search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்
    X

    வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

    பசியை தூண்டுற சக்தி பிரண்டை செடிக்கு உண்டு. வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
    தேவையான பொருட்கள் :



    பிரண்டை - ஒரு கட்டு
    மிளகாய் வற்றல் - 5
    புளி - சிறிதளவு
    தேங்காய் - 1 பத்தை
    உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    உப்பு - சுவைக்கு
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு.

    செய்முறை :

    * பிரண்டையின் நரம்புகளை எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.



    * தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பிரண்டையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மிளகாய் மிளகாய் வற்றல், புளி, உளுத்தம் பருப்பு, தேங்காய், அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

    * வதக்கிய அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுந்து போட்டு தாளித்து அரைத்த பிரண்டை துவையலில் கொட்டி பரிமாறவும்.

    * சத்தான பிரண்டை துவையல் ரெடி.

    பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்து விடும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×