என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுழலும் லிங்கம்
Byமாலை மலர்7 March 2017 8:36 AM GMT (Updated: 7 March 2017 8:36 AM GMT)
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமான ஓவியம் ஒன்று, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தீட்டப்பட்டிருக்கிறது.
இறைவன் தூணில் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை என் கிறது புராணங்களும், இதிகாசங்களும். ஒருசமயம் அவ்வையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதி தேவிக்கு கோபம் வந்துவிட்டது.
அவர், ‘அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போல் உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள்’ என்றாள்.
இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். பின்னர், ‘தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து கால் நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள். அந்த திசை நோக்கியே என்னுடைய காலை நீட்டிக்கொள்கிறேன்’ என்றார்.
அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.
இதே போல் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமான ஓவியம் ஒன்று, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தீட்டப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து, சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் செல்லும் வழியில் இரண்டாம் பிரகாரத்தின் மேற்கூரையில் இந்த ஓவியத்தைக் காணலாம். பேரொளியுடன் கூடிய ஒரு வடத்தின் மத்தியில், சிவலிங்கம் ஒன்று இருப்பது போல் அமைந்த ஓவியம் அது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.
இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், அந்த லிங்கத்தின் ஆவுடை (பீடம்) நம்மை நோக்கி இருப்பது போல் தோன்றும் என்பதே இதன் சிறப்பு. கிழக்கு நோக்கி நின்றால் நம் பக்கம் ஆவுடை திரும்பும். மேற்கே சென்றால் அங்கு வந்து நிற்பது போல் இருக்கும். நேர் எதிரில் நின்றால் அந்த திசையில், என எல்லா பக்கமும் தோன்றும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஓவியத்தை ‘சுழலும் சிவலிங்கம்’ என்று அழைக்கிறார்கள்.
அவர், ‘அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போல் உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள்’ என்றாள்.
இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். பின்னர், ‘தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து கால் நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள். அந்த திசை நோக்கியே என்னுடைய காலை நீட்டிக்கொள்கிறேன்’ என்றார்.
அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.
இதே போல் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமான ஓவியம் ஒன்று, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தீட்டப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து, சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் செல்லும் வழியில் இரண்டாம் பிரகாரத்தின் மேற்கூரையில் இந்த ஓவியத்தைக் காணலாம். பேரொளியுடன் கூடிய ஒரு வடத்தின் மத்தியில், சிவலிங்கம் ஒன்று இருப்பது போல் அமைந்த ஓவியம் அது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.
இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், அந்த லிங்கத்தின் ஆவுடை (பீடம்) நம்மை நோக்கி இருப்பது போல் தோன்றும் என்பதே இதன் சிறப்பு. கிழக்கு நோக்கி நின்றால் நம் பக்கம் ஆவுடை திரும்பும். மேற்கே சென்றால் அங்கு வந்து நிற்பது போல் இருக்கும். நேர் எதிரில் நின்றால் அந்த திசையில், என எல்லா பக்கமும் தோன்றும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஓவியத்தை ‘சுழலும் சிவலிங்கம்’ என்று அழைக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X