என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மிதுனம்
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம்.ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் வக்ரம். லாப ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் அதிக நன்மையைத்தரும். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்ததை ஈடுகட்டுவீர்கள். சொந்த வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சிலர் புதியதாக சுய தொழில் துவங்கலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் அல்லது கூட்டுத் தொழில் துவங்க லாம். வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் வழி இருந்த விரக்தி மன இறுக்கங்கள் மாறும்.
விவசாயி களுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும். ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வைத்தியம் பலன் தரும்.திருமண முயற்சி நிறைவேறும். 3.4.2024 அன்று அதிகாலை 4.37 முதல் 5.4.2024 அன்று காலை 7.12 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தாலும் இனம் புரியாத பய உணர்வும் இருந்து கொண்டே இருக்கும். நவகிரக புதனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்