என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
![கிராமத்து பின்னணியில் முறுக்கு மீசையுடன் தொடங்கியது விஜய் 61 படப்பிடிப்பு கிராமத்து பின்னணியில் முறுக்கு மீசையுடன் தொடங்கியது விஜய் 61 படப்பிடிப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011319291047_Vijay-61-shooting-start-in-ECR-Village-Back-drop_SECVPF.gif)
X
கிராமத்து பின்னணியில் முறுக்கு மீசையுடன் தொடங்கியது விஜய் 61 படப்பிடிப்பு
By
மாலை மலர்1 Feb 2017 7:49 AM GMT (Updated: 1 Feb 2017 7:49 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கிராமத்து பின்னணியில் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
விஜய் - அட்லி மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பையும், அதைத் தொடர்ந்து வட இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அறிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று சென்னையில் ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள பனையூரில் பூஜையுடன் தொடங்கியது. இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கெனவே, கிராமத்து பின்னணியுடன் கூடிய அரங்கு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த அரங்கில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. விஜய் முறுக்கு மீசை கெட்டப்புடன் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்த அரங்கில் தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகிகள் இல்லாது விஜய் மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இங்கு படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரிக்கிறது.
அதன்படி, இன்று சென்னையில் ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள பனையூரில் பூஜையுடன் தொடங்கியது. இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கெனவே, கிராமத்து பின்னணியுடன் கூடிய அரங்கு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த அரங்கில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. விஜய் முறுக்கு மீசை கெட்டப்புடன் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்த அரங்கில் தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகிகள் இல்லாது விஜய் மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இங்கு படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)