என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![நெல்லையில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நெல்லையில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702101011149130_nellai-district-amman-temple-kumbabishekam_SECVPF.gif)
X
நெல்லையில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
By
மாலை மலர்10 Feb 2017 4:41 AM GMT (Updated: 10 Feb 2017 4:41 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்லேறு அம்மன் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
முத்தாரம்மன்
நெல்லை வண்ணார்பேட்டை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி கணபதிபூஜை, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
நேற்று காலை 9 மணிக்கு 4-ம் கால பூஜைகள் நிறைவடைந்தது. பின்னர் கோவில் விமானம் மற்றும் முத்தாரம்மன், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரத்தம்மாள்
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆயிரத்தம்மாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-வது கால பூஜை முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 11.05 மணிக்கு விமான கோபுரம், பால விநாயகர், பாலசுப்பிரமணியர், ஆயிரத்தம்மாள், கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
வருசாபிஷேகம்
நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள முருங்கையடி சாஸ்தா மற்றும் திரிபுரசுந்தரி என்ற முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று 2-வது ஆண்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஹோமமும், 10 மணிக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி கணபதிபூஜை, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
நேற்று காலை 9 மணிக்கு 4-ம் கால பூஜைகள் நிறைவடைந்தது. பின்னர் கோவில் விமானம் மற்றும் முத்தாரம்மன், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரத்தம்மாள்
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆயிரத்தம்மாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-வது கால பூஜை முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 11.05 மணிக்கு விமான கோபுரம், பால விநாயகர், பாலசுப்பிரமணியர், ஆயிரத்தம்மாள், கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
வருசாபிஷேகம்
நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள முருங்கையடி சாஸ்தா மற்றும் திரிபுரசுந்தரி என்ற முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று 2-வது ஆண்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஹோமமும், 10 மணிக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)