தொழில்நுட்பம்

ஜியோ வரவு எதிரொலி: டெலிநாரை வளைத்துப் போட்டது ஏர்டெல்

Published On 2017-02-23 08:36 GMT   |   Update On 2017-02-23 08:36 GMT
இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் டெலினார் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
மும்பை:

ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் டெலினார் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதற்கான தொகை என்ன என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.



ஐடியா நிறுவனத்தை 12 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கவுள்ளதாக வோடபோன் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News