search icon
என் மலர்tooltip icon
    • போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது.
    • இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

    மாஸ்கோ:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

    இதற்கிடையே போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் வக்கீலுக்கும் ரஷியா கைது வாரண்டு பிறப்பித்தது.

    இந்தநிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் தரைப்படைத் தளபதி ஒலெக்சாண்டர் பாவ்லியுக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

    மேலும் போரில் உக்ரைனுக்கு உதவியதற்காக எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாசையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்த பட்டியலில் உள்ளவர்கள் ரஷியாவில் நுழைந்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

    ஆனால் இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. மேலும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்டு மட்டுமே உண்மையானது மற்றும் 123 நாடுகளில் செயல்படுத்தக்கூடியது என்பதை நினைவூட்டுவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

    சர்வதேச நீதிமன்றத்தால் ஏற்கனவே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புரதச்சத்து நிறைந்தது முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது.
    • இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் அவசியம்.

    முட்டை என்பது பெரும்பாலான சமையலறையில் பொதுவாகக் காணப்படும் பொருட்களில் ஒன்றாகும். பல வழிகளில் சமைக்கக்கூடிய ஆரோக்கியமான மற்றும் சுவையான வெகுசில உணவுகளில் முட்டையும் ஒன்றாகும். பல வடிவங்களில் சமைக்கக்கூடிய, முட்டைகள் சீரான உணவின் ஒரு பகுதியாக தனித்து நிற்கின்றன.

    முட்டைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அவை நமது கோடைகால உணவில் அவசியம் இருக்க வேண்டும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது முதல் எடையை பராமரிப்பது வரை, வெயில் காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ உதவும் பலவிதமான நன்மைகளை முட்டைகள் வழங்குகின்றன. உங்கள் உணவில் கோடைகாலத்தில் முட்டையை சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    புரதச்சத்து நிறைந்தது முட்டைகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளன. தசை வலிமையை உருவாக்கவும், பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் மற்றும் மனநிறைவை மேம்படுத்தவும் புரதம் தேவைப்படுகிறது. முட்டைகள் அதற்கு சிறந்த ஆதாரமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கோடைகால நடவடிக்கைகள் பெரும்பாலும் சூரிய ஒளியின் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. இது கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மூலமாகும். இந்த இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் அவசியம்.


    இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் முட்டை இதய ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். அவற்றில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன, குறிப்பாக அதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. ஆனால் முட்டையை குறிப்பிட்ட அளவிற்கு மேல் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

    எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது முட்டைகள் வைட்டமின் டி-இன் நல்ல மூலமாகும், இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆரோக்கியமான மற்றும் வலுவான எலும்புகளை பராமரிக்க போதுமான அளவு வைட்டமின் டி அவசியம். இது எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் தடுக்கிறது. எடையை நிர்வகிக்க உதவுகிறது கலோரிகளில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், முட்டையில் அதிக புரதம் உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் கூடுதல் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது, குறிப்பாக கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது எடையை நிர்வகிக்க முட்டை மிகவும் அவசியம்.


    மூளை செயல்பாடு முட்டைகளில் ஏராளமாக காணப்படும் கோலின், மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். குறிப்பாக கருவின் வளர்ச்சி மற்றும் குழந்தை பருவத்தில் இது நரம்பியக்கடத்தி தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் மூளையில் உள்ள செல் சவ்வுகளின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிக்க உதவுகிறது. சரும ஆரோக்கியம் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட முட்டைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், செல் மீளுருவாக்கம், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன. கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் சரிசெய்ய முட்டை அவசியமானது.

    • பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

    இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

    மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

    அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

    மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் இந்த இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதேபோல், பொறியியல் மாணவர் சேர்க்கை்கான ஆன்லைன் பதிவும் இன்று தொடங்குகிறது.

    • கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத்துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த வளர்ந்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மொத்தம் 5859 ஏக்கரில் சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து விவசாய உறுப்பினர்களும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தென்னை, பாக்கு, வாழை மற்றும் காய்கறிகளை பிரதான பயிர்களை விளைவித்து வருகிறோம்.


    தமிழக வனத்துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத்துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத்துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


    இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. அவ்வாறு யானைகள் அதிகம் இடம்பெயரும் பகுதியாக இருந்தால் எங்களால் இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து இருக்க முடியாது.

    எனவே, காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

    எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள 'வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை' யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்.

    • டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி ‘பீர்’ விற்பனை ஆகும்.
    • ‘பீர்’ விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    சென்னை:

    வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக 'கூலிங் பீர்'தான் இருந்து வருகிறது. வழக்கமாக கோடை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும்.

