என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஐக்கியம் அவசியம்
Byமாலை மலர்21 May 2020 4:37 AM GMT (Updated: 21 May 2020 4:37 AM GMT)
விசுவாசிகளுக்கு இடையில் ஐக்கியம் மிகவும் அவசியம். அப்போது தான் ஒருவரால் ஒருவர் தூண்டப்பட்டு, ஒருவரால் ஒருவர் புத்தி சொல்லப்பட்டு எல்லோரும், கிறிஸ்துவுக்காக வல்லமையாக எரிந்து பிரகாசிக்க முடியும்.
“சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல கடவோம்” - எபிரெயர்-10:25
அடுப்பில் விறகு கட்டைகள் பல ஒன்றாக பிரகாசமாக எரிகிறது. அந்த கட்டையின் நெருப்பினால் தூண்டப்பட்டு எந்த கட்டை எரிகின்றது என்று சொல்ல முடியாது. எல்லாம் ஒன்றாக இருந்து எரிந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதில் ஒரு கட்டையை தனியே எடுத்து வெளியே போடுங்கள். என்ன நடக்கும்? கொஞ்ச நேரத்தில் அந்த கட்டையில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து அனல் இழந்து போகும். கிறிஸ்தவ ஐக்கியம் என்பதும் இதுபோன்றதே. ஒன்றாக இணைந்திருந்தால் எல்லோருடைய வாழ்விலும் கிறிஸ்துவை பற்றிய அனுபவங்கள் பிரகாசிக்கும்.
ஆனால் ஐக்கியம் இல்லாமல் ஒருவர் தனியே போகும்போது அவருடைய ஆவிக்குரிய அனுபவம் ஒரு நாள் அனலிழந்து போகிறது. விசுவாசிகளுக்கு இடையில் ஐக்கியம் மிகவும் அவசியம். அப்போது தான் ஒருவரால் ஒருவர் தூண்டப்பட்டு, ஒருவரால் ஒருவர் புத்தி சொல்லப்பட்டு எல்லோரும், கிறிஸ்துவுக்காக வல்லமையாக எரிந்து பிரகாசிக்க முடியும். சபை கூடுதலின் முக்கிய நோக்கமே ஒருவரால் இன்னொருவர் பயன்படுவதை செயல்படுத்துவதற்கே ஒருவரையொருவர் தாங்கி, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, எல்லோரும் கூட்டாக வளர்வதற்காகவே சபை கூடுதல்.
ஐக்கியங்களில் பல வித இன்னல்கள் இந்நாட்களில் இருப்பது உண்மைதான். ஆனாலும், நாம் தனியே போய்விடுவதும் நம் வீட்டிலேயே தனியே ஆராதிப்பதும், தகுந்த பரிகாரங்கள் அல்ல. ஏனென்றால் அது கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறோம் என்ற சத்தியத்திற்கு முரணானது. நாம் புத்தி சொல்ல வேண்டும். நமக்கு புத்தி சொல்லப்பட வேண்டும். நாம் தூண்ட வேண்டும். தூண்டப்படவும் வேண்டும். அதற்கு அவசியம் ஐக்கியம். “பிறரிடம் நீ காண நேர்ந்த கசப்பான காரியங்களை, உன்னிடம் பிறர் காணாதிருக்க கவனமாயிரு”.
- சாம்சன் பால்
அடுப்பில் விறகு கட்டைகள் பல ஒன்றாக பிரகாசமாக எரிகிறது. அந்த கட்டையின் நெருப்பினால் தூண்டப்பட்டு எந்த கட்டை எரிகின்றது என்று சொல்ல முடியாது. எல்லாம் ஒன்றாக இருந்து எரிந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதில் ஒரு கட்டையை தனியே எடுத்து வெளியே போடுங்கள். என்ன நடக்கும்? கொஞ்ச நேரத்தில் அந்த கட்டையில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து அனல் இழந்து போகும். கிறிஸ்தவ ஐக்கியம் என்பதும் இதுபோன்றதே. ஒன்றாக இணைந்திருந்தால் எல்லோருடைய வாழ்விலும் கிறிஸ்துவை பற்றிய அனுபவங்கள் பிரகாசிக்கும்.
ஆனால் ஐக்கியம் இல்லாமல் ஒருவர் தனியே போகும்போது அவருடைய ஆவிக்குரிய அனுபவம் ஒரு நாள் அனலிழந்து போகிறது. விசுவாசிகளுக்கு இடையில் ஐக்கியம் மிகவும் அவசியம். அப்போது தான் ஒருவரால் ஒருவர் தூண்டப்பட்டு, ஒருவரால் ஒருவர் புத்தி சொல்லப்பட்டு எல்லோரும், கிறிஸ்துவுக்காக வல்லமையாக எரிந்து பிரகாசிக்க முடியும். சபை கூடுதலின் முக்கிய நோக்கமே ஒருவரால் இன்னொருவர் பயன்படுவதை செயல்படுத்துவதற்கே ஒருவரையொருவர் தாங்கி, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, எல்லோரும் கூட்டாக வளர்வதற்காகவே சபை கூடுதல்.
ஐக்கியங்களில் பல வித இன்னல்கள் இந்நாட்களில் இருப்பது உண்மைதான். ஆனாலும், நாம் தனியே போய்விடுவதும் நம் வீட்டிலேயே தனியே ஆராதிப்பதும், தகுந்த பரிகாரங்கள் அல்ல. ஏனென்றால் அது கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறோம் என்ற சத்தியத்திற்கு முரணானது. நாம் புத்தி சொல்ல வேண்டும். நமக்கு புத்தி சொல்லப்பட வேண்டும். நாம் தூண்ட வேண்டும். தூண்டப்படவும் வேண்டும். அதற்கு அவசியம் ஐக்கியம். “பிறரிடம் நீ காண நேர்ந்த கசப்பான காரியங்களை, உன்னிடம் பிறர் காணாதிருக்க கவனமாயிரு”.
- சாம்சன் பால்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X