search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்திரு அண்ணாமலை கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது
    X

    தென்திரு அண்ணாமலை கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது

    மல்லூர் அருகே அண்ணாமலைப்பட்டி தென்திரு அண்ணாமலை கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த அதிசயத்தை இன்றும், நாளையும் பார்க்கலாம்.
    மல்லூர் அருகே அண்ணாமலைப்பட்டி தென்திரு அண்ணாமலை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்31-ந் தேதி மற்றும் ஏப்ரல் 1, 2-ந் தேதி என 3 நாட்கள் காலை 7 மணி முதல் 7.15 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரியஒளி விழும்.

    அதன்படி நேற்று காலை 7 மணி முதல் 7.15 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்தனர். இன்றும்(சனிக்கிழமை), நாளையும் இந்த சிவலிங்கத்தின் மீது சூரியஒளி விழுவதை பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×