search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு
    X

    சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு

    எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 3
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது

    மசாலா பொருட்கள் :

    பட்டை - 1 இன்ச்
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 3
    சோம்பு - 1 டீஸ்பூன்

    செட்டிநாடு மசாலா பொடிக்கு :

    வரமிளகாய் - 6
    மல்லி - 4 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 5 செ.மீ
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் - 5
    அன்னாசிப்பூ - 1

    தேங்காய் மசாலாவிற்கு :

    தேங்காய் - 1 கப்
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

    * மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 'செட்டிநாடு மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கவும்.

    * அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7 விசில் விட்டு, குறைவான தீயில் 20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, இறக்கவும்.

    * பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×