என் மலர்
ஆசிரியர் தேர்வு
- செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
- தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலில் உள்ளது. தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.
அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே ஜிஎஸ்டி முறையில் என்ன மாதிரியான மாற்றங்களை மத்திய அரசு செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது.
அதாவது, 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆடம்பர மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 40% வரி வசூலிக்கப்பட உள்ளது.
இந்த 40% வரி அடுக்கில் வெறும் 5-7 பொருள்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், இதில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைத்து இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
- அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர்.
அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்" என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
- தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர்.
டெல்அவிவ்:
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 50 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காசா போரை நிறுத்தி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்டு வர வேண்டும் என கூறி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இஸ்ரேல் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
- 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.
இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
- 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.
- செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
செங்கோட்டையில் குழுமியிருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், பொதுமக்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.
- ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார்
- இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.
ரஷிய அதிபர் புதின் இன்று அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- இந்த வழக்கை மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை:
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். அதிக வட்டியை தவிர்க்க, இதை முதலீடு என மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என கோத்தாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;
- இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘புதிய பாரதம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினம் 'புதிய பாரதம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகின் மிகப் பழமையான குடியரசுகளைக் கொண்டிருந்தது இந்தியா. இது ஜனநாயகத்தின் தாய் என ஒப்புக் கொள்ளப்படுகிறது.
சுதேசி என்ற கருத்து, மேக்-இன்-இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற முயற்சிகள் நமது தேசிய நோக்கங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் பொருட்களை மக்கள் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் செயலாகும்.
இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி, நமது நாடு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடியது. இது நாட்டின் நெசவாளர்களையும் அவர்களின் தயாரிப்புகளையும் கவுரவிப்பதற்காக 2015 முதல் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். 1905-ம் ஆண்டு நமது சுதந்திரப் போராட்டத்தின்போது தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் வறுமையில் இருந்தது. அதன்பின் 78 ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் நாம் அசாதாரண முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா சுயசார்பு தேசமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது, மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.
காலநிலை மாற்றத்தின் சவாலுக்கு பதிலளிக்க நாமும் மாறவேண்டும். நமது பழக்கவழக்கங்களையும் நமது உலகக் கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும். நம் அனைவரின் பங்களிப்புடன், இயற்கையான முறையில் செழிப்பான வாழ்க்கையை வழங்கும் ஒரு கிரகத்தை எதிர்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வோம் என தெரிவித்தார்.
- நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
- டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே..
ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, "நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்" என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.
கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி "தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?" என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.
- நாளை அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதின் நாளை அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பெசென்ட் அளித்த பேட்டியில், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், வரி அதிகரிக்கப்படலாம்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம் கட்ட வரிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன.
- டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார்
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய யுவராஜ் சிங், "இந்திய அணி வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு இளம் அணி என்பதால், தொடர் சமநிலையில் முடிந்தாலும், இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். இங்கிலாந்தில் சென்று நன்றாக விளையாடி உங்களை நிரூபிப்பது எளிதல்ல
அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார். உங்களிடத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதனை எப்படி கையாள வேண்டும் என கில் நிரூபித்து விட்டார்" என்று தெரிவித்தார்.






