என் மலர்
ஆசிரியர் தேர்வு
- பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
- கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) மற்றும் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி (40) குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ட்ரூடோவும், கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்து வருவதாக அணமைக் காலமாக வந்த கிசுகிச்சுகளை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பராவில், படகு ஒன்றில் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது இவை எடுக்கப்பட்டுள்ளன.
இதில், பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலும், ட்ரூடோ, பெர்ரியின் கன்னத்தில் முத்தமிடும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்தச் காட்சியை நேரில் பார்த்த ஒரு சாட்சி, படகில் இருந்தவர்கள் ட்ரூடோ மற்றும் பெர்ரி என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஜூலை 28 அன்று மாண்ட்ரீலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருவரும் இரவு உணவு சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே இவர்கள் டேட்டிங் செய்வதாக முதன்முதலில் செய்திகள் வெளியாகின.
கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.
அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. எனினும், சில காரணங்களால் ஜூன் 2025-ல் அவர்களின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கனடா பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடடோ விலகியது குறிப்பிடத்தக்கது.
- நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக நடவடிக்கை.
- சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்உஎம்.நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டுள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
- ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.
ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.
இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு
இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.
அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவை 81 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (19.4 ஓவர்) நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவவிட்டது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இன்னும் சோபிக்கவில்லை. அவர்கள் போதிய ரன் சேர்த்தால் சவாலான ஸ்கோரை எட்டலாம். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, சினே ராணா, கிரந்தி கவுட் சிறப்பாக செயல்படுகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் மிடில் வரிசையில் விக்கெட்டுகளை துரிதமாக இழந்தது பின்னடைவாக அமைந்தது. அந்த பலவீனத்தை இந்தியா சரி செய்தாக வேண்டும். அத்துடன் பீல்டிங்கிலும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அடுத்து நடக்க இருந்த இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. பேட்டிங்கில் பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், கேப்டன் அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரியும், பந்து வீச்சில் அனபெல் சுதர்லாண்ட், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்டும் மிரட்டுகிறார்கள்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் உள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்த இந்திய அணியினர் அந்த நம்பிக்கையுடன் அவர்களை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார்கள். ஆனால் அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எல்லா வகையிலும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் சாதிக்க முடியும். இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம் அல்லது சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.
- அதானி குழுமம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதனை குழுமம் மற்றும் செபி திட்டவட்டமாக மறுத்தது. பின்னர் சிறிதுகாலம் களைத்து மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மீடனும் பழைய நிலைமைக்கு உயர்ந்தது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பேசிய கவுதம் அதானி, "ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமம் சந்தை மதிப்பில் $100 பில்லியனை (இந்திய மதிப்பில் ரூ.8.8 லட்சம் கோடி) இழந்து விட்டது. முற்றிலும் பொய்யை ஆயுதமாக்கியதன் விளைவால், அந்த இழப்புகள் ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.
- சிம்ரன் நடிப்பில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
- டூரிஸ்ட் பேமிலி படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தமிழ் திரை உலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சிம்ரன்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சேலை கட்டி நடந்து வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
- இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
காசா:
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.
இதனையடுத்து காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
- இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
- தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.
அப்போது அவர்," 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.
மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் முழு விவரம்:
பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது.
இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டிக்கு விருது வழங்கப்பட்டது.
2021ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது திருநாவுக்கரது, நெல்லை ஜெயந்தா, எஸ்.சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது சாந்தகுமாரி, அப்துல்காதர், முத்துகணேசனுக்கு வழங்கப்பட்டது.
2023ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது, கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
- நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.
இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷியாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறினார்.
ரஷியாவுக்காக போராடி சுமார் 600 வட கொரிய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தென் கொரியா அண்மையில் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது .
- அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பிர், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 எனத் தொடரை இழந்ததை ஒருபோதும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
12 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வி அடைந்தது. கம்பிர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
இது தொடர்பாக கவுதம் கம்பிர் கூறியதாவது:-
நான் நேர்மையாகவும் மனதாரவும் பேச வேண்டுமென்றால், எனது பயிற்சி காலத்தில் அதை ஒருபோதும் மறக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அதை நான் மறந்துவிடக் கூடாது. இதை நான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன். முன்னோனக்கி செல்வதற்கு இது முக்கியம், அதேவேளையில் சில சமயங்களில் கடந்த காலத்தையும் நினைவில் கொள்வது முக்கியம்.
எல்லோரும் நியூசிலாந்தை வீழ்த்துவோம் என்று நினைத்தார்கள். அந்த டிரஸ்ஸிங் அறையில், நியூசிலாந்து நம்மை தோற்கடித்தது என்பதை தொடர்ந்து நினைவூட்ட வேண்டும்.
இவ்வாறு கம்பிர் தெரிவித்துள்ளார்.
- அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இட்லி கடை படத்தை இயக்கி நடித்த தனுஷ்-க்கு அவரின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள்
தனுஷ் (@dhanushkraja) தம்பி என கூறினார்.






