என் மலர்
இந்தியா

வாக்காளர் உரிமை யாத்திரை: புல்லெட் பைக்கில் பேரணி சென்ற ராகுல் - தேஜஸ்வி - வீடியோ
- கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார்.
- 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார்.
ராகுல்காந்தி நேற்று, யாத்திரையின் போது கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார். அவர்களுடன் கலந்துரையாடினார். விவசாயிகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார். பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்






