என் மலர்
ஆசிரியர் தேர்வு
- முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர்.
- இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'அகண்டா-2 தாண்டவம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார்.
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் வெளியாகலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வை நடத்த இருக்கும் அரசு தேர்வுத்துறை, பொதுத்தேர்வு தொடர்பான அட்டணைகளை தயாரித்து, அதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்திருப்பதாக சொல்லப்படுகின்றன. அதன்படி, தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு 2026-ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தேர்தல் அனேகமாக ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என சொல்லப்படும் சூழலில், அதற்கேற்ப பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த அட்டவணை உறுதிசெய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை வசம் வந்துசேரும் எனவும், அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார் எனவும், அதன்படி, நவம்பர் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- அதிபருக்கு வழங்கிய சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் நச்சுப்பொருட்கள் இருப்பது தெரிந்தது.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா (37) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளதால் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அவர் மீண்டும் போட்டியிடுவதால் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அன்பளிப்பாக அவருக்கு சாக்லெட்டுகள் வழங்கப்பட்டன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா கூறுகையில், இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. எனவே விஷசாக்லெட் கொடுத்து தன்னை கொல்ல சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அரசாங்கத்தை கண்டித்து இந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி–னர். அவரது வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் அதிபரை கொல்ல முயற்சி என ராணுவ மந்திரி கியான் கார்லோ லோப்ரெடோ கூறினார். தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொல்ல சதி நடைபெற்ற சம்பவம் ஈகுவடார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பீகாரின் சிவன் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.
- ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.
பாட்னா:
பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் ரவுடியான சகாபுதீனின் மகனை ராஷ்ட்ரீய ஜனதா தளம் களமிறக்கி உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது:
சகாபுதீனின் மகன் படுதோல்வி அடைவதை இங்குள்ள மக்கள் உறுதிசெய்ய வேண்டும்.
லாலு பிரசாத் மற்றும் ரப்ரி தேவியின் காட்டாட்சியை மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து உள்ளனர்.
பீகார் மக்கள் தேர்தல் முடிவு வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிதான் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
ராஷ்டிரீய ஜனதா தளமும், அதன் கூட்டணி கட்சிகளும் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும்.
ஊடுருவல்காரர்கள் இங்கேதான் இருக்கவேண்டும் என்கிறார் ராகுல் காந்தி.
ஆனால் ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.
- கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
- ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.
வியன்னா:
ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.
இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை
படைத்துள்ளார்.
முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.
- 3 போட்டிகளில் மழையால் ரத்து செய்யப்பட்டன.
- 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெற்றன.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி இன்று இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டம் 34 ஓவராக குறைக்கப்பட்டது. 4.2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு, கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 7 லீக் போட்டிகளிலும் விளையாடிவிட்டன. இலங்கை 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 3 போட்டிகளில் முடிவு இல்லை ஆகிவற்றின்மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. 3 போட்டிகளில் முடிவு இல்லை என்பதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியுடன் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
- அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அக்டோபர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 27ம் தேதி அன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.
- இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது.
- ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
இஸ்ரேல்- காசா இடையிலான டொனால்டு டிரம்பின் முயற்சியால் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டாக உயிருடன் உள்ள 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் உடலையும் ஹமாஸ் அமைப்பினர் எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் விதிமுறையை மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
இதனால் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால, அமைதி ஒப்பந்தத்தை வலிமையாக அமெரிக்காவின் முன்னிணி அதிகாரிகள், அமைச்சர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு பயணம் செய்தவாறு உள்ளனர்.
இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அவர் "காசாவில் நிரந்தரமான அமைதியை உருவாக்குவதற்காக, டொனால்டு டிரம்ப் தயார் செய்த ஒரு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் இல்லை. இது சிறந்த திட்டம். ஒரே திட்டம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க, அமெரிக்காவின் அனுமதி இஸ்ரேலுக்கு தேவையில்லை" என்றார்.
- சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
- தனது தந்தைபோன்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்- யதீந்திரா.
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, அடுத்த மாதம் நவம்பரில் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், "சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் "தனது தந்தைபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்" எனக் கூறியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர்.
டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், சதீஷ் ஜர்கிஹோலி பெயரை பயன்படுத்தியது டி.கே. சிவக்குமார் அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே. சிவக்குமார்தான் முதலமைச்சராக வேண்டும் என்று கூறிய இரண்டு பேருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சித்தராமையாவின் மகனுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு டி.கே. சிவக்குமார் "இதற்கு நான் இப்போது பதில் கூற போவதில்லை. யாரிடம் பேச வேண்டுமோ, அவர்களிடம் பேசுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என சித்தராமையா கூறி வருகிறார்.
மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.
இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், லோகா திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லோகா திரைப்படம் வரும் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ‘காந்தாரா சாப்டர்1’ வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
- கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.
கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது.
- தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சனை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது.
சென்னை:
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண உயர்வை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கான மின்சார கட்டணத்தை மாற்றி அமைத்து உத்தரவு வெளியிடுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறி வருகின்றனர். அதுவும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் செலவு மிகுந்த மாதத்தில் மின்சார கட்டண உயர்வு என்பது தங்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய வருபவர்கள் சரியான நேரத்தில் வந்து கணக்கீடு செய்யாததால் 500 யூனிட்டுக்கு கீழே பயன்பாடு உள்ளவர்களுக்கு அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் மின்சார கட்டணம் உயர்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, 'மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும்போதும், அதை நடைமுறைப்படுத்தும்போதும், வீட்டு நுகர்வு மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அதேநேரம், அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சார சலுகையும் தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூறுவதுபோல் மின்சார கட்டணம் உயரவில்லை.
ஆனால் பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சனை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. காலம் கடந்து மின்சார கணக்கீடு செய்யும்போது மின்சார கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65-ம், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80-ம், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95-ம், 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05-ம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் காலங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு முறையாக எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.






