என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

    Dictionary.com 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ``67'' ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. 67 என்ற எண்ணை வார்த்தையாக தேர்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

    இதற்கு காரணம் 67 என்பது ஒரு எண்ணாக அல்லாமல் குறியீடாக இருப்பதே ஆகும். அண்மை காலங்களாக சமூக வலைத்தளங்களில் கஜென் ஆல்பா சிறுவர் சிறுமிகள் 67 என்ற எண்ணை அதிகம் பதிவிடுகின்றனர்.

    2010 and 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா ஆவர். அவர்களுக்கு 67 என்பது உற்சாகத்தை வெளிப்படுத்ததும் ஒரு குறியீட்டு வழியாக மாறியுள்ளது. டிக்டாககில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியுள்ளது.

    இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    டிரெண்டின் படி, இதை 'அறுபத்தி ஏழு' என்று உச்சரிக்காமல், 'சிக்ஸ்-செவன்' என்றுதான் சொல்ல வேண்டும்.

     67 எப்படி குறியீடாக மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு ஒரு நிலையான வரையறை இல்லை, அதன் பயன்பாடு சூழலுக்கு சூழல் மாறுபடும் என்று Dictionary.com தெரிவித்துள்ளது.

    இதன் பயன்பாடு, அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் 'Doot Doot (6 7)' என்ற பாடலில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    பள்ளிகளில் வகுப்பில் சில மாணவர்கள் ஆறு என்று சொல்லும்போது, மற்றவர்கள் ஏழு என்று கத்துகின்றனர். ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு 67 என்பது இளைய தலைமுறையின் குறியீடாக மாறியுள்ளது.  

    • பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
    • தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றது முதல் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் செயல்முறையில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    நாடுகடத்தப்படுபவர்கள் கைவிலங்கிடப்பட்டு மோசமாக நடத்தப்படுவது குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,790 இந்தியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடுகடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், " இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் 29 வரை, தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 2,790க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் " என்று தெரிவித்தார்.

    இதேபோல் பிரிட்டனில் இருந்து இந்த ஆண்டு சுமார் 100 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

    • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது தனது 21 வயதில் உயிர் தியாகம் செய்தார்.
    • அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    நாட்டின் மிக உயர்ந்த இராணுவ விருதான 'பரம் வீர் சக்ரா' விருதைப் பெற்ற இளம் வீரரான லெப்டினன்ட் அருண் கேதர்பாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'இக்கிஸ்' என்ற இந்தி படம் உருவாகி உள்ளது.

    1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது தனது 21 வயதில் உயிர் தியாகம் செய்தார். இந்த படம் அருண் கேதர்பாலின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இருக்கும்.

    பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மூத்த மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா இந்த படத்தில் அருண் கேதர்பாலாக நடிக்கிறார்.

    அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் மூத்த நடிகர் தர்மேந்திரா மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    • வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றியுள்ளார்.
    • யூடியூபர் ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்டூடியோவில் குழந்தைகளை பணயமாக பிடித்து வைத்து மிரட்டியவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆக்டிங் ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தவரும் யூடியூபருமான ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.

    வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி அழைத்து வந்து பயணக்கைதிகளாக வைத்து மிரட்டினார் ரோகித் ஆர்யா.

    இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் 17 பேரை பணய கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்டியவரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது.

    காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இப்படம் செப்டம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 'காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, காந்தா படத்தில் இடம்பெற்றுள்ள "கண்மணி நீ" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

    இந்நிலையில், காந்தா படத்தின் மற்றொரு பாடலான 'Rage Of Kantha' இன்று மாலை வெளியாகியுள்ளது.

    • சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி.
    • போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த செஸ் தொடரில் விளையாடினார்.

    சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இதன்மூலம் 16 வயதில் சாம்பியன் பட்டத்தை வென்று இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

    • புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.
    • சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார்.

    புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

    வரும் நவம்பர் 24ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்கிறார்.

    • முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என்றார் அண்ணாமலை.
    • தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.

    2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

    தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன.

    கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.

    இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.

    தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை பந்தாடியது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டு தடுமாறியது. அதன் பிறகு நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்தது. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 7 புள்ளிகள் எடுத்த இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பெற்றது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (ஒருசதம், ஒரு அரைசதம் உள்பட 365 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஓரளவு பங்களிப்பை அளிக்கின்றனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேட்டிங்கில் இருந்து கணிசமான ரன் வந்தால் மேலும் வலுப்பெறும். ஒரு சதம் உள்பட 308 ரன்கள் சேர்த்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியது பெருத்த பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா (15 விக்கெட்), ஸ்ரீ சரனி (11), கிரந்தி கவுட், சினே ராணா கைகொடுக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்றில் 330 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் ஒரு சேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தும் வேட்கையுடன் ஆயத்தமாகும் இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லையுடன் (இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 13 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் அலிசா ஹீலி (2 சதம் உள்பட 294 ரன்), ஆஷ்லி கார்ட்னெர், பெத் மூனி, போபி லிட்ச் பீல்டும், பந்து வீச்சில் அலனா கிங் (13), சோபி மொலினிக்சும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அனபெல் சுதர்லாண்ட் (114 ரன், 15 விக்கெட்), ஆஷ்லி கார்ட்னெர் (2 சதம் உள்பட 265 ரன், 7 விக்கெட்) அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். தசைபிடிப்பால் கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும்.

    ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பதம்பார்த்த ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் வரிந்து கட்டும். மொத்தத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் இந்திய அணி தக்க பதிலடி கொடுக்குமா? அல்லது மறுபடியும் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரேணுகா சிங் அல்லது ஷபாலி வர்மா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி அல்லது ராதா யாதவ்.

    ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.
    • அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும்.

    இந்தியாவில் தகவல் பரிமாற்றத்துக்காக 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    மோசடி வலையில் சிக்கி நிதி இழப்பு ஏற்பட்டதாக அன்றாடம் பதிவாகி வரும் சம்பவங்களே இதற்கு சாட்சி. இது ஒருபுறம் இருக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை கொடுக்கின்றன.

    இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும்.

    இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இருக்கும். இதனால் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு பயமின்றி எடுக்கலாம்.

    தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.

    விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து, அமலுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-13 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 2.56 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம், ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் ஆராட்டு விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சிக்கல் ஸ்ரீசிங்கார வேலவர் விடையாற்று உற்சவம். பொய்கையாழ்வார் திருநட்சத்திர வைபவம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-பயணம்

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-அன்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பரிவு

    மகரம்-நட்பு

    கும்பம்-உவகை

    மீனம்-வாழ்வு

    • போஸிடான் டிரோனுக்கு நிகரானது எதுவுமில்லை என்றும் அதை நிறுத்துவது சாத்தியமற்றது என்றும் புதின் மேலும் கூறினார்.
    • கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வெடித்து கதிரியக்க சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதத்துடன் போஸிடான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    நீருக்கடியில் செல்லும் அணு ஆயுதம் தாங்கிய டிரோன்-ஐ ரஷியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

    செவ்வாய்க்கிழமை, அணுசக்தியால் இயங்கும் போஸிடான் டிரோனின் சோதனை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். இந்த டிரோன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டது.

    கிரேக்க புராணங்களின் கடல் கடவுளான போஸிடானின் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் எதிரி ரேடார்களை ஏமாற்றும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    போஸிடான் டிரோனுக்கு நிகரானது எதுவுமில்லை என்றும் அதை நிறுத்துவது சாத்தியமற்றது என்றும் புதின் மேலும் கூறினார்.

    டிரோனில் பொருத்தப்பட்ட அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை விட சக்தி வாய்ந்தது என்றும் புதின் தெரிவித்தார்.

    கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வெடித்து கதிரியக்க சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதத்துடன் போஸிடான் கட்டமைக்கப்பட்டுள்ளதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    முன்னதாக ரஷியாவின் பியூரெவெஸ்ட்னிக் ஏவுகணை சோதனையை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏவுகணைகளை சோதிப்பதற்கு பதிலாக உக்ரைனில் ரஷ்யா முதலில் போரை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த டிரோன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக புதின் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

    ×