என் மலர்
நீங்கள் தேடியது "கலைமாமணி விருது"
- 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.
- திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்பட 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.

கலைமாமணி விருது பெற்றவர்களில் 30 ஆண்டுகளாக 575-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் நிகில் முருகனும் ஒருவர். 1988-ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், கே. பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், பாலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரைத்துறை உச்ச பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும் திறம்பட செய்துள்ளார்.
- கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்," என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா கேட்டார்.
அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.
- இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
- தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.
அப்போது அவர்," 90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.
மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களின் முழு விவரம்:
பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது.
இசை பிரிவில் குரலிசை பாபநாசம் அசோக் ரமணி, தேவார இசை ஓதுவார் சற்குருநாதன் விருது பெற்றனர்.
தமிழிசை பாடகர் டி.ஏ.எஸ். தக்கேசி, மிருதங்க வித்துவான் திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.
இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், இயக்குநர் லிங்குசாமிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டிக்கு விருது வழங்கப்பட்டது.
2021ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது திருநாவுக்கரது, நெல்லை ஜெயந்தா, எஸ்.சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது.
2022ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது சாந்தகுமாரி, அப்துல்காதர், முத்துகணேசனுக்கு வழங்கப்பட்டது.
2023ம் ஆண்டுக்கான இயல் பிரிவு கலைமாமணி விருது, கவிஞர் ஜீவபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை. கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது தங்கம் விலை. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
- கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
சினிமா, கலைத்துறையில் சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, சாய்பல்லவி, அனிருத் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கலைமாமணிக்கு பதிலாக கொலைமாமணி விருது அளிக்கலாம் என சமூக வலைத்தள பயனர்கள் காட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.
இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி அவர்களும், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன்,
பெரிய மேளத்துக்காக முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.
இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி. பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் "வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்" என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு.
இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
- விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா அறிக்கை வெளியியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும். என் அன்பும் ஆருயிருமான எ ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
- கலைமாமணி விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
- விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
* 2021 - திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.
* 2021 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது.
* 2021 - திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.
* 2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.
* 2022 - நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.
* 2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.
* 2022 - கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.
* 2023 - திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2023 - குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.
* 2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்
* 2023 - நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
* பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.
* பாரதியார் விருது - முருகேச பாண்டியன்
* எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது - யேசுதாஸ்
* பால சரஸ்வதி விருது - முத்து கண்ணம்மாள்
* எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
- எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.
தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.
புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.
இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.
இவ்வாறு தமிழிசை பேசினார்.






