search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    216 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது
    X

    கோப்பு படம்.

    216 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது

    • கவர்னர் தமிழிசை -முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகின்றனர்
    • கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலை ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும்.

    கடந்த 2016-ம் ஆண்டு 2010, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப் படவில்லை.

    இந்த நிலையில் தற்போது 2013 முதல் 2021 வரை 9 ஆண்டுகளுக்கு கலை மாமணி விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் கடந்த 24-ந் தேதி அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பெறப்பட்ட 743 விண்ணப்பங்களில் 216 கலைஞர்கள் கலைமாமணி விருதுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டனர். இயல் பிரிவில் நாராயணசாமி, ராமலிங்கம், நமச்சிவாயம், பாஞ்.ராமலிங்கம், பூபதி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 44 பேரும் இசை பிரிவில் கந்தசாமி, அன்னபூரணி, தமிழரசன், ராஜரத்தினம், ஜெயா, தருமு, ராஜ்முகில் உள்ளிட்ட 38 பேரும் நாடகப் பிரிவில் முனுசாமி, ஏழுமலை, கலி யபெருமாள், ஜெயபாலன், ஆனந்த கிருஷ்ணன், நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 39 பேரும் நடனப்பிரிவில் ரகுநாத், ராகினி, சீனிவாஸ், சங்கீதா தாஸ், ரஷ்யா, தலியா சகாயராஜ், ஆனந்த பால யோகி பவானி உள்ளிட்ட 21 பேருக்கும் ஓவியம் மற்றும் சிற்ப பிரிவில் சுப்பி ரமணியன், அழகுமுத்து, மாசிலாமணி, காந்தா, ராஜராஜன், தட்சி ணாமூர்த்தி உள்ளிட்ட 35 பேருக்கும் நாட்டுப்புறக் கலை பிரிவில் வீரப்பன், கலியமூர்த்தி, காத்தமுத்து, சாமிகண்ணு, முத்துலிங்கம், ஞானமூர்த்தி உள்ளிட்ட 38 பேருக்கும் என மொத்தம் 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

    இதற்கான விழா இன்று (சனிக்கிழமை) மாலை கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விருதா ளர்களுக்கு விருதுகளை வழங்குகின்றனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அமைச்சர்கள் மற்றும்

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கி ன்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் கலைப் பண்பாட்டு துறையில் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பம் அளித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ் தொண்டிற்கான தமிழ்மா மணி விருது, தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் கம்பன் புகழ் பரிசு, தொல்காப்பியர் விருது சிறுவர் நூலுக்கு நேரு புகழ் பரிசு ஆகியவற்றிற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

    Next Story
    ×