search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தீபாராதனை நடந்த போது எடுத்த படம்
    X
    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தீபாராதனை நடந்த போது எடுத்த படம்

    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடங்கியது

    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

    தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, மாலையில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.

    9-ம் திருநாளான 10-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 8.50 மணிக்கு சுவாமி- அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, நெல்லை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×