என் மலர்
துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
துலாம்
2025 கார்த்திகை மாத ராசிபலன்
துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். 'பழைய தொழிலைப் பைசல் செய்துவிட்டு, புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கூடுதலாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும் நேரம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. '10-ல் குரு பதவியில் மாற்றம்' என்பது ஜோதிடப் பொன்மொழி. ஆனால் அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு திரவிய லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் வரலாம்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று சிந்திப்பீர்கள். நல்ல சம்பவங்கள் நடைபெறும் நேரமிது. நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சி பலன் தரும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி புதன் 2-ல் வரும் இந்த நேரம் செலவிற்கு ஏற்ப வரவு வந்துசேரும். சேமிக்க இயலாது. முந்தைய சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறி தென்படும். எதிலும் யோசித்துச் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி மாற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். கலைஞர் களுக்கு நட்பு கைகொடுக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 20, 21, 25, 26, டிசம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
துலாம்
2025 ஐப்பசி மாத ராசிபலன்
துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயம் ஏற்படும். லாபாதிபதி சூரியனும் நீச்சம் பெற்றிருக்கிறார். 10-ல் உள்ள குருவால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் பெயர்ச்சிக்குப் பிறகு, மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். எதையும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். என்றாலும் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமணத்தடை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலர் சொத்துக்களை விற்க நேரிடும். பாகப் பிரிவினை திருப்தி தராமல் போகலாம். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனை தலைதூக்கும். பெற்றோரின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பரம்பரை நோயின் தாக்கத்தால் பதற்றம் ஏற்படும். முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
இக்காலம் ஒரு இனிய காலமாகும். ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது, அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். எதிர் கருத்து உள்ளவர்கள் கூட இணக்கமாக நடந்துகொள்வர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் வந்த பிரச்சனை அகலும். வருமானம் உயரும். பிள்ளை களின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். உடல்நலன் சீராகும். செல்வநிலை உயரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இலக்கை அடைய இயலும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, 30, 31, நவம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
துலாம்
2025 புரட்டாசி மாத ராசிபலன்
துலாம் ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் விரய ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் திருப்தி கரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். அதிகப் பயணங்களால் அலைச்சலும், மன அமைதிக் குறைவும் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத நேரம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். என்றாலும் அதுவரை மனக்குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, ஊதியம் எதிர்பார்த்தபடி கிடைத்தல், அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் போன்றவை படிப்படியாக நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்வை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சி்ந்தனை அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்றுக்கொள்ளும் விதம் அமையும். பிள்ளைகளின் வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறது. 10-ல் குரு வந்தால் பதவி மாற்றம் உருவாகும் என்பது நியதி. அதற்காக பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதியான அவர் உச்சம் பெறும்பொழுது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறை வேறும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆனால் நீங்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து, எப்போதும் நேர் மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் வராவிட்டாலும், வந்த மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அந்த எண்ணமும் ஈடேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுக ஸ்தானாதிபதியான அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலனில் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலையும், விரயங்களும் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் நன்மையைத் தரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெண்களுக்கு பிள்ளை களால் விரயம் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி யான தகவல் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 20, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
துலாம்
2025 ஆவணி மாத ராசிபலன்
துலாம் ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக 9-ம் இடம் பலம்பெறும்பொழுது பொன், பொருள் சேர்க்கை, பொருளாதார நிலையில் உயர்வு போன்றவை ஏற்படும். மேலும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால், சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளாக துன்புறுத்தி வரும் நோய் அகலும். பிள்ளை களின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடை அகலும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும் வகையில் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பர். சனி - சூரியன் பார்வை இருப்பதால் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் பார்த்து செயல்படுவது நல்லது. இந்த நேரத்தில் 'புத ஆதித்ய யோக'மும் நடைபெறுவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு செவ்வாய் வருவது நல்ல நேரம்தான். தன - சப்தமாதிபதியாக விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சொத்துக்களால் வந்த பிரச்சினை அகலும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல்வாதியாக இருந்தால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 23, 24, 31, செப்டம்பர்: 1, 5, 6, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
துலாம்
2025 ஆடி மாத ராசிபலன்
துலாம் ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அதேசமயம் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பொருளாதார நிலை உயரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருள் தரும் ஆலயங்களுக்கு செல்லும் ஆன்மிகப் பயணம் உண்டு. குரு பார்வையால் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பஞ்சம ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவதால், பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாரிசுகளால் வாட்டங்களும், விரயங்களும் ஏற்படும் நேரம் இது.
