என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![அலகுமலை வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது அலகுமலை வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011018576746_valupuramman-temple-therottam_SECVPF.gif)
X
அலகுமலை வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
By
மாலை மலர்1 Feb 2017 4:48 AM GMT (Updated: 1 Feb 2017 4:48 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பொங்கலூர் அருகே உள்ள சேமலைக்கவுண்டம் பாளையத்தில் வலுப்பூரம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
பொங்கலூர் அருகே உள்ள சேமலைக்கவுண்டம் பாளையத்தில் வலுப்பூரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு புதிதாக ரூ.40 லட்சம் செலவில் திருத்தேர் செய்யப்பட்டு அலகுமலை கைலாசநாதர் கோவில் முன்பு இருந்து பக்தர்கள் தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். அதுபோல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி இரவு விக்னேஷ்வர் பூஜை மற்றும் கிராம சாந்தியுடன் தொடங்கியது.
நேற்று காலை 7 மணிக்கு காப்பு கட்டுதலும், கொடியேற்றமும், 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் முன்பு நடைபெறுகிறது. முன்னதாக அம்மன் வலுப்பூரம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
நேற்று காலை 7 மணிக்கு காப்பு கட்டுதலும், கொடியேற்றமும், 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் முன்பு நடைபெறுகிறது. முன்னதாக அம்மன் வலுப்பூரம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)