என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
![பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606151552128360_Poonam-Bajwa-matching-pair-for-me-Sundar-C_SECVPF.gif)
X
பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி: சுந்தர்.சி
By
மாலை மலர்15 Jun 2016 10:22 AM GMT (Updated: 15 Jun 2016 10:22 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சுந்தர்.சி நடிப்பில் தற்போது ‘முத்தின கத்திரிக்கா’ என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைப்படி பூனம் பஜ்வா எனக்கு பொருத்தமான ஜோடி என்று சுந்தர்.சி கூறியிருக்கிறார்.
இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை, அரண்மனை–2 படங்களில் குறிப்பிட்ட வேடத்தில் நடித்தார். என்றாலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தது ஏன்? பூனம் பஜ்வா தனது ஜோடி ஆனது எப்படி? என்பதற்கு சுந்தர்.சி அளித்த பதில்....
தொலைக் காட்சியில் எந்த மொழி படம் ஒளிபரப்பானாலும் அதை பார்ப்பேன். இது போல் ‘வெள்ளி மூங்கா’ மலையாளப் படத்தை பார்த்தேன். சிறிது நேரம் பார்த்தவுடன் அதை முழுவதும் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அந்த அளவு படம் அருமையாக இருந்தது.
2014–ல் திரைக்கு வந்த இந்த படத்தை தமிழில் ‘ரீமேக்’ செய்ய விரும்பினேன். எனவே அதற்கான உரிமையை வாங்கினேன்.
40 வயதான பிறகும் திருமணம் ஆகாத நாயகன் இளம் வயது நாயகியை விரும்பும் கதை. அரசியல், காமெடி, சென்டிமென்ட் கலந்த இந்த படத்தை பார்த்தவுடன் இதில் நானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
இப்போதெல்லாம் ஒரு படத்தில் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிபவர்கள், உடனே அடுத்த படத்திற்கு இயக்குனர் ஆகி விடுகிறார்கள். இதனால் அவர்களால் தொடர்ந்து தரமான படங்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நான் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். சினிமாவில் எந்த வேலையும் செய்ய பழகிக்கொண்டு படிப்படியாக இயக்குனர் ஆனேன். அதே போல் என்னிடம் 6 வருடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வெங்கட்ராமனை ‘முத்தின கத்திரிக்காய்’ படத்துக்கு இயக்குனர் ஆக்கி இருக்கிறேன். இவர் வசனம் எழுதுவதில் திறமைசாலி. நான் இல்லாத போது எனது படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். சிறப்பாக கதை எழுதுபவர். இந்த படத்தில் 25 சதவீதம் தான் மலையாள படத்தில் ரீமேக். மற்ற கதை முழுவதும் வெங்கட் எழுதியது. வசனமும் அவர் தான். மிகவும் சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
எனக்கு ஜோடியாக பூனம் பஜ்வாவை நடிக்க வைத்திருக்கிறேன். கதைப்படி நாயகன் இளம் வயது பெண்ணை காதலிக்க வேண்டும். ஏற்கனவே எனது படங்களில் நடித்தவர், குடும்பங்கான, இளம் தோற்றம் கொண்டவர். எனவே அவரை எனது ஜோடியாக நடிக்க வைத்தேன்.
பெரிய பட்ஜெட் படங்களில் எனது ஹீரோவுக்கு பிரபல நாயகிகள் நடிப்பார்கள். நான் இயக்குனர் என்பதை விட இதில் நடிகனாக இருக்கிறேன். அதற்கு பொருத்தமான ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் சொன்னபடி நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.
தொலைக் காட்சியில் எந்த மொழி படம் ஒளிபரப்பானாலும் அதை பார்ப்பேன். இது போல் ‘வெள்ளி மூங்கா’ மலையாளப் படத்தை பார்த்தேன். சிறிது நேரம் பார்த்தவுடன் அதை முழுவதும் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அந்த அளவு படம் அருமையாக இருந்தது.
2014–ல் திரைக்கு வந்த இந்த படத்தை தமிழில் ‘ரீமேக்’ செய்ய விரும்பினேன். எனவே அதற்கான உரிமையை வாங்கினேன்.
40 வயதான பிறகும் திருமணம் ஆகாத நாயகன் இளம் வயது நாயகியை விரும்பும் கதை. அரசியல், காமெடி, சென்டிமென்ட் கலந்த இந்த படத்தை பார்த்தவுடன் இதில் நானே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
இப்போதெல்லாம் ஒரு படத்தில் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிபவர்கள், உடனே அடுத்த படத்திற்கு இயக்குனர் ஆகி விடுகிறார்கள். இதனால் அவர்களால் தொடர்ந்து தரமான படங்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நான் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். சினிமாவில் எந்த வேலையும் செய்ய பழகிக்கொண்டு படிப்படியாக இயக்குனர் ஆனேன். அதே போல் என்னிடம் 6 வருடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வெங்கட்ராமனை ‘முத்தின கத்திரிக்காய்’ படத்துக்கு இயக்குனர் ஆக்கி இருக்கிறேன். இவர் வசனம் எழுதுவதில் திறமைசாலி. நான் இல்லாத போது எனது படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். சிறப்பாக கதை எழுதுபவர். இந்த படத்தில் 25 சதவீதம் தான் மலையாள படத்தில் ரீமேக். மற்ற கதை முழுவதும் வெங்கட் எழுதியது. வசனமும் அவர் தான். மிகவும் சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
எனக்கு ஜோடியாக பூனம் பஜ்வாவை நடிக்க வைத்திருக்கிறேன். கதைப்படி நாயகன் இளம் வயது பெண்ணை காதலிக்க வேண்டும். ஏற்கனவே எனது படங்களில் நடித்தவர், குடும்பங்கான, இளம் தோற்றம் கொண்டவர். எனவே அவரை எனது ஜோடியாக நடிக்க வைத்தேன்.
பெரிய பட்ஜெட் படங்களில் எனது ஹீரோவுக்கு பிரபல நாயகிகள் நடிப்பார்கள். நான் இயக்குனர் என்பதை விட இதில் நடிகனாக இருக்கிறேன். அதற்கு பொருத்தமான ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் சொன்னபடி நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)