search icon
என் மலர்tooltip icon

    துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    எதிலும் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் துலாம் ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். எனவே இதுவரை இருந்த தடைகள் அகலும். தேவையற்ற பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க வழிசெய்வீர்கள். மனோதிடம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், அர்த்தாஷ்டமச் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்பதால் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நிலைப்படுத்திக் கொள்வது நல்லது. எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்வதன் மூலமே, நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆகாரக் கட்டுப்பாடு களாலும், அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ளலாம்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வருகின்றார். அங்கிருந்தபடி விரயாதிபதியான புதன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். பரம்பரைச் சொத்துக்களில் சிலவற்றை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். புதிய நட்பால் பொருள் இழப்பு ஏற்படும் என்பதால், பழகுபவர்கள் சொல்லும் முடிவை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் கிடைக்காது. அருகில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், 8-ல் சஞ்சரிக்கும் பொழுது இடையூறுகள் அகலும். 'எப்படி முடியுமோ' என்று நினைத்த காரியம் எளிதில் முடியும். சவாலான வேலைகளைக் கூட, சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி சிறுசிறு தொல்லைகள் வரலாம். ஜீரணத் தொல்லை ஏற்படாமல் சீராக உடலை வைத்துக்கொள்ளுங்கள். இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை இனிமையாகவே அமையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்து லாபத்தை பெருக்கிக்கொள்ள எடுத்த முயற்சி கைகூடும். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு போட்டி, பந்தயங்களில் பங்கேற்று பரிசு பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு உறவினர்களின் உதவி கிடைத்து, உள்ளம் மகிழும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் புதிய பாதை அமையும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    இம்மாதம் திருமால் வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 17, 18, 29, 30, ஏப்ரல்: 3, 4, 8, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    நீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத் தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக் கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி வரலாம். மருத்துவச் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், இன்பமும், துன்பமும் மாறி மாறி வரலாம். இன்பத்தை மட்டுமே எதிர்கொள்ள நினைப்ப வர்கள், அதற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. 'ஆறில் குரு ஊரில் பகை' என்பார்கள். எனவே மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறுவது ஒரு அற்புதமான நேரமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதை கண்முன் தெரியும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவோடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கிணங்க எதிர்பாராத விதத்தில் நற்பலன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியப் பேச்சு கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். வாகன யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு சிலருக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பகையான நண்பர்கள் மீண்டும் இணைவார்கள்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போவதால், இந்த காலகட்டத்தில் மிகமிக கவனத்தோடு இருப்பது நல்லது. உடல்நலத்தில் பிரச்சினைகள் வரலாம். உறவினர் பகை உருவாகும். கடன் சுமை அதிகரிக்கும். வீண் விரயங்களும், வீடு மாற்றமும், உத்தியோக மாற்றமும் திடீரென வந்துசேரலாம். கட்டிடம் கட்டும் முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.

    இம்மாதம் விநாயகப்பெருமான் வழிபாடு வெற்றியை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 15, 19, 20, மார்ச்: 2, 3, 6, 7, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    கவர்ச்சியாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் துலாம் ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே நேரம் செவ்வாய், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், அதிக விரயங்களும் ஏற்படலாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பணிகள் பாதியிலேயே நிற்கும் நிலை உருவாகும்.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். பாக்கிய ஸ்தானாதிபதி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. உற்றார், உறவினர்களின் பகை உருவாகும். ஊர் மாற்றம், பூர்வீக சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் திருப்திகரமாக அமையாது. தொழிலில் கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். வாகனப் பழுதுகளால் வாட்டமும், வளர்ச்சியில் தளர்ச்சியும் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் நீங்கள் செய்த முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம். பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுங்கள்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கும், 8-ம் இடத்திற்கும் அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு வரும் சுக்ரனால் ஒருசில நல்ல வாய்ப்புகள் வரலாம். சுக ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் சென்றாலும் வேறு வழியில் ஆதாயம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். பெண் பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்குவீர்கள்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் விரயங்கள் கூடும். வீடு மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை, உங்கள் தகுதிக்கும், தன்மைக்கும் ஏற்ப நடைபெறும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். பெற்றோரின் மணிவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள் பகை மறந்து செயல்படுவர். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவது பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய், களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். எனவே பொருளாதாரப் பிரச்சினை அகலும். அருளாளர்களும், அனுபவஸ்தர்களும் சொல்லும் ஆலோசனைகள் அவ்வப்போது கைகொடுக்கும். பற்றாக்குறை நீங்கி பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். அதே நேரத்தில் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படும். சொத்துக்களை விற்க வேண்டிய நிலை உருவாகும்.

    சப்தமாதிபதியாக செவ்வாய் விளங்குவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அந்த நிலை மாறும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். அதன் மூலமாக ஆதாயம் தரும் தகவலும் வந்துசேரும். இடம் வாங்குவது, கட்டிடம் கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.

    இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைத் தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 21, 22, 26, 27, ஜனவரி: 6, 7, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    வழிபாடே வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் செவ்வாய்- சனி பார்வை உள்ளது. எனவே மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். ஆரோக்கியத் தொல்லைகளும், அதிக விரயங்களும் ஏற்படும்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. இக்காலத்தில் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்தாலும் அதை உடனடியாக மருத்துவ ஆலோசனை மூலம் நிவர்த்தி செய்து கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருசிலருக்கு குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினைகள் வரலாம்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும். புத-சுக்ர யோகம் ஏற்படுவதால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அரசாங்க ஆதரவு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட சரிவுகளை அகற்ற எடுத்த புது முயற்சி கைகூடும்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். தற்சமயம் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு வலிமைபெற்றது அர்த்தாஷ்டமச் சனி. அவரோடு ராசிநாதன் சுக்ரன் சேரும் பொழுது, விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள், இடமாற்றங்கள் போன்றவை வரலாம். யாரையும் நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க இயலாது.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். இக்காலம் உங்களுக்கு ஒரு இனிய காலமாக அமையும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை இப்பொழுது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஒப்பந்தங்களும் படிப்படியாக வந்து சேரும். அனைத்து யோகங்களும் வந்து சேர அபிராமி அம்மனை வழிபடுவோம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 3, 4, 5, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    எதையும் ஆராய்ந்து அறிந்த பிறகே செயல்படும் துலாம் ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வரப்போகிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக அமையும். செலவிற்கேற்ற வரவும் வந்து சேரும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை தேவை.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் ஐப்பசி 2-ந் தேதி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். ராசிநாதனும் பலம் பெறும் இந்தநேரம் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 'சுக்ரபலம் நன்றாக இருந்தால் வாகன யோகம் முதல் வருமானப் பெருக்கம் வரை நன்றாக அமையும்' என்பார்கள். அந்த அடிப்படையில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். அங்குள்ள சூரியன் சுக்ரனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும், 'புத சுக்ர யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்துசேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். ஆலயங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு, அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தனாதிபதியாகவும் விளங்குவதால் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வருமானத் தடை அதிகரிக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். எதையும் கொஞ்சம் பொறுமையோடு செய்வது நல்லது. அதோடு செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால், அர்த்தாஷ்டமச் சனி வலுவடைகின்றது. எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன், தன ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதார நிலை உயரும். என்றாலும் விரயங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொஞ்சம் செலவிடும் சூழ்நிலை உண்டு.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வரும் போது குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும். கடுமையாக உழைப்பதன் மூலமே காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி சிந்திப்பீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். அவர் ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம். எனவே குரு வக்ர நிவர்த்தியாகும் வேளையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிரிகளின் பலம் மேலோங்கும். லாபம் வருவது கையில் நிற்காமல் போகலாம். கடன்சுமை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கும். ஒருசிலருக்கு உத்தியோகத்தில் திடீர் இடமாற்றங்கள் வரலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 21, 22, 27, 28, 29, நவம்பர்: 3, 4, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை மனதில் பதித்து வைத்துள்ள துலாம் ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரயாதிபதி புதனுடன் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், செலவு இருமடங்காகும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் நீச்சம்பெறுவதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு குறையும். வீடு மாற்றங்களும், விரும்பத் தாகாத விதத்தில் அமையும். அதே நேரத்தில் அஷ்டமாதிபதி யாகவும் சுக்ரன் விளங்குவதால், ஒருசில காரியங்கள் எதிர்பாராத வகையில் நல்ல விதமாக முடியும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உச்சம்பெறும் பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி வெற்றி தரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வீட்டைப் பழுதுபார்ப்பது, விவசாயத்தைக் கவனிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். கடன்சுமை குறையும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.

    மிதுனச் செவ்வாய் மகரச் சனியைப் பார்ப்பதால், பய உணர்ச்சி ஏற்படும். இந்த காலகட்டத்தில் எதிர்மறை சிந்தனைகளை வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் வரும் திருமணப் பேச்சுக்கள் நிலையானதாக இருக்காது. நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருந்தாலும் ஒருசில ஏமாற்றங்களைச் சந்திக்கத்தான் வேண்டும்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். அப்பொழுது அர்த்தாஷ்டமச் சனி பலம்பெறுகிறார். எனவே எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. கட்டுப்பாட்டில் இருந்த கடன்சுமை கை மீறிச் செல்லும். அனுசரித்துச் செல்வதன் மூலமே, அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

    இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 19, 20, 23, 24, 30, அக்டோபர்: 1, 2, 5, 6, 16, 17.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதத் தொடக்கத்தில் பொருளாதாரம் திருப்தியாக இருந்தாலும், மாதத்தின் மையத்தில் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். அா்த் தாஷ்டமச் சனி பலம்பெறும் இந்த நேரத்தில், ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். பணிபுரியும் பெண்கள், பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் உருவாகும்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் துலாம் ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதிர்பார்ப்புகள் ஓரளவே நிறைவேறும்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில், மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிக்கிறார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஓரளவு நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பயணங்களால் பலன் உண்டு. பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானாதிபதி உச்சம் பெறுவதால் விரயங்கள் அதிகரிக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளுக்கு கொடுத்து உதவுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். விரயாதிபதி வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் இருப்பதால், தர்ம காரியங்களுக்கு செலவிடுவீர்கள். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு குறையும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனோடு இணைவதால் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணம் அதிகரிக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடிவரும் நேரம் இது. உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரலாம்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக உள்ளனர். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது யோகம்தான். புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்தவர்களுக்கு பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். சனியின் வக்ரத்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். விரயங்கள் குறையும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழில் வளம் சிறக்கும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்திப் பார்ப்பீர்கள்.

    இந்த மாதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 23, 24, 27, 28, செப்டம்பர்: 2, 3, 4, 8, 9

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    பெண்களுக்கான பலன்கள்

    குரு மற்றும் சனியின் வக்ர இயக்கம் உங்களுக்கு நன்மையைத் தரும். எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். பொருளாதார நிலை உயரும். கணவன் -மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் படிப்பு மற்றும் சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், இன்னும் பிற சலுகைகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் நிதானமாகச் செய்வதன் மூலம் வெற்றி வந்துசேரும்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    வாய்ப்பைத் தேடிச் சென்றால்தான் வெற்றிகாண இயலும் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு வேலை கைகூடலாம்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். தொழிலை விரிவு செய்யமுயற்சிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பப் பிரச்சினை குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகமாகும். அந்த குரு, வக்ரமாக இருக்கையில் உடன்பிறப்புகளுடன் மோதல் உருவாகலாம். வழக்குகள் உங்களுக்கு எதிராக திரும்பலாம். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். தொழிலை மாற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குரு பகவான் 6-க்கு அதிபதியாகவும் விளங்குவதால் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். பிற நிறுவனங்களில் இருந்து அதிக ஊதியத்துடன் அழைப்பு வரலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அதை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிரிகள் பலம் குறையும். புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு செவ்வாய் வருவதால், ஆரோக்கியத்தில் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. இடமாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வந்து சேரும். 'யாரையும் எளிதில் நம்ப முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள்.

    இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் உமாமகேஸ்வரரை வழிபடுவதன் மூலம் உயர்வு காணலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 26, 27, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 8, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் அா்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெற்றிருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் சுபகாரியங்கள் முடிவாகும். உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். அலுவலகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். சனி ஆதிக்கம் இருப்பதால் அனுமனை வழிபடுங்கள்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    நினைத்ததை நினைத்தபடி செய்ய நினைக்கும் துலாம் ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெற்று செவ்வாயைப் பார்க்கிறார். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெற்று செவ்வாயைப் பார்க்கிறார். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப நல்ல முன்னேற்றங்கள் வந்து சேரும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பூர்வீக சொத்துக்கள் அல்லது புதிய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தனது சொந்த வீடான மேஷத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். இடம், பூமியால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபநிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடந்தேறும். பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் தொழில் ஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பணவரவு திருப்தியாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதை முன்னிட்டும் இடமாற்றம் வரலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு ஆனி 29-ந் தேதி வருகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அதிலும் புதன் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த சலுகைகள் கிடைக்கும். தேங்கியிருக்கும் காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 17, 18, 19, 28, 29, ஜூலை: 3, 4, 5, 10, 11, 12, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளம்சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறுவதால் ஓரளவு நன்மை கிடைக்கும். இனிமை தரும் விதத்தில் இடமாற்றம் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். மேஷ - செவ்வாயின் சஞ்சார காலத்தில், உங்கள் எண்ணங்கள் ஈடேறும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    துலாம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    அன்பாகப் பேசி அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் 'விபரீத ராஜயோகம்' அடிப்படையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்திற்கு செல்லும்பொழுது சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மகத்தான பலன் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் இருக்கும் சனி பார்க்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தன -சப்தமாதிபதி செவ்வாயைப் பார்க்கும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாகும் பொழுது வாகன யோகம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். சுப காரியம் நடை பெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. சுகக்கேடு அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். இதுபோன்ற காலங்களில் முறையான வழிபாடு அவசியம். வீண் விரயங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி நிலவும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    இம்மாதம் பட்டாபிஷேக ராமர் படத்தை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, ஜூன்: 1, 2, 6, 7, 12, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வது நல்லது. அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் பலன் தரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகலாம். எதிர்பார்த்த சம்பள உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் கவனம் தேவை.

    ×