என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது
Byமாலை மலர்17 April 2017 3:42 AM GMT (Updated: 17 April 2017 3:42 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது. அப்போது முகூர்த்தக்காலில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வருகிறார். அங்கு காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு கொடிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு வருகிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடக்கிறது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்து சேருகிறார். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
இதைத்தொடர்ந்து 20-ந் தேதி மாலை நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 23-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் 25-ந் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 27-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வருகிறார். அங்கு காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு கொடிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு வருகிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடக்கிறது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்து சேருகிறார். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
இதைத்தொடர்ந்து 20-ந் தேதி மாலை நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 23-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் 25-ந் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 27-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X