என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மகரம்
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
சாதகமான வாரம். 2-ம் இடத்தில் சனி, செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பெரிய சொத்துப் பிரச்சினையில் மாட்டியவர்கள் அதிர்ஷ்ட வசமாக தப்பிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே புரிதல் உண்டாகும். செவ்வாய் கும்பத்தை கடக்கும் வரை வீண் வாக்குவாதங்கள், விவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. அதுதான் எல்லா பிரச்சினை களுக்கும் அருமருந்து. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் இந்த வாரத்தில் வசூலாகும்.
மகளின் திருமணத்திற்கு பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். அலுவலகத்தில் வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பு, பணிகளை முடிக்க சக ஊழியர்கள் உதவுவார்கள். வணிகர்களுக்கு இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக வியாபாரம் நடக்கும். அதிக லாபங்களால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். சிலர் பிள்ளைப் பேறுக்காக வைத்தியம் செய்வார்கள். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.கற்பக விநாயகரை வழிபட வளர்ச்சிகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)