search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    மாசி மாத ராசிபலன்

    சாதுரியமாக பேசி காரியங்களை சாதிக்கும் துலாம் ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தனாதிபதி செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண இயலும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் எடுக்கும் புது முயற்சியில் அனுகூலம் உண்டு.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பலவித வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு வியப்பர்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதாலும், அவர் தனாதிபதி செவ்வாயோடு இணைவதாலும் இக் காலம் ஒரு இனிய காலமாக அமையும். குறிப்பாக ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். `சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் பெண் பிள்ளைகள் வழியில் சுபச்சடங்குகள் ஏற்படலாம். கல்யாணம், காதுகுத்து போன்ற காரியங்களில் இருந்த தடை அகலும். தொட்டது துலங்கும் நேரமிது.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். பாக்கிய-விரயாதிபதியான புதன் நீச்சம் பெறும் பொழுது, பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. விரயங்கள் கூடுதலாக இருக்கும். `கூட்டுத் தொழில் இருந்து பிரிந்து தனித்து இயங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தந்தை வழி உறவில் மனக்கசப்பு ஏற்படலாம். வாகனப் பழுதுகள் அதிகரித்து வாட்டங்களைக் கொடுக்கும். தேக நலனுக்காகவும் செலவிடும் சூழ்நிலை உண்டு. எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி காண இயலும்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன், 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை சொல்வர். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இட மாற்றம் திருப்தி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தாலும், அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய முதலீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் வரலாம். கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 19, 20, 24, 25,

    மார்ச்: 2, 3, 4, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    ×