search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    குறும்படம் எடுக்கும் இளைஞர்களுக்காக ஆரி தொடங்கிய தயாரிப்பு நிறுவனம்
    X

    குறும்படம் எடுக்கும் இளைஞர்களுக்காக ஆரி தொடங்கிய தயாரிப்பு நிறுவனம்

    ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்ற ஆரி, இளைஞர்களுக்காக குறும்படம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
    ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. இவர் தற்போது குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரி, இந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ‘ஆரிமுகம்’ என்று பெயர் வைத்துள்ள இவரது தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திவிட்டு ஆரி பேசும்போது, ஆரி முகம் நிறுவனத்தில் நானும் முகமது இப்ராஹிம் மற்றும் ஷாநவாஸ் ஆகியோரும் இணைந்து செயல்பட உள்ளோம். குறும்பட எடுக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் வழிசெய்யப் போவதாக கூறினார்.

    மேலும், அவர் கூறும்போது, நான் எடுக்கும் குறும்படங்களில் சிறந்த குறும்பட இயக்குனருக்குத்தான் எனது நிறுவனத்தின் மூலம் படம் தயாரிக்க உதவி செய்யப்போவதாகவும் கூறினார்.
    Next Story
    ×