்பது என்னை மிகவும் வேதனைக் குள்ளாக்கி இருக்கிறது. என்னை பலிகடா ஆக்கக் கூடாது? வாக்காளர் பட்டியலில் உள்ள எனது வயது தவறை சரி செய்து கொடுத்தாலே போதுமானது.

    நான் எனது கணவர், குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். என் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பிரியங்கா நடந்துள்ளார். அவர் ஏன் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்.

    எனக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு எனக்கு தொல்லை ஏற்படுத்தி உள்ளார். இதை எப்படி எனக்கு பிரியங்கா கொடுத்த ஆதரவாக கருத முடியும். என்னை தவறான முறையில் அவர் பிரசாரம் செய்து உள்ளார்.

    இந்த தவறுக்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தவறை திருத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எனது முகவரியை பிரியங்கா நாடு முழுவதும் வெளிப்படுத்தி எனக்கு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறார். இதை செய்வதற்கு அவர் யார்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகாரில் டிரம்புக்கு வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது
    • நாய் பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.

    சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 'Catty Boss', 'Cat Kumar' 'Cattiya Devi' Q எனக்குறிப்பிட்டு, பூனையொன்றுக்கு வசிப்பிடச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பம் வந்துள்ளது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உதிதா சிங், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    ஏற்கெனவே சோனாலிகா டிராக்டர்', 'டொனால்ட் டிரம்ப்' பெயர்களுக்கு பீகாரில் வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெட்டிக்குள் மளமளவென ஏறிய பயணிகள்.
    • மூச்சுவிடக் கூட இடமில்லாத அளவிற்கு பயணிகள் ஏறியதால் மூச்சுத் திணறல்.

    பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. முன்பதிவு செய்யப்படாத 2ஆவது வகுப்பு பெட்டியில் இளம்பெண் ஒருவர் எப்படியோ ஏறிவிட்டார். அவரைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக மளமளவென கூட்டம் ரெயில் பெட்டிக்குள் ஏறியது. 10 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 20 முதல் 30க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து ஏறினர். இதனால் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த இளம்பெண், காற்றுக்காக ஏங்கினாள். இதனால் ஜன்னல் கண்ணாடியை திறக்க முயன்றார். ஆனால் மறுமுனையில் இருந்து கூட்டம் கண்ணாடியை மூடிக்கொண்டு மறுவழியாக ஏறத்தொடங்கியது. இறுதியாக எப்படியோ கண்ணாடியை திறக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாடா, உயிர் பிழைத்தோம் என காற்றை சற்று சுவாசித்தார். பின்னர் பாட்டிலில் உள்ள தண்ணீர் மூலம் முகம் கழுவினார்.

    இதனைத் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பயணிகள் அந்த பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை. அதற்குப் பதிலாக கேலி கிண்டல் செய்து, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு பெண் மூச்சு விட முடியாமல் திணறி, சற்று இளைப்பாறியதை கிண்டல் செய்து, போட்டோ எடுத்தது முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    • கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
    • பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன.

    பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடைவிடாத கனமழை காரணமாக போஜ்பூர், பாட்னா, பாகல்பூர், வைஷாலி, லகிசாரை, சரன், முங்கர், ககாரியா, பெகுசாரை மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதன்காரணமாக 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 32 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    • மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

    பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர் கான். கான் சார் என தனது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.

    வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. கான் சார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர்.

    மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

    • தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது.
    • வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    பாட்னா:

    ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஒரு பெரிய மோசடி என்று நாங்கள் பலமுறை கூறி உள்ளோம். பீகாரின் துணை முதல்-மந்திரி விஜய் குமார் சின்காவுக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. இவை 2 வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கிறது. ஒன்றில் 57 வயது என்றும் மற்றொன்றில் 60 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ளது. எனவே யார் மோசடி செய்கிறார்கள் என்பதை மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். இதில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் முழு செயல்முறையும் மோசடியானது அல்லது பீகார் துணை முதல்-மந்திரி ஒரு மோசடி செய்துள்ளார் என்பதாகும்.

    இவ்விவகாரத்தில் விஜய் சின்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்பப் பெற்று தேர்தல் கமிஷனர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு பிறகும், பீகாரின் துணை முதல்-மந்திரியின் பெயர் 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பது இந்த மோசடிக்கு இதைவிட பெரிய உதாரணம் என்ன இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட பெண்ணை பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் சந்தித்தார்.
    • பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருப்பதைக் கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்கள் கவனித்தனர்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பேருந்தில் நேபாள பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

    நேபாளி மொழி பேசி, அவரது நம்பிக்கையைப் பெற்ற பேருந்து ஓட்டுநரான முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய் , அவரது உதவியற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தக் கொடுமையைச் செய்தார்.

    இந்நிலையில் முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய் மற்றும் அவரது கூட்டாளி சுனில் குமார் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் ராய் மேற்கு வங்கத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் பரானி அருகே ஒரு ரெயிலில் கைது செய்யப்பட்டார். கார்த்திக் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது கூட்டாளி சுனில் குமார் அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்டார்.

    முசாபர்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான கார்த்திக் ராய் ஆகஸ்ட் 4 ஆம் தேதி, நேபாளத்திலிருந்து குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் பேரில் பணம் சம்பாதிக்க வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் சந்தித்தார்.

    வேலை தருவதாக உறுதியளித்து சுனில் குமாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு, அப்பெண்ணை பேருந்தில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்தார்.

    பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருப்பதைக்  உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்கள் கவனித்தனர். அவர்கள் கூர்க்கா சமாஜ் சமிதி தலைவர் சூரஜ் தாபாவிடம் தகவல் தெரிவித்தனர. அவர் பாதிக்கப்பட்டவரை காவல்துறையை அணுகி புகார் அளிக்க உதவினார்.

    சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.
    • காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள்.

    பீகாரின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பாஜகவுகான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில் பீகாரின் சீதாமர்ஹியில் இன்று நடந்த தேர்தல் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் ஷா உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "பீகார் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா இல்லையா? நமது அரசியலமைப்புச் சட்டம் இங்கு பிறக்காதவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்கவில்லை.

    ராகுல் காந்தி அரசியலமைப்புச் சட்டத்துடன் சுற்றித் திரிகிறார். அவர் அதைத் திறந்து படிக்க வேண்டும். ஊடுருவல்காரர்கள் அவரது வாக்கு வங்கி என்பதால் அவர் SIR-ஐ எதிர்க்கிறார்.

    ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலை நிறுத்த வேண்டும். இது ஒரு புதிய செயல்முறை அல்ல, உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.

    கடைசியாக அது 2003 இல் நடந்தது. இப்போது நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால், பீகாரில் உங்கள் தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.

    காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. மோடி ஜியின் அரசாங்கம் வந்தது, உரியில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தோம்.

    புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தினோம். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலளித்தோம்" என்று தெரிவித்தார்.  

    ×