என் மலர்
நீங்கள் தேடியது "Kalaimamani Award"
- 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.
- திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்பட 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.

கலைமாமணி விருது பெற்றவர்களில் 30 ஆண்டுகளாக 575-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் நிகில் முருகனும் ஒருவர். 1988-ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், கே. பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், பாலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரைத்துறை உச்ச பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும் திறம்பட செய்துள்ளார்.
- கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்," என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா கேட்டார்.
அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
- இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
- தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.
அப்போது அவர்," 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.
மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் முழு விவரம்:
பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது.
இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டிக்கு விருது வழங்கப்பட்டது.
2021ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது திருநாவுக்கரது, நெல்லை ஜெயந்தா, எஸ்.சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது சாந்தகுமாரி, அப்துல்காதர், முத்துகணேசனுக்கு வழங்கப்பட்டது.
2023ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது, கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை. கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது தங்கம் விலை. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் தமிழிசை -முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகின்றனர்
- கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலை ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும்.
கடந்த 2016-ம் ஆண்டு 2010, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப் படவில்லை.
இந்த நிலையில் தற்போது 2013 முதல் 2021 வரை 9 ஆண்டுகளுக்கு கலை மாமணி விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் கடந்த 24-ந் தேதி அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பெறப்பட்ட 743 விண்ணப்பங்களில் 216 கலைஞர்கள் கலைமாமணி விருதுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டனர். இயல் பிரிவில் நாராயணசாமி, ராமலிங்கம், நமச்சிவாயம், பாஞ்.ராமலிங்கம், பூபதி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 44 பேரும் இசை பிரிவில் கந்தசாமி, அன்னபூரணி, தமிழரசன், ராஜரத்தினம், ஜெயா, தருமு, ராஜ்முகில் உள்ளிட்ட 38 பேரும் நாடகப் பிரிவில் முனுசாமி, ஏழுமலை, கலி யபெருமாள், ஜெயபாலன், ஆனந்த கிருஷ்ணன், நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 39 பேரும் நடனப்பிரிவில் ரகுநாத், ராகினி, சீனிவாஸ், சங்கீதா தாஸ், ரஷ்யா, தலியா சகாயராஜ், ஆனந்த பால யோகி பவானி உள்ளிட்ட 21 பேருக்கும் ஓவியம் மற்றும் சிற்ப பிரிவில் சுப்பி ரமணியன், அழகுமுத்து, மாசிலாமணி, காந்தா, ராஜராஜன், தட்சி ணாமூர்த்தி உள்ளிட்ட 35 பேருக்கும் நாட்டுப்புறக் கலை பிரிவில் வீரப்பன், கலியமூர்த்தி, காத்தமுத்து, சாமிகண்ணு, முத்துலிங்கம், ஞானமூர்த்தி உள்ளிட்ட 38 பேருக்கும் என மொத்தம் 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கான விழா இன்று (சனிக்கிழமை) மாலை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விருதா ளர்களுக்கு விருதுகளை வழங்குகின்றனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அமைச்சர்கள் மற்றும்
எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கி ன்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் கலைப் பண்பாட்டு துறையில் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பம் அளித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ் தொண்டிற்கான தமிழ்மா மணி விருது, தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் கம்பன் புகழ் பரிசு, தொல்காப்பியர் விருது சிறுவர் நூலுக்கு நேரு புகழ் பரிசு ஆகியவற்றிற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
- எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.
தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.
புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.
இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.
இவ்வாறு தமிழிசை பேசினார்.








