என் மலர்
- காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
- எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.
நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.
தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.
பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
- தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், 'கருப்பு' படக்குழு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
- சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
- நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு வெறும் ரூ.1.65 கோடிதான் என்று தெரிய வந்துள்ளது.
நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிதிஷ்குமாரின் சொத்து விவரம் ரூ.1.65 கோடி என்று தெரியவந்து உள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.68,455 அதிகமாகும்.
நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.17.66 லட்சமாகும். அதே சமயம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். மேலும் அவருக்கு டெல்லியில் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் ஒரு பிளாட்டும் இருக்கிறது.
துணை முதலமைச்சர் சவுத்ரியிடம் ரொக்கமாக ரூ.1.35 லட்சம் உள்ளது. அவரது மனைவி குமாரி மம்தாவிடம் ரூ.35 ஆயிரம் இருக்கிறது. சவுத்ரியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், விவசாயம் அல்லாத நிலம் உள்பட ரூ.4.91 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
மற்றொரு துணை முதலமைச்சரான விஜய்குமார் சின்காவிடம் ரூ.48.46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.77,181 மதிப்புள்ள ஒரு கைத் துப்பாக்கியும் உள்ளது.
- மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள்.
- விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.
விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள். அந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோவாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.
இதில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் 46, முஷீர் கான் 60, சர்பராஸ் கான் சதமடித்து 157, ஹர்டிக் டாமோர் 53 ரன்கள் அடித்து மும்பை 444 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்கள்.
குறிப்பாக 3-வது விக்கெட்டுக்கு தம்பியுடன் சேர்ந்து கோவாவை வெளுத்து வாங்கிய சர்ப்ராஸ் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.
இந்நிலையில் ஒரு உள்ளூர் போட்டியில் தாமும் முசீர் கானும் சேர்ந்து ஒன்றாக சதமடிக்க வேண்டும் என்பது கனவு என்று சர்பராஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு போட்டியில் நாங்கள் இருவரும் சதங்கள் அடித்து ஒன்றாக பேட்டை உயர்த்த வேண்டும் என்பது கனவாகும். அதை நாங்கள் உண்மையாக செய்ய விரும்புகிறோம். நாங்கள் ரஞ்சிக் கோப்பையில் சதமடிக்க நினைத்தது நடக்கவில்லை. இன்றும் முஷீர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நிறைய நேரம் இருப்பதால் அது நிச்சயம் நடக்கும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவும் வேடிக்கையானதாகும். நானும் என்னுடைய தம்பியும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.
களத்தில் விளையாடும் போது எப்படி பவுலரை கையாளலாம் அல்லது ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் ஒருவரை ஒருவர் ஆலோசித்துக் கொள்வோம்.
என்று சர்பராஸ் கூறினார்.
- ஸ்பாடிஃபை இந்த ஆண்டின் பாடல்களை உலகளாவிய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தன.
- அனிருத் , சந்தோஷ் நாராயணன், சாய் அப்யங்கர் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையான ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் முழு வீச்சில் திரும்பிய நிலையில், இசைத் துறை புதிய உச்சங்களைத் தொட்டது.
ஸ்பாடிஃபை போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், இந்த ஆண்டின் பாடல்களை உலகளாவிய ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தன. ஜனவரி 1 முதல் டிசம்பர் 30 வரை வெளியான பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ஸ்பாடிஃபை வெளியிட்ட டாப் 10 தமிழ் பாடல்கள் பட்டியல், தமிழ் இசையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
இந்தப் பட்டியலில் அனிருத் , சந்தோஷ் நாராயணன், சாய் அப்யங்கர், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இந்தக் தொகுப்பில் , இந்த டாப் 10 பாடல்களை ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்

1. ஊரும் ப்ளட் (Oorum Blood) – டியூட்
இசையமைப்பாளர்: சாய் அபயங்கர்
பாடகர்கள்: சாய் அபயங்கர் மற்றும் அபர்ணா நாராயணன்
ஸ்பாடிஃபை டாப் 10-இன் முதல் இடத்தை சாய் அப்யங்கரின் இசையில் உருவான ஊரும் ப்ளட் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் 8,96,43,074 ஸ்ட்ரீம்களுடன் இது உச்சத்தில் நிற்கிறது. ஆகஸ்ட் 28 அன்று வெளியான இந்தப் பாடல் ஒரு உற்சாகமான ஹிப்-ஹாப் டிராக் ஆகும். இந்த பாடல் இளைஞர்களின் வாழ்க்கையை காதலை பிரதிபலித்தது. சாய் அபயங்கரின் கூல் பீட்ஸ் மற்றும் பிரதீப் மமிதாவின் டான்ஸ் இந்த பாடலை ஹிட் பாடலாக மாற்றியது. "ஒரு அலை அவ கலை அவ..." வரிகள், காதலர்களின் ரிங்டோனாக மாறியது
2. மோனிகா (Monica) – கூலி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள்: சுப்லாஷினி மற்றும் அனிருத்
இப்பட்டியலில் 80,679,580 ஸ்ட்ரீம்களுடன் அனிருத்தின் "மோனிகா" பாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்தப் பாடல், ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் டைனமிக் பீட்ஸ், பூஜா ஹெக்டேவின் நடனம் இளைஞர்களை ஈர்த்தது. "மோனிகா... ஓ மோனிகா..." என்ற வரிகள், ரீல்ஸ் மற்றும் டிக்டாக்கில் வைரலானவை. இந்தப் பாடல், 2025-இல் தமிழ் சினிமாவின் மாஸ் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.

3. கனிமா (Kanimma) – ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
65,618,166 ஸ்ட்ரீம்களுடன் சந்தோஷ் நாராயணனின் "கனிமா" பாடல் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு பாடலாகும். சூர்யா - பூஜா ஹெக்டே நடனம் மற்றும் சந்தோஷ் நாராயணனின் குரல் மற்றும் நடனத்தால் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. இந்தப் பாடல், தமிழ் சினிமாவின் உணர்ச்சி இசையின் சிறந்த உதாரணம் ஆகும்.

4. வழித்துணையே (Vazhithunaiye) – டிராகன்
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம், சஞ்சனா கல்மஞ்சே
லியோன் ஜேம்ஸின் இசையில் 62,161,580 ஸ்ட்ரீம்கள் பெற்ற 'வழித்துணையே' பாடல் இந்த பட்டியலில் 4 ஆம் இடம் பிடித்துள்ளது. டிராகன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் விருப்ப பாடலாக மாறியது. குறிப்பாக இந்த வீடியோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலால் தான் கயாடு லோகர் இனைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
5. சித்திர புத்திரி (Sithira Puthiri)
61,073,988 ஸ்ட்ரீம்களுடன் சாய் அப்யங்கரின் இண்டிபெண்டெண்ட் ஆல்பமாக வெளியான இப்பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது. ரசிகர்கள் இப்பாடலின் யூனிக் சவுண்டை பாராட்டினர், ஸ்பாடிஃபை பிளேலிஸ்ட்களில் இப்பாடல் அடிக்கடி இடம்பெற்றது.
6. பவர்ஹவுஸ் (Powerhouse) – கூலி
இசையமைப்பாளர்: அனிருத்
பாடகர்கள்: அனிருத் , அறிவு
அனிருத் ரவிச்சந்தரின் பவர்ஹவுஸ் பாடல் 60,811,993 ஸ்ட்ரீம்களுடன் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.
கூலி படத்தின் மாஸ் ஆன்தெம் ஆக வெளியான இப்பாடல் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

7. கண்ணாடி பூவே (Kannadi Poove) – ரெட்ரோ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
கண்ணாடி பூவே பாடல் 7,457,598 ஸ்ட்ரீம்களுடன் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற காதல் சோக பாடலாகும். சந்தோஷ் நாராயணின் இசை மற்றும் குரல் இந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தது. காதல் சோகத்தை நினைப்பவர்களின் ரிங் டோனாக இந்தாண்டு இந்த பாடல் மாறியது.
8. பதிக்கிச்சு (Pathikichu) – விடாமுயர்ச்சி
இசையமைப்பாளர்: அனிருத்
பாடகர்கள்: அனிருத்
பதிக்கிச்சு பாடல் 45,027,321 ஸ்ட்ரீம்களுடன் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது. விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
9. பொட்டல முட்டாயே (pottala muttaye) படம் - தலைவன் தலைவி
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி
பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
பொட்டல முட்டாயே பாடல் 37,609,275 ஸ்ட்ரீம்களுடன் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது. தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சந்தோஷ் நாராயணன், சுப்லாஷினி குரலில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடனத்தால் இந்த பாடல் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.

10. முத்த மழை ரெப்ரைஸ் (Muththa Mazhai Reprise) – தக் லைஃப்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடகர்கள்: சின்மயி
சின்மயி குரலில் உருவான முத்த மழை பாடல் 34,686,401 ஸ்ட்ரீம்களுடன் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கல் இசை மற்றும் சின்மயியின் இனிமையான குரலுடன் உருவான இந்த ரொமான்டிக் பாடல் நம்மை மெய்மறக்க வைத்தது. குறிப்பாக சின்மயியின் குரலால் இந்த பாடலுக்கு உயிரோட்டம் ஏற்பட்டதாக ரசிகர்கள் இந்த பாடலை வியந்தோதி ரசித்தனர்.
முடிவுரை:
2025 ஆம் ஆண்டு தமிழ் இசை, ஸ்ட்ரீமிங் யுகத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது. அனிருத் (3 பாடல்கள்), சந்தோஷ் (3), சாய் (2) ஆதிக்கம், புதிய ட்ரெண்ட்களை உருவாக்கின. இந்தப் பாடல்கள் தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகின்றன.
- உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- கவுதம் கம்பீர் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.
உலகம் முழுவதும் 2026-ம் ஆண்டு புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
அந்த வகையில் புத்தாண்டை மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொண்டாடுகிறார். 'என் வாழ்வின் ஒளியுடன் 2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்' என்று குறிப்பிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தாய்லாந்தில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்.

குல்தீப் யாதவ் தனது வருங்கால மனைவி வான்ஷிகாவுடன் புத்தாண்டை ஒன்றாகக் கொண்டாடினார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது குடும்பத்துடன் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார்.

- பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
- தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து இந்திரய்யா கூறுகையில், தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
சாப்ட்வேர் இன்ஜினீயரான ராஜ் பி. ஷெட்டி, தனது தாய் மற்றும் காதலி கௌஸ்துபா மணி உடன் அமைதியான நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு நாள், ஹெல்மெட் அணியாமல் போன் பேசிக்கொண்டே பைக் ஓட்டும் போது, தவறுதலாக ரோஸி என்ற கருப்பு நாயை மோதிவிடுகிறார். அந்த நாய் இறந்து விடுகிறது.
அந்த நாய்க்கு உரிமையாளரான உள்ளூர் தாதா உபேந்திரா, இந்த சம்பவத்தால் கோபமடைந்து ராஜ் பி. ஷெட்டியை உடனடியாக தண்டிக்காமல், 45 நாளில் உன்னை கொன்று விடுவேன் என்று கூறி அனுப்பி விடுகிறார்.
இறுதியில் ராஜ் பி. ஷெட்டி 45 நாட்களை எப்படி கடந்தார்? தாதா உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டியை கொன்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் வினய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் பி. ஷெட்டி, தனது கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பயம், குழப்பம், குற்ற உணர்ச்சி மற்றும் மனமாற்றம் ஆகிய உணர்வுகளை அளவோடு வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். அவரது நடிப்பு கதைக்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது.
ராயப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள உபேந்திரா, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். வெளிப்படையாக ஒரு தாதாவாக தோன்றினாலும், அவரது கதாபாத்திரத்தின் பின்னணி வெளிப்படும் போது அது மேலும் ஆழம் பெறுகிறது.
சிவண்ணா என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார், கதைக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளார். ஆன்மீகமும் மனிதநேயமும் கொண்ட இந்த கேரக்டரில், அமைதியான நடிப்பை வழங்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் அவர் தோன்றும் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
கதாநாயகியாக நடித்துள்ள கௌஸ்துபா மணி, குறைந்த காட்சிகளிலேயே தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
கர்மா, வாழ்க்கை, மரணம், விதி போன்ற கருத்துகளை மையமாக கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன் ஜன்யா. தத்துவக் கருத்துகளை நேரடியாக சொல்லாமல், கதை ஓட்டத்தின் வழியே எடுத்துச் சொல்வது பாராட்டுக்குரியது.
சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை படத்தை தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. ஒரு மனிதன் செய்த தவறுக்குப் பிறகு அவன் எதிர்கொள்ளும் மனப்போராட்டம், கர்மாவின் தாக்கம் மற்றும் வாழ்க்கையின் மதிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவான ஒரு வித்தியாசமான திரைப்படமாக அமைந்துள்ளது.
இசை
அர்ஜுன் ஜன்யாவின் இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
சத்யா ஹெக்டேவின் ஒளிப்பதிவு பல இடங்களில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
ரேட்டிங்- 3/5