மிதுன - சுக்ரன்
ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வெளிநாடு செல்வது சம்பந்தமாகவோ அல்லது வெளிமாநிலம் செல்வது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
கன்னி - செவ்வாய்
ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. தனாதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்திற்கு வருவதால் அதிகமான விரயங்கள் ஏற்படும் நேரம் இது. சேமிப்புகள் கரையும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் விரயம் இருமடங்காகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. 'உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே.. இப்போதைய பணியில் இருந்து விலகி, வேறு வேலைக்குச் செல்லலாமா?' என்று சிந்திப்பீர்கள். கடன் சுமையின் காரணமாக, வாங்கிய சொத்தை விற்க நேரிடும். தடைகளையும், தடுமாற்றத்தையும் சந்திக்கும் நேரம் இது.
கடக - புதன்
ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்தில் சூரியனோடு இணைவது யோகம்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் ஆலோசனையை, உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். வீடு மாற்றமும், இடமாற்றமும் வெகுவிரைவில் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, நல்ல பொறுப்புகள் வந்துசேரும். அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். 'நீண்ட தூரத்தில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். மன நிம்மதி குறையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 23, 24, 27, 28, ஆகஸ்டு: 3, 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
துலாம்
2025 ஆனி மாத ராசிபலன்
காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் துலாம் ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். மேலும் உங்கள் ராசியையும் அவர் பார்க்கின்றார். எனவே இம்மாதம் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். விவகாரங்கள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் உயரும். கொடுக்கல் - வாங்கல்களை இப்பொழுது சரிசெய்து கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். எடுத்த முயற்சிகளில் இதுவரை இருந்த தடை அகலும். சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரமிது.
கடக - புதன்
ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். புதிய முதலீடுகள் செய்து தொழிலை விரிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கைகூடும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை இப்பொழுது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வர். சுயமாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். நட்பால் நன்மை கிடைக்கும் நேரமிது. ஒருசிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் உருவாகும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் இருப்பவர் சுக்ரன். அவர் அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் பயப்பட வேண்டாம். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அசுர குரு மறைவிடத்திற்கு வரும்பொழுது உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்கும் முயற்சி கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அயல்நாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அது நிறைவேறும். உற்சாகத்தோடு பணிபுரியும் நேரமிது.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை, சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் மீது செவ்வாய் பார்வை பதிவது அவ்வளவு நல்லதல்ல. எதிர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். லாபத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லைகளும், ரண சிகிச்சைகளும் ஏற்படலாம். மூட்டுவலி, முழங்கால் வலி போன்றவைகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் சனி மற்றும் அங்காரக வழிபாடு துயரத்தை போக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்துசேரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சு முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
இம்மாதம் அபிராமி அம்மன் வழிபாடு அனுகூலம் தரும்.
துலாம்
2025 சித்திரை மாத ராசிபலன்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் குரு வீட்டில் சகாய ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறார். எனவே இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆயினும் அஷ்டமத்தில் குரு இருந்து சஞ்சரிப்பதால் அதிக விரயங்கள் உருவாகும். வரவு ஒரு மடங்கு வந்தால் விரயம் இரு மடங்காகும். இதுபோன்ற நேரங்களில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பகை கிரகமான குருவின் வீட்டில் பரிவர்த்தனை பெறும் பொழுது, நினைக்க இயலாத நிகழ்ச்சிகள் நடைபெறும். திடீரென பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். வீடு மாற்றம், நாடு மாற்றம் விருப்பம் போல அமையும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்வீர்கள்.
கும்ப- ராகு, சிம்ம -கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்றோ, பணிபுரிய வேண்டும் என்றோ முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.
மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். ஆயினும் அனுகூல தலங்களுக்குச் சென்று முறையாக சர்ப்பக் கிரக வழிபாடுகளை மேற்கொண்டால் தடைகள் தானாக விலகும்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அங்குள்ள சூரியனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். கணவனும், மனைவியும் வேறு வேறு இடங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தால், இப்போது இடமாற்றம் கிடைத்து ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பு உருவாகும். கல்யாண முயற்சிகள் கைகூடும். கட்டிடம் கட்டி முடித்து கிரக பிரவேசம் வைப்பது போன்ற வாய்ப்புகள் அமையும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அவரது பார்வை பலனால் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மனக்கசப்பு மாறி மகிழ்ச்சியோடு உதவிசெய்வர். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேரும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். வரன்கள் வாசல்தேடி வரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வரும். நல்ல சந்தர்ப்பங்களை சந்திக்கும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய பாதை புலப்படும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 15, 16, 17, 22, 23, மே: 1, 2, 6, 7, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
துலாம்
2025 பங்குனி மாத ராசிபலன்
நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருந்தாலும் அவர் வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் உருவாகும். மருத்துச் செலவுகள் உண்டு. உங்கள் ராசிநாதன் சுக்ரன், சூரியனோடு இணைந்திருப்பதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
இந்த நேரத்தில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதன் மூலம் விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளலாம்.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியானவர் புதன் என்பதால், அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். நெருக்கடி நிலை அகலும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். 9-ம் இடத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால், முன்னோர் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் தாமதம் ஏற்படும்.
தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனப்பழுதுச் செலவை முன்னிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் சூழ்நிலை அமையும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உறுதியாகலாம். வரும் மாற்றங்கள் திருப்தி அளிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன், வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 5-ம் இடத்திற்கு வருவதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கோ உறுதுணையாக இருப்பீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரம் அஷ்டமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், சுபவிரயங்கள் அதிகரிக்கும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த காலத்தில் வாங்கிய கடன் சுமை தீர, இடம், பூமியை விற்க முன்வருவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
கடக - செவ்வாய்
உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பங்குனி 24-ந் தேதி கடக ராசியில் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை வந்து கொண்டேஇருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மூட்டு வலி, முழங்கால் வலி என்று சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். குடும்பச் சுமை கூடும். உறவினர் பகை உருவாகலாம்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பார்த்த லாபம் ஓரளவே கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு போட்டிக்கு மத்தியில் பயணம் தொடரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்றிருப்பது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 19, 20, 21, 27, 28, ஏப்ரல்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
துலாம்
2025 மாசி மாத ராசிபலன்
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்படும் துலாம் ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் இனி படிப்படியாக அகலும். உத்தியோகம், தொழிலில் நீங்கள் செய்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரலாம். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் உருவாகும். இருப்பினும் உற்சாகத்துடன் செயல்பட்டு மற்றவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளின் வேலை வாய்ப்புக் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு லாபாதிபதியானவர் சூரியன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியோடு சேர்கிறார். அதோடு சூரியன், தன் வீட்டைத் தானே பார்க்கிறார். எனவே பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலை, இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தால் உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பலம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகும். பணம் தொடர்பாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.
மனதில் உதித்த நம்பிக்கைகள் எல்லாம் நடைபெறும் நேரம் இது. உத்தியோகத்தில் மாற்றங்கள் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். தனித் தனியாக விலகி பணிபுரிந்த தம்பதியருக்கு, இப்பொழுது ஒரே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கைகூடி வரும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதி நீச்சம் பெறும் இந்த நேரம் நல்ல நேரம்தான். விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும்.
வீடு மாற்றம் மற்றும் இடமாற்றம் திருப்தி தரும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இக்காலத்தில் பெருமாள் - லட்சுமி வழிபாடு நன்மைகளை வழங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி இடமாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் அன்பும், பாசமும் பெருகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 21, 22, 26, 27, மார்ச்: 8, 9, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
துலாம்
2025 தை மாத ராசிபலன்
எல்லோரிடமும் எளிதாகப் பழகும் துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பஞ்சம ஸ்தானத்தில் பலம்பெற்ற சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே நல்ல காரியங்கள் பலவும் இம்மாதத்தில் நடைபெறும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பக்தி மிகுதியால் புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரம் ஏற்ற இறக்கநிலையில் இருக்கும். சில காரியங்கள் கடைசி நேரத்தில்தான் கைகூடும். என்ன இருந்தாலும் இனம்புரியாத கவலை மேலோங்கும். 'மனதில் நினைத்ததை செய்து முடிக்க இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். கோபத்தின் காரணமாக பல நல்ல காரியங்களை இழக்க நேரிடும். அங்காரக வழிபாடு அல்லல் தீர்க்கும்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பாக்கிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்திற்கு வருவதால், ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழிலுக்கு பெற்றோர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். சிறிய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு அகலும்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது, பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் கல்யாணம், காதுகுத்து, மணிவிழா, கட்டிடத் திறப்பு விழா நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். வரும் நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய இனிய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானம் திருப்தி தரும்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலத்தில் கொஞ்சம் கவனமாகவே செயல்பட வேண்டும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் என்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென எண்ணங்கள் மாறும். ஆரோக்கியச் சீர்கேடுகள் அதிகரிக்கலாம். அதிகார வர்க்கத்தினரால் தொல்லை ஏற்படும். ஒரு சில காரியங்களில் 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். கலைஞர்களுக்குத் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம்பெற எடுத்த முயற்சி பலன்தரும். பெண்களுக்கு எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு. பொருளாதாரம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 23, 24, 25, 30, 31, பிப்ரவரி: 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
துலாம்
2024 மார்கழி மாத ராசிபலன்
மற்றவருக்கு மதிப்பு கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது வக்ர குருவின் பார்வை பதிகிறது. எனவே இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும்.
