search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காக்காயந்தோப்பு அங்காளம்மன் கோவிலில் தீமிதி நிகழ்ச்சி
    X

    காக்காயந்தோப்பு அங்காளம்மன் கோவிலில் தீமிதி நிகழ்ச்சி

    அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
    அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் இரவு தீமிதி நடந்தது.

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலின் எதிரே அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் அதில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு ரணகளிப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் மயானக்கொள்ளையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மஞ்சள் நீராட்டுதலும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
    Next Story
    ×