    அந்த வகையில் நடப்பாண்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் 'பீர்' வாங்கி குடிக்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அதிகரித்துள்ளது.

    டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை ஆகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 36 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை செய்யப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அந்த வகையில் பார்க்கும் போது இது வழக்கமான நாட்களில் விற்பனை ஆகும் 'பீர்' பாட்டில்களைவிட 44 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 'பீர்' விற்பனை அதிகரித்து இருப்பதால், டாஸ்மாக் நிறுவனத்துக்கான வருவாயும் உயர்ந்திருக்கிறது. அதாவது ரூ.20 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.

    உதாரணமாக, நேற்று முன்தினம் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை மண்டலம் என மொத்தம் தமிழ்நாட்டில் 162 கோடியே 83 லட்சத்துக்கு மதுப்பாட்டில்கள் விற்பனை ஆகி இருந்தது.

    இதில் 'பீர்' விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதாவது, மொத்த விற்பனை விலையில் 18 சதவீதம் பீர் விற்பனைதான் இருக்கிறது.

    • ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு.
    • காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.
    • நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    டொரண்டோ:

    கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18-ந் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களான கரண் பிரார், கமல்பிரீத் சிங், கரன்பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-

    கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இங்கு வலிமையான, சுதந்திரமான நீதித்துறை செயல்படுகிறது. அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.

    நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் கைது விவகாரத்தை தாண்டியும் விசாரணை நடக்கும். நிஜ்ஜார் கொலையை தொடர்ந்து கனடாவில் உள்ள சீக்கியர்கள் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்தனர். இருப்பினும், ஒவ்வொரு கனடா குடிமகனும் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி குரு முயற்சி ஸ்தானமான 3-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும்.

    நல்ல தொழில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். வேலையில் உள்ளவர்க ளுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். கடன் சுமையை குறைக்க புதிய வழிகள் தென்படும்.அரசாங்க வேலை முயற்சி வெற்றி தரும். பெண்களுக்கு கணவன் வழி உறவினர்களின் ஆதரவு உண்டு.

    7-ம் இடத்தை குரு பார்ப்பதால் களத்திர தோஷம் நீங்கி திருமணத்தடைகள் விலகும். உங்கள் குடும்பத்திற்கு நல்ல மருமகள், மருமகன் அமைவார்கள். சிலரின் சுய விருப்ப விவாகம் நிறைவேறும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம். அமாவாசை அன்று தண்ணீருடன் இட்லி தானம் வழங்குவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    தன பிராப்தம் உண்டாகும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் ராகுவுடன் சஞ்சரிக்கிறார். தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள்.

    ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். பெண் பிள்ளைகளுக்கு காதணி விழா,பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம்.சத்ருக்கள் தொல்லை அகலும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை தவிர்க்கவும். புதிய வேலை பற்றி எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வேண்டாத பிரச்சினைகளை யோசித்து மனக் குழப்பத்தை அதிகரிக்க கூடாது.

    தற்போது 2-ம் இடத்தில் செவ்வாய், ராகு நிற்பதால் கோட்சார செவ்வாய் , ராகு கேது தோஷத்தால் வரன் அமைவதில் தடைகள் உருவாகலாம். அமாவாசை அன்று வயதானவர்களின் தேவை அறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    சந்தோசமான வாரம். ராசிக்கு குருப் பார்வை. தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கண் திருஷ்டி மற்றும் சிறு சிறு உடல் உபாதைகள் அகலும். தடைபட்ட அனைத்து செயல்களும் நிறைவேறும். பொருளாதாரப் பற்றாக்குறை ,ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

    இதுவரை சிறு தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க ஏற்ற நேரம். திருமணத் தடை அகலும். கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். அரசாங்க வேலை, அரசு ஆதரவு உண்டு.

    திருமண முயற்சி நிறைவேறும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பொறுமையாக செயல்படுவது அவசியம். அமாவாசையன்று வயது முதிர்ந்த பெண்களுக்கு ஆடை, இனிப்பான உணவு தானம் தரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    சாதகமான வாரம். பாக்கிய அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம். தொழில் ஸ்தானத்திற்கு குருப் பார்வை என முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும்.

    தாய், தந்தைவழி தாத்தா மூலம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கலாம்.உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்களால் ஏற்பட்ட மன பாரம் குறையும். ஆரோக்கிய குறைபாடு அகலும். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்கள் நல்ல கல்லூரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.

    பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும்.தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். திருமண வாழ்வு சிறக்கும். பங்குதாரர்கள், நண்பர்களிடம் சிறு மன பேதம் ஏற்படும்.ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அமாவாசையன்று குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×