பகைக்கிரகம் வலிமையிழந்து பார்க்கும் பொழுது நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திரவிய லாபமும், திடீர் முன்னேற்றமும் உண்டு. வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். நினைத்ததைச் செய்து முடிக்கும் வல்லமை பெற்ற கிரக அமைப்பு உள்ளது.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்கு சென்றபிறகும் கூட செவ்வாயின் பார்வை அவர் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தனாதிபதியான அவர், உங்கள் ராசிநாதனைப் பார்ப்பது அற்புதமான நேரமாகும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும்.
நீடித்த நோய் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறுவதோடு ஆதாயம் தரும் தகவல்கள் நிறைய கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நேரம் இது. புனிதப் பயணம் செல்வீர்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும்.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான். 6-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகிய மூன்றில் இருந்தும் விடுபடுவீர்கள். உதிரி வருமானங்கள் வந்துசேரும். நீண்ட நாளைய கடன் பாக்கியை செலுத்தி நிம்மதி அடைவீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
அகலக் கால் வைத்ததன் விளைவாக ஏற்பட்ட கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்கு செய்வீர்கள். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். நல்லது நடக்க நண்பர்கள் வழிகாட்டுவர். இக்காலத்தில் தேவ குரு (குரு பகவான்), அசுர குரு (சுக்ரன்) இரண்டின் வழிபாடும் தேவை.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.
இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். நாடு மாற்றம், வீடு மாற்றம் நிகழலாம். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாதியில் நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடிவடையும். உங்கள் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்ய ஸ்தானாதிபதியான அவர், சகாய ஸ்தானத்திற்கு வரும்போது நன்மைகள் அதிகம் நடைபெறும். பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைத்து, அதை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்துசேரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, நண்பர்கள் பக்க பலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 21, 22, 27, 28, ஜனவரி: 2, 3, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
துலாம்
2024 கார்த்திகை மாத ராசிபலன்
இனிமையாகப் பேசினால் எதையும் முடிக்கலாம் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்.
அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாக கிடைக்கும். 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். ஊர் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். தக்க விதத்தில் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்த இடத்திற்கு மாறுதல் வந்து நெஞ்சம் மகிழ வைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாய்தாக்கள் ஓயும்.
இழப்புகளை ஈடுசெய்ய புதிய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உள்ள சிலர், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வந்து 'சுயதொழில் செய்யலாமா?' என்று சிந்திப்பர். திருமண முயற்சி கைகூடும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இந்த முரண்பாடான கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே தன வரவில் தடுமாற்றம், இனத்தார் பகை, எதிர்காலத்தைப் பற்றிய பயம், ஆரோக்கிய குறை, பிள்ளைகளால் தொல்லை என்று அத்தனை வழிகளிலும் நிம்மதி இழக்கும் சூழ்நிலை உருவாகலாம். எனவே இதுபோன்ற காலங்களில் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் குறுக்கீடு சக்திகளை அகற்றும்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் மகரத்திற்கு வரும்பொழுது, இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளைக் கொடுப்பர்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வாகனங்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இது உங்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் காலமாகும். மனோபலம் குறையும். மதிப்பை தக்க வைத்துக்கொள்வது அரிது. வாங்கிய இடத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் வரலாம்.
பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் தடை வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண்களுக்கு நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும். நினைத்ததை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 19, 23, 24, 30, டிசம்பர்: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.






