search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    3.10.2022 முதல் 9.10.2022 வரை

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம். வெகு விரைவில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும். முதலீட்டாளர்களுக்கு வெளியூர், வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது.

    தம்பதிகள் கருத்து வேறுபாடு அல்லது உத்தியோக நிமித்தமாக குறுகிய காலம் பிரிவு உண்டாகும். 4-ல் கேது நிற்பதால் வீடுகட்டும் பணியில் சிறிய தொய்வு உண்டாக வாய்ப்புண்டு.சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம்.தொழிலை மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது

    6.10.2022 காலை 8.27 முதல் 8.10.2022 பகல் 11. 23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உண்மையில் எந்த குறை இல்லாவிட்டாலும் மனக்குறை, கற்பனை பயம் ஏற்படலாம். பